சனி, 8 ஆகஸ்ட், 2015


அனுதினமும் கடைப்பிடிக்க பத்து கட்டளைகள்



அனுதினமும் கடைப்பிடிக்க பத்து கட்டளைகள்
அனுதினமும் கடைப்பிடிக்க பத்து கட்டளைகள்

1.ஒன்றை செய்யுங்கள்:
பின்னானவைகளை மறந்து, முன்னானவைகள் நாடு (பிலி 3:13 - 20)
2. இரண்டையும் விட்டுவிடாதிருங்கள்
கிருபையும், சத்தியமும் (நீதி 3: 2 - 3)
3. மூன்றில் நிலைத்திருங்கள்:
விசுவாசம், நம்பிக்கை, அன்பு (1கொரி 13:`13)
4. நான்கையும் தரித்துக் கொள்ளுங்கள்:
இயேசு கிறிஸ்து, ஒளியின் ஆயுதங்கள், புதிய மனுஷனை, நீடிய பொறுமையை (ரோமர் 13:14, எபே 4:24, கொலோ3:12)
5. ஐந்தையும் அழித்துப் போடுங்கள்:
விபச்சாரம், அசுத்தம், மோகம், துரிச்சை விக்கிரகாராதனை, பொருளாசை (கொலோ 3:5,6)
6. ஆறையும் வெறுத்து விடுங்கள்
மேட்டிமையான கண், பொய் நாவு, குற்றாமற்றவர்களுடைய இரத்தம் சிந்தும்கை, துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால், அபத்தம் பேசும் பொய்சாட்சி நீதி6:16 -19
7. ஏழையும் எடுத்துக் கொள்ளுங்கள்:
சத்தியம் என்னும் கச்சை, நீதியென்னும் மார்க்கவசம், சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சை, விசுவாசமென்னும் கேடகம் இரட்சணியமென்னும் தலைச்சீரா, தேவ வசனமாகிய ஆவியின் பட்டயம், ஜெபம் பண்ணி விழித்திருத்தல் (எபே 6: 13 - 18)
8. எட்டையும் விட்டுவிடாதீர்கள்
விசுவாசம், தைரியம், ஞானம், இச்சையடக்கம், பொறுமை, தேவபக்தி, சகோதர சிநேகம், அன்பு (2பேதுரு 1:5 - 9)
9. ஒன்பதையும் அனுபவமாக்குங்கள்:
(கலா 5:22 - 28) (அ)ஆவியின் கனிகள்: அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம். (ஆ) ஆவியின் வரங்கள்: ஞானத்தை போதிக்கும் வசனம், அறிவை உணர்த்தும் வசனம், விசுவாசம்,குணமாக்கும் வரங்கள், அற்புதங்களைச் செய்யும் சக்தி, தீர்க்கதரிசனம் உரைத்தல், ஆவிகளப்பகுத்தறிதல், பற்பல பாஷைகளை பேசுதல், பாஷைகளை வியாக்கியானம் பண்ணுதல்.
10. பத்தையும் பற்றிக் கொள்ளுங்கள்:

(மத் 22:35 - 40) கர்த்தருடைய கற்பனைகள்


http://tamilvetham1.blogspot.in/

அனுதினமும் கடைப்பிடிக்க பத்து கட்டளைகள்https://www.facebook.com/groups/tamilvetham/ https://www.facebook.com/tamilvetham1 https://www.facebook.com/tamilvetham2 http://tamilvetham1.blogspot.in/


வியாழன், 6 ஆகஸ்ட், 2015

இந்திய யூதர்கள்

இந்திய யூதர்கள்

ந்தியாவிலுள்ள யூதர்கள் பல்வேறு காலப்பகுதிகளில் இந்தியாவிற்குள் வந்தனர். சாலமோனுடைய காலத்திலிருந்தே இந்தியாவில் யூதர்கள் இருந்தார்களென்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் திட்டமாக கூறுகின்றனர். பிற்காலங்களில் வந்த யூதர்கள் இந்தியாவின் பல பாகங்களில் குடியேறினர். சிலர் வணிக நோக்கத்துடன் இந்திய வந்தார்கள். அதிகமானோர் அசீரிய சாம்ராச்சிய காலத்தில் சிறையிருப்பிலிருந்து தப்பியோடி பல தேசங்களை கடந்து இந்தியா வந்தடைந்தவர்கள். சிலர் மதக்கலவரங்களினால் இந்தியா வந்தவர்கள்.....
கோச்சின் யூதர்: 2500 ஆண்டுகளுக்கு முன்பு வியாபார நோக்கத்துடன் இந்தியா வந்தவர்கள் (கேரளா)
பெனே இஸ்ரவேல்: 2100 ஆண்டுகளுக்கு முன்பு மஹாராஷ்டிரா பிரதேசத்தில் குடியேறினர்.
பக்தாத் யூதர்கள்: ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு முன்பு அரேபியாவின் பல பாகங்களிலிருந்து வந்து குடியேறியவர்கள்.
பெனே மனாசே: மணிப்பூர், மிசோரம் பகுதிகளில் குடியேறிவர்கள்.
பெனே எப்ராயிம்: இவர்களை தெலுங்கு யூதர்கள் என்று அழைப்பர்.


(இந்த வரைபடம் அண்ணளவாகவே குறிப்பிட்டு காட்டப்பட்டிருக்கின்றது: உதாரணம் குஜராத்திலிருந்த யூதர்கள் பிற்காலங்களில் கல்கத்தா, பம்பாய் போன்ற நகரங்களில் குடிபெயர்ந்தார்கள்)

கோச்சின் யூதர்கள் (கேரள யூதர்கள்)
இவர்கள்தான் இந்தியாவுக்கு முதலில் வந்த யூதர்கள். இவர்கள் வியாபார நோக்கமாக இந்தியாவிற்கு வந்து, பிற்பாடு அங்கேயே குடியேறியவர்கள். 2500 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இந்தியா வந்து, அங்கே தங்களுக்கென்று ஒரு சங்கத்தினையும் அமைத்தனர்.  தற்பொழுது மிகவும் சிறியளவிலேயே இவர்கள் இப்போது இந்தியாவில் இருக்கின்றார்கள். 5000க்கும் அதிகமான யூதர்கள் இஸ்ரவேலுக்கு மீண்டும் சென்று விட்டார்கள். கோச்சின் என்பது கேரளாவிலுள்ள ஓர் பட்டணம். கேரளாவில் உள்ள சினாக்கோக் (யூதர்களுடைய ஜெப ஆலயம்) மிகவும் முக்கியம் வாய்ந்த ஒரு சரித்திரப்பின்னணியுள்ள ஒரு நினைவுச்சின்னமாகவுள்ளது.   இவர்கள் சாலமோனின் காலத்தில் வந்தவர்கள் என்று சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர், இன்னும் சில ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி: இவர்கள் பாபிலோனிய படையெடுப்பின்போது வந்திருக்கின்றார்கள். சில யூதர்கள்: தாங்கள் கி.பி 70 நூற்றண்டளவில் எருசலேம் தேவாலயம் இடிக்கப்பட்டபொழுது வந்தார்கள் என்று சொல்கின்றார்கள். 
இவர்களைக்குறித்து தமிழ் மொழியில் எழுதப்பட்ட இரண்டு செப்பு-தகடுகள் உள்ளன. இவைகளின் காலம் 4- 10 நூற்றண்டு. இந்த தகடுகள் தற்பொழுது கோச்சின் பரதேசி யூதர்களின் சினாக்கோக்-கில் உள்ளது.
இங்குள்ள யூதர்கள் தங்களை 3 வகுப்புக்களாக பிரித்து வைத்துகள்ளனர்.

கறுப்பு யூதர்கள் (மலபார் யூதர்கள்)
வெள்ளை யூதர்கள் (பரதேசி யூதர்கள்)
மண்ணிற யூதர்கள் (மெஷீராரிம் யூதர்கள்)

மலபார் யூதர்கள்: கோச்சின் யூதர்களில் 85 சதவிகிதத்தினர் மலபார் யூதர்கள் ஆவர். இவர்கள் தான் முதன் முதலில் கோச்சின் வந்தவர்கள். இவர்களை கறுப்பு யூதர்கள் என்றும் அழைப்பர். கோச்சினில் தற்பொழுது மலபார் யூதர்கள் யாருமில்லை. 1972ம் ஆண்டளவில் கடைசி யூதர்கள் இஸ்ரவேலுக்கு குடிபெயர்ந்தார்கள் இவர்கள் எபிரேய மொழியும் மலையாளம் கலந்த மொழியும் கலந்து பேசுகின்றனர்.
பரதேசி யூதர்கள்: பரதேசி யூதர்கள் சிலசமயங்களில் வெள்ளை யூதர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் கி.பி 16ம் நூற்றாண்டளவில் ஸ்பெயின், போர்த்துக்கீசு, மற்றும் எஞ்சிய ஐரோப்பிய நாடுகளிலி;ருந்து குடியேறியவர்கள். கோச்சின் யூதர்களில் இவர்கள் 14 சதவிகிதம். பரதேசி யூதர்களும், மலபார் யூதர்களும் சேர்ந்து ஆராதனைகள் செய்ய மாட்டார்கள்.
மெஷீராரிம் யூதர்கள்: இவர்கள் பரதேசி யூதர்களினதும், மற்றும் மலபார் வியாபாரிகளினதும் கொத்தடிமைகள். பிற்பாடு யூத மதத்திற்கு மாற்றப்பட்டவர்கள். கோச்சின் யூதர்களில் இவர்கள் 1 சதவிகதத்தை விட குறைவில் தான் உள்ளனர். 20ம் நூற்றாண்டு வரைக்கும் யூதர்களுடைய ஜெப ஆலயங்களில் இவர்கள் செல்வது தடை செய்யப்பட்டு இருந்தது.
தற்பொழுது 20 வெள்ளை யூதர்கள் தான் (மிகவும் வயது சென்றவர்கள்) கோச்சினில் வாழ்கின்றனர். 5000க்கும் அதிகமானோர் இஸ்ரவேலில் குடியேறியுள்ளனர். அமெரிக்காவிலும், மற்றும் இங்கிலாந்திலும் சிறியளவில் இவர்கள் இருக்கின்றனர்.
1901ம் ஆண்டு தியோடர் ஹேர்சலுக்கு கோச்சின் யூதர்கள் கடிதம் எழுதி, சியோன் இயக்கத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். 1923ம் ஆண்டில் சீயோன் இயக்கம் கோச்சினிலும் ஆரம்பிக்கப்பட்டது.
 
cochin-temples
கேரளாவிலுள்ள யூதர்களின் சினாக்கோக் (ஜெப ஆலயங்கள்)
 
cochin_jewish_inscription
 பரதேசி சினாக்கோக்-இல் சுவரில் பதிக்கப்பட்ட எபிரேய எழுத்துக்கள்

பெனே இஸ்ரவேலர்கள் (இஸ்ரவேல் புத்திரர்கள்)
சரித்திர ஆசரியர்களின் கருத்துப்படி: பெனி இஸ்ரவேலர்கள் ஏறக்குறைய கி.பி 2ம் நூற்றண்டளவில் கலிலேயாவிலிருந்து வெளியேறி இந்தியாவிற்கு வந்து குடியேறியவர்கள். அநேகமானோர் மும்பாயில் வாழ்ந்து வந்தார்கள். 18- 19ம் நூற்றாண்டுகளில் இவர்கள் மகாராஷடி;ரா பிததேசத்திலும், அதன் அண்மைகளிலும் வசித்து வந்தனர். 19ம் நூற்றண்டளவில் மும்பாய், பூனா, அகமதபாத், மற்றும் கராய்ச்சி ஆகிய பட்டணங்களில் குடியேறினர். கராய்ச்சி பிற்பாடு பாகிஸ்தானுடன் இணைந்து கொண்டதால் இவர்களை பாகிஸ்தான் இஸ்ரவேலர்கள் என்றும் அழைத்தனர். இவர்கள் மத்தியில் சபாத், விருத்தசேதனம், மற்றும் வேதாகமத்தின் கட்டளைகள் ஆகியன முக்கிய சிறப்பம்சங்கள்.
இவர்கள் எபிரேயு கலந்த மராத்தி மொழியினை பேசி வருகின்றனர். 1948க்கு பிற்பாடு அநேக பெனி இஸ்ரவேலர்கள் தற்பொழுது இஸ்ரவேலுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இவர்கள் தங்களை ஆரோனின்(மோசேயின் சகோதரன்) வம்சா வழியினர் என்று அழைக்கின்றனர். இவர்களுடைய DNA-யும் அதை உறுதிப்படுத்துகின்றது.
இவர்களின் மொத்த தொகை 65.000க்கும் மேலே. இதில் ஏறக்குறைய 60.000 ஆயிரம் பெனி யூதர்கள் தற்பொழுது இஸ்ரவேலில் வசிக்கின்றனர். மும்பாயில் 4000, கல்கத்தா200, டெல்லி 200, அகமதபாத் 200......... மற்றும் ஏனைய ஆங்கிலம் பேசும் நாடுகளில் ஏறக்குடைய 2000ம் பேரும் வசிக்கின்றனர்.
 
bene-israel
ஒர்லே இஸ்ரவேல் சினாக்கோக் - நந்காவோன்-பொதேல் சினாக்கோக் - ரிவ்தந்தா

பக்தாத் யூதர்கள்:
இவர்கள் 18ம் நூற்றண்டின் கடைசிப்பகுதியில் அரேபிய நாடுகளிலிருந்து மத-கலவரத்தினால் துரத்தப்பட்டு இந்தியாவில் வந்து குடியேறியவர்கள். இவர்களை பக்தாத் யூதர்கள் என்று அழைத்தாலும், இவர்கள் சீரியா, ஈரான், யேமன், மற்றும் ஈராக்கின் வேறுபகுதிகளிலுமிருந்து வந்தவர்கள். இவர்களில் அதிகமானோர் பக்தாதியர்களாக இருந்தபடியினால் இவர்கள் பக்தாத் இஸ்ரவேலர்கள் என்று அழைக்கப்பட்டனர். சில சமயங்களில் இவர்களை ஈராக்கிய யூதர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்களில் அதிகமானோர் இந்தியா வருமுன்பே வியாபாரிகளாக இருந்தனர், அதன் காரணமாக இவர்கள் இந்தியாவின் முக்கிய வர்த்தக நகரமாகிய சூரத்-திலே குடியேறினர்(சூரத் - தற்போதைய குஜராத்). பிற்காலங்களில் மும்பாய் மற்றும் கல்கத்தா முக்கிய வர்த்தக நகரங்களாக விளங்கியபடியால் அவர்களும் அங்கே குடிபெயர்ந்தார்கள்.
ஒரு சில பக்தாத் யூதர்கள் சிறிய துணிக்கடைகள் போன்று வைத்திருந்தாலும், மற்றவர்கள் பெரிய வர்த்தகர்களாகவே இருக்கின்றனர். அநேகருக்கு சொந்தமாகவே தொழிற்சாலைகள் உள்ளன. அதிகமாக இவர்கள் நெசவு தொழிற்சாலைகளை வைத்திருக்கின்றார்கள். இவர்கள் தாங்கள் இருந்த இடங்களில் அநேக வைத்தியசாலைகள், பாடசாலைகள், மற்றும் வாசகசாலைகள் போன்றவற்றை கட்டியிருக்கின்றார்கள்.
அநேக பக்தாத் யூதர்கள் தங்கள் சொந்தமொழியை விட்டு ஆங்கிலேய மொழியை தங்களுடைய முதன் மொழியாக பாவிக்கின்றனர், ஆங்கிலேய கலாச்சாரத்திற்கு உட்பட்டவர்களாக இவர்கள் வாழ்க்கை முறை காணப்படுகின்றது. இவர்களில் அநேகர் மிகவும் வசதியுள்ளவர்களாக இருந்தபடியினால் இவர்கள் இங்கிலாந்திலே குடிபுகுந்த பின்பும் மிகவும் உயர்ந்த நிலையிலே இவர்கள் வாழ்க்கை நிலை காணப்படுகின்றது. அதே சமயம் அநேக பக்கதாத்-யூதர்கள் தாங்கள் சென்ற இடங்களில் இந்திய கலாச்சாரத்தை விட்டுவிடாமல் இந்தியாவில் அவர்கள் வசித்து வந்ததைப்போன்று வசித்து வருகின்றனர். 1940ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 7000ம் பக்தாத் யூதர்கள் இருந்தார்கள். தற்பொழுது 50க்கும் குறைவாகவே உள்ளனர்.

பெனே மனாஷே (மனாசேயின் பிள்ளைகள்):
5000-7000க்கும் இடையிலான பெனி-மனாசே ஜனங்கள் இந்தியாவின் வடகிழக்கில் உள்ள மணிப்பூர் மற்றும் மிசோராம் பகுதிகளில் வாழ்கின்றனர். இவர்கள் காணமற்போன 10 கோத்திரங்களில் உள்ள ஒரு கோத்திரத்தின் ஜனங்கள் என்று கருதப்படுகின்றனர். இவர்கள் பார்வைக்கு சீனர்களை போலிருக்கின்றனர். ஆசீரியர்கள் காலத்தில் இவர்கள் தப்பியோடி சீனாவிற்குள் வந்துசேர்ந்தார்கள். பிற்பாடு பர்மா ஊடாக இந்தியாவின் பகுதிகளை வந்தடைந்தார்கள். இவர்களில் அதிகமானோர் மணிப்பூர் மற்றும் மிசோராம் பகுதிகளில் வசிக்கின்றனர்.
சரித்திரம்: சாலமோன் கட்டிய முதலாவது தேவலய காலத்தில் இஸ்ரவேல் இரண்டு இராச்சியங்களாக பிரிந்தது. ஒன்று தென் இராச்சியம் (யூதா) இதில்; யூதா, பென்யமின் மற்றும் லேவி கோத்திரத்தினர் வாழ்ந்து வந்தார்கள். மற்றது வட இராச்சியம். இதனை இஸ்ரவேல் என்று அழைத்தனர். இது எஞ்சிய 10 கோத்திரத்திற்கு உரியது. கி. மு 721ல் அசீரியர்கள் வட இராச்சியமான இஸ்ரவேலின் மீது போர் தொடுத்து அவர்களை அடிமைகளாக தங்கள் நாட்டுக்கு கொண்டு சென்று தங்கள் நாடுகளிலே குடியமர்த்தினார்கள்.
ஏறக்குறைய 2700 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் அசீரியாவிலிருந்து மேதிய,பெர்சியாவுக்குள் தப்பியோடி பின்பு ஆப்கானிஸ்தான், ஹிந்து குஷ், திபெத், கடைசியில் சீனாவை கி.மு 240ல் வந்தடைந்தார்கள்.
சீனாவிலும் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் அவர்கள் அங்கும் துரத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். கி.மு 100ம் ஆண்டளவில் அவர்களுடைய தோற் சுருள்கள் (வேதம்) பறித்து எரிக்கப்பட்டது. அவர்கள் துரத்தப்படுகையில் அங்குள்ள குகைகளில் ஒளித்துக்கொண்டார்கள். இந்தச்சந்தர்பத்தில் அநேகர் அங்கிருந்து பல நாடுகளுக்கு பிரிந்து சென்று விட்டார்கள். சிலர் தாய்லாந்து, வியாட்நாம், மலேசியா, பர்மா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு தப்பிச்சென்றனர். இன்னமும் இவர்களை குகைவாசிகள் என்று சிலர் அழைக்கின்றனர்.
தற்பொழுது இந்த இஸ்ரவேலர்கள் வேறு பெயரில் அழைக்கப்படுகின்றனர் (ஷின்லுங், குகி, மிசோ, லுசாய், மர்).
கி.பி 1894ஆம் ஆண்டளவில் கிறிஸ்தவ மிஷனரிமார்கள் மணிப்பூரில் ஊழியம் செய்வதற்காக வந்திருந்தனர், இவர்கள் அங்கு வாழ்ந்த மக்கள் மத்தியில் உள்ள பழக்க வழக்கங்களையும், அவர்கள் பாடிய பாடல்கள் மற்றும் அவர்களுடைய பின்னணி கதைகளையும் அவர்கள் பைபிளில் உள்ள சில கதைகளையும் தெரிந்து வைத்திருப்பதை பார்த்து அவர்களை மனாசே கோத்திரம் என்று சொல்வதைப்பார்த்தும் அடையாளம் கண்டு கொண்டனர். இவர்களில் சிலர் கிறிஸ்தவ மதத்தை தழுவிக்கொண்டனர்.

இவர்கள் மத்தியில் இதுவரைக்கும் அழியாமல் பாடப்பட்டு வரும் பாடல் ஒன்று: 
நாங்கள் பஸ்கா பண்டிகை கொண்டாடவேண்டும்
 
ஏனென்றால் நாங்கள் செங்கடலை கடந்து தரைக்கு வந்தபடியால்
இரவிலே நெருப்புடனும்
பகலிலே மேகத்துடனும் கடந்தோம்.
எதிரிகள் எங்களை இரதங்களினாலே துரத்திக்கொண்டு வந்தார்கள்
அவர்களை கடல் விழுங்கி விட்டது. அவர்கள் மீன்களுக்கு இரையாக்கப்பட்டார்கள்.
நாங்கள் தாகமாக இருந்தபோது
கன்மலையிலிருந்து எங்களுக்கு தண்ணீர் கிடைத்தது.

1951ம் ஆண்டு பெந்தேகொஸ்தே போதகரான ட்ச்சலா என்பவர் தனக்கு இறைவனிடம் இருந்து ஒரு தீர்க்கதரிசனம் கிடைத்ததாக சொன்னார். இந்த மக்கள் ஆர்மகெதோன் யுத்தம் வருமுன் இவர்கள் மீண்டும் தங்கள் சொந்த நாட்டிற்கும், மக்களிடத்திற்கும், சொந்த சமயத்திற்கும் திரும்பி போகவேண்டும் என்று கூறினார். இந்த கருத்தினால் 20 வருடங்களிற்கு பின்பு சில குகி ஜனங்கள் கிறிஸ்தவத்தை விட்டு தங்கள் சொந்த மதத்திற்கு தழுவினார்கள்.  இதன் மூலம் சிலர் யூதமதத்தை கற்கவும், நடைமுறைப்படுத்தவும் ஆரம்பித்தனர். பிற்பாடு இவர்கள் எருசலேமிலுள்ள சிலருடன் தொடர்புகொண்டு தங்கள் யூதமார்க்கத்தை சரியாக கடைப்பிடித்தனர்.
காலப்போக்கில் தற்பொழுது 5000க்கும் அதிகமானவர்கள் இந்தியாவின் வட-கிழக்கில் யூத சமயத்தை முழுமையாக கடைப்பிடித்து வருகின்றனர். குகி, மிசோ கோத்திரங்களினது ஜனத்தொகை கிட்டத்தட்ட 1, 5மில்லியன். இவர்களில் குறைந்தளவு ஜனங்களே தங்களை பெனி-மனாசே என்று கூறுகின்றார்கள். 300க்கும் அதிகமான பெனி-மனாசே ஜனங்கள் தற்பொழுது இஸ்ரவேலுக்கு திரும்பி சென்று அங்கே வாழ்கின்றனர். அநேகர் மீண்டும் இஸ்ரவேலிலே வாழ விரும்புகின்றனர்.
இங்கே நீங்கள் 49 பெனே-மனாசே யூதர்கள் இந்தியாவிலிருந்து இஸ்ரவேலுக்கு செல்வதை பார்க்கின்றீர்கள்.
nov213

nov22b1
இஸ்ரவேலுக்குள் வந்து சேர்ந்தபின்பு எடுத்த படம்

பெனே எப்ராயிம் (எப்ராயிமின் பிள்ளைகள்):
இவர்களை தெலுங்கு யூதர்கள் என்றும் அழைப்பர். காரணம்;: இவர்கள் தெலுங்கு பேசுவது. இவர்கள் மிகவும் சொற்பமானவர்களே. ஏறக்குறைய 300 பேர். ஆந்திரப்பிரதேசத்திலுள்ள குந்தூர் மாவட்டத்தின் கொத்தரட்டிப்பாலம் எனும் கிராமத்தில் இவர்கள் வசிக்கின்றனர். இவர்களும் காணமற்போன 10 கோத்திரங்களில் ஒன்றாகிய எப்ராயிம் கோத்திரத்தை சார்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்படுகின்றார்கள். இவர்கள் எபிரேயு- தெலுங்கு கலந்த ஒரு பாஷையை பேசிவருகின்றனர்.
19ம் நூற்றாண்டில் இவர்களும் பெனி-மனாசே கோத்திரத்தினரைப்போன்று கிறிஸ்தவ மதத்தை தழுவினார்கள். பிற்பாடு 1981ம் ஆண்டிலிருந்து ஏறக்குறைய 50 குடும்பங்கள் யூத மார்க்கத்தையும், அவர்களது மொழியாகிய எபிரேய மொழியையும் கற்று வருகின்றார்கள்.

 
ஆதாரங்கள்

புதன், 5 ஆகஸ்ட், 2015

முதல் உலகப்போர்

முதலாம் உலகப்போரின் இறுதி கட்டத்தில் இங்கிலாந்து இராணுவம் துருக்கியர்களிடமிருந்து இஸ்ரவேலை கைப்பற்றியது. கைப்பற்றியது என்று சொல்வதை விட மீட்டெடுத்தது என்று சொன்னால் அது மிகையாகாது. ஜெனரல் Sir Edmund Allenby அந்த போருக்கு தலமை தாங்கினார். 1917 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் காசா பட்டணத்தையும் , மார்கழி மாதம் எருசலேமையும் துருக்கியர்களின் 400 வருட ஆட்சியை முறியடித்து, கைப்பற்றினார்.

எருசலேமில் பிரவேசித்தல் Sir Edmund Allenby



முதலாவது உலகப்போர் சமயத்தில் பிரித்தானியர்களின் வாஞ்சை இஸ்ரவேல் எனும் தேசத்தை பலஸ்தீனத்தில் உருவாக்குவதாக இருந்தது. யூதர்களின் நாட்டை திரும்ப அவர்களுக்கு கொடுப்பது. இங்கிலாந்தின் வெளிநாட்டு அமைச்சர் Arthur James Bulfour இதில் முக்கிய பங்கு வகித்தார்.

Arthur James Bulfour அவர்கள் எழுதிய கடிதம்

Foreign Office
2nd November 1917
Dear Lord Rothschild:
I have much pleasure in conveying to you on behalf of His Majesty's Government the following declaration of our sympathy with Jewish Zionist aspirations which has been submitted to, and approved by, the Cabinet. "His Majesty's Government view with favour the establishment in Palestine of a National Home for the Jewish people, and will use their best endeavours to facilitate the achievement of this object, it being clearly understood that nothing shall be done which may prejudice the civil and religious rights of existing non-Jewish communities in Palestine, or the rights and political status enjoyed by Jews in any other country." I should be grateful if you would bring this declaration to the knowledge of the Zionist Federation.
Yours sincerely
Arthur James Balfour
SIR EDMUND ALLENBY

இஸ்ரவேலர்களுக்கு எதிராக இஸ்லாமியர்கள் முதலாம் உலகப்போருக்கு முன்பும் பின்பும்

சனி, 18 ஜூலை, 2015

ஏசாயா

“சீனீம் தேசத்திலிருந்து வருவார்கள்”-ஏசாயா தீர்க்கரின் துல்லியமான முன்னுரைப்பும் நிறைவேறுதலும்–

பூமியெங்கும் சிதறடிக்கப்பட்ட யூதர்கள் பூமியின் நாலா திசையிலிருந்தும் திரும்ப தேவ கிருபையினால் அதன் தேசத்திற்கு கூட்டிச்சேர்க்கப்படுவார்கள் என்று வேதத்தில் தீர்க்கதரிசிகளால ஏராளமான முன்னுரைப்புகள் உள்ளது, சில யூதர்கள் இப்போது உலக நாடுகளால் உண்ணிப்பாக கவனிக்கப்படுகிற நாடுகளான சீனா மற்றும் இந்தியாவில் பல காலமாக வாழ்ந்துவருகிற யூதர்கள் தங்கள் சொந்த நாடான இஸ்ரேலுக்கு வரத்துவங்கியுள்ளனர்.
சமீபத்தில் இஸ்ரேலில் உள்ள பென்குரியன் விமான நிலையத்தில் வந்திறங்கிய 7 சீன யூத ஆண்களை இஸ்ரேலிய யூத நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது, இவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்குரிய பயனத்தை துவக்குவதற்கு இவர்கள் 4 ஆண்டுகள் சட்ட சிக்கல்களை தாண்டி ஒரு வழியாக தங்கள் முற்பிதாக்களின் பூமியாகிய இஸ்ரேலுக்கு வந்து சேர்ந்துள்ளனர்.
தேவன் தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னறிவித்த விதமாகவே இன்றைக்கு எங்கள் சொந்தக் கண்கள் காண பூமியெங்கும் சிதறடிக்கப்பட்ட யூதர்கள், பூமியின் நாலா திசையிலிருந்தும் தங்கள் சுய தேசம் வந்துகொண்டிருப்பது அந்த தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் நிறைவேறி வருவதையே உறுதிப்படுத்துகிறது என்றார் மைக்கேல் ஃப்ருண்ட்(MICHAEL FREUND).

இந்த மைக்கேல் ஃப்ருண்ட் என்பவர் “ஷாவேய் இஸ்ரேல்(SHAVEI ISRAEL)” என்ற அமைப்பின் தலைவராக உள்ளார், சிதறிப்போன யூதர்களை மீண்டும் தங்கள் சொந்த தேசத்திற்கு கூட்டிச்சேர்க்கும் ஒரு அர்ப்பணிக்கப்பட்ட குழுவினரே இந்த ஷாவேய் இஸ்ரேல்

இப்போது இஸ்ரேல் வந்துள்ள இந்த சீன யூதர்கள் சைனாவிலுள்ள கைஃபெங்க்(KAIFENG) என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள், இந்தப் பகுதிக்கு இந்த யூத மக்கள் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வந்து குடியேறினர் என்றும், இவர்கள் பெர்சியா(ஈராக்) தேசத்திலிருந்து வெளியேறி சைனாவின் கைஃபெங்கில் குடியேறி இருக்கலாம் என்று வரலாற்று வல்லுனர்கள் கருதுகின்றனர்.

இவர்களுடைய மூதாதையர்கள் ஒரு காலக்கட்டத்தில் தங்கள் சுய தேசம் திரும்ப செல்லவேண்டும் என்று கனவு கண்டார்கள், அவர்களுடைய கனவு இந்த தலைமுறை சீன யூத ஆண்களால் நிறைவேறியுள்ளது. இவர்கள் தங்கள் சொந்த தேசத்திற்கு வந்ததினிமித்தமாக மிகுந்த சந்தோஷம் அடைந்துள்ளனர்.
அவர்களில் ஒருவரான ஜியூ சேய்(XUE ZEI),”இன்று, நாங்கள் மிக அதிகமாக சந்தோஷப்படுகிறோம், நாங்கள் மிக மிக மகிழ்சியாருக்கிறோம்(TODAY,WE MOST HAPPY, WE VERY, VERY SO HAPPY) என்று உணர்ச்சிப் பெருக்கோடு குறிப்பிடுகிறார்.
இவர்களைப் போல இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர் மற்றும் மிசோரம் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான பினேய் மனாசே யூதர்கள் இப்பகுதிகளில் இந்தியக் குடிமக்களாக உள்ளனர், இவர்களில் அனேகர் வாக்குதத்ததின் நாடான தங்கள் இஸ்ரேல் நாட்டிற்கு வரத்துவங்கியுள்ளனர், இந்தியாவிலிருந்து யூதர்கள் சுய தேசம் செல்வதைக் குறித்து ஏற்கனவே நம்முடைய ஜீவ ஊற்று இதழில் ஆதாரத்துடன் குறிப்பிட்டிருக்கிறதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன், (முந்தின இதழ்களை படிக்காதவர்கள் என்னுடைய இ-மெயிலில் தொடர்புகொண்டு pdf முறையிலான முந்திய இதழ்களை இலவசமாக பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன், மேலும் ஜீவ ஊற்று இணைய தளத்திலும் பழைய செய்திகளை இண்டர்நெட் மூலமாக படிக்கலாம், E-MAIL ID :dvimalansp123@gmail.com, / vimalanjeevavootru@yahoo.com,  WEB ADDRESS :www.jeevavootru.com).
இந்த சீன யூதர்கள் இஸ்ரேல் வந்து சேர்ந்த பின்பு “வெஸ்டர்ன் வால்” என்று சொல்லப்படுகிற மேற்கு சுவர் அல்லது புலம்பும் சுவர் பகுதிக்கு வந்து ஜெபம் செய்துவிட்டு, தங்கள் மூதாதையரின் தேசத்தில் புதிய வாழ்வை தொடங்கியுள்ளனர்.
இவர்கள் சைனாவிலுள்ள யூதர்களின் பிரதிநிதிகளாகவே இஸ்ரேல் வந்துள்ளனர், இன்னும் மீதமுள்ள 2000 சீன யூதர்கள் சீக்கிரத்தில் தங்கள் சுய தேசத்திற்கு திரும்பும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு சீக்கிரத்தில் வரும் என்று இதன் ஒருங்கினைப்பாளர்கள நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
கர்த்தர் தம் ஜனங்களைக் கூட்டிச்சேர்க்கிறார், அவர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தம் ஊழியர்களைக் கொண்டு முன்னுரைத்த வண்ணமே அதை திட்டமாக செய்து கொண்டு வருகிறார், அதுவும் மிகவும் துல்லியமாக சொல்லி அதை நிறைவேற்றி வருகிறார், இந்த நிகழ்வு துல்லியமாக முன்னுரைக்கப்பட்டது எப்படி என்று நீங்கள் கேட்கலாம், அதை தெரிந்துக்கொள்ளும் முன் அந்த தீர்க்கதரிசன வார்த்தையை முதலில் பார்க்கலாம்,
ஏசாயா 49:12 இதோ,இவர்கள் தூரத்திலிருந்து வருவார்கள்; இதோ, அவர்கள் வடக்கிலும் மேற்கிலுமிருந்து வருவார்கள், இவர்கள் சீனீம் தேசத்திலுமிருந்து வருவார்கள் என்கிறார்.
அதிசயிக்கும் வண்ணமாக சீனீம் என்பது சீனாவின் எபிரேய வார்த்தை என்பது குறிப்பிடத்தக்கது,
துல்லியமான வேதத்தின் முன்னுரைப்பு என்று நான் குறிப்பிட்டது சரிதான் என்பதை இப்போது புரிந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன், சிலர் எண்ணுகிறபடி வல்லரசுகள் உதவிசெய்கினறன, அதனால்தான் இஸ்ரேல் இருக்க முடிகிறது இல்லையானால் இஸ்ரேல் வரைபடத்தில் இல்லாமல் போய்விடும் என்கிறார்கள், ஒன்றை மாத்திரம் அவர்கள் ஏனோ யோசிக்கவில்லை, இறைவனுடைய சக்தியைக் காட்டிலும் பூமியின் வல்லரசுகள் பெரியவைகளோ?, இறைவனுடைய ஒத்தாசையினால்தான் இஸ்ரேல் இன்றைக்கு திரும்பவும் ஸ்தாபிக்கப்பட்டது என்று முழு மனதுடன் உணர்ந்து வேத வசனத்தை ஆராய்ந்து படிப்பீர்களானால் நிச்சயமாக எது சத்தியம் என்பதை அறிந்துக்கொள்வீர்கள், கர்த்தர் உங்களை நேசிக்கிறார்.  

“…இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுவார்”. ஏசாயா 11:12

இஸ்ரேலில் பல நூற்றாண்டுகளாக வற்றிப்போன ஆறு மீண்டும் தோன்றியுள்ள அதிசயம், வேதத்தின் திட்டமான நிறைவேறுதல்

 இஸ்ரேல்
இஸ்ரேல் என்ற ஒரு சிறிய தேசம் உலக வரலாற்றில் பல ஆச்சர்யங்களை உள்ளடக்கியுள்ளது, அவர்கள் மெய்யான ஒரே இறைவனுடைய வாக்குதத்தத்தின் பிள்ளைகள் என்பதை சில கூட்டத்தினர் நம்ப மறுத்து அவர்களை பகைக்கின்றனர், அவர்கள் இறைவனுடைய வாக்குதத்தத்தின்படி இன்றளவும் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர், வேறு எந்த ஒரு இனத்திற்கு எதிராகவும் இஸ்ரேலியருக்கு நேர்ந்ததுபோல பிரச்சனைகள் நேர்ந்திருந்தால் அப்படிப்பட்ட சந்ததி இன்று பூமியில் இல்லாமல் போயிருக்கும், ஆனால் இவர்கள் இன்றும் பூமியில் ஆசிர்வாதமாக வாழ்ந்து வருவது எதை காட்டுகிறது, அவர்களின் முற்பிதாவாகிய ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபுக்கு வாக்குதத்தம் செய்த தேவன் இன்றளவும் அவர்களுக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார், இனிமேலும் அவர் இருப்பார் என்பதையே காட்டுகிறது,
சரி இந்த செய்தியின் தலைப்பிற்குள்ளாக நாம் நுழைவோம், இஸ்ரேல் இன்றைக்கு வறண்ட பாலைவனங்கள் நிறைந்த மத்திய கிழக்கு ஆசியாவிலுள்ள ஒரு சிறிய தேசம், இந்த தேசத்தில் நீராதாரம் என்பதை பொருத்த வரையில் வறட்சியான இடம் என்றே சொல்ல வேண்டும், குடிநீருக்காக அவர்கள் கடல் நீரையே குடிநீராக்கி பருக வேண்டிய அவல நிலை உள்ளது, அது மாத்திரமில்லாமல், பருவ மழை பொழியும் காலங்களில் அந்த நீரை ஏரிகளாகவும் குழங்களாகவும் வெட்டி சேமித்து பயன்படுத்தி வருகின்றனர், இந்த தண்ணீர் பற்றாக்குறையினிமித்தமாகவே விவசாயத்திற்கு சொட்டு நீர் பாசன முறையை கண்டுபிடித்து மிகுந்த பயனடைந்ததோடு உலகிற்கும் அதை அறிமுகப்படுத்தினர், பொதுவாக மத்திய கிழக்கு நாடுகளில் குடிதண்ணீர் என்பது பெட்ரோலை விடவும் விலை அதிகம், அந்த வகையில் இஸ்ரேலிலும் தண்ணீர் பிரச்சனை இருந்து வருகிறது, இஸ்ரேலில் சில ஆறுகள் இருந்தாலும் யோர்தான் நதி மாத்திரமே செழிப்பான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது, அதிலும் கோடைக்காலங்களில் வறட்சி காணப்படும்.
இப்படிப்பட்ட நீர்வறட்சி நிறைந்த இந்த தேசத்தில், சில பல நூற்றாண்டுகளாக காணாமல் போயிருந்த ஆறு ஒன்று மீண்டும் தோன்றியுள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா?, ஆறு காணாமல் போகுமா? என்று எடக்கு மடக்கா கேக்காதீங்க, வற்றி வறண்டுப்போன ஆறு என்பதையே அப்படி குறிப்பிட்டேன், ஆம்! அந்த ஆறு இஸ்ரேல் எல்லையில் நேகேவ்(NEGEV OR NEGEB) வனாந்திரத்தில் உள்ள சீன் ஆறுதான், இந்த பெயரை எங்கேயோ படித்த ஞாபகம் வருகிறதே, என்று எண்ணுவீர்களானால் உங்கள் கணிப்பு சரியே, அது எங்கேயோ அல்ல அது பரிசுத்த வேதாகமத்தில்தான் உள்ளது என்று உறுதியாக சொல்பவர்களானால் உங்களுக்கு ஒரு சபாஷ், நிச்சயமாக இந்த ஆறு வேதாகம காலத்தில் காணப்பட்ட ஆறுதான், இந்த நெகேவ் வனாந்திரம் வேதாகம காலத்தில் சீன் என்ற அந்த ஆற்றின் பெயரிலே சீன் வனாந்திரம் என்றே அழைக்கப்படுகிறது, 

எகிப்தை விட்டு புறப்பட்ட இஸ்ரேலர் இந்த சீன் வனாந்திரத்தில் சில காலம் தங்கி அதன் பின் தங்கள் பயனத்தை தொடங்கினர் என்பதற்கு ஏராளமான வேத ஆதாரங்கள் உள்ளது, கானான் தேசத்தை வேவு பார்க்க சென்ற 12 வேவுக்காரர்களும் இந்த இடத்திலிருந்துதான் துவக்கினார்கள் என்று வேதம் எண்ணாகமம் 13:21 ல் குறிப்பிடப்பட்டுள்ளது,யாத் 16:1 ல் துவங்கி யோசுவா 15:1 வரை 12 இடங்களில் வேதத்திலே இந்த சீன் பற்றிய குறிப்பு பதிவுசெய்யப்ப்பட்டுள்ளது,

இந்த சீன் ஆறு மற்றுமொரு குறிப்பிடத்தக்க சிறப்பையும் பெற்றுள்ளது, அதென்னவென்றால் வேதாகம காலத்தில் இஸ்ரேல் தேசத்தின் எல்லையை குறிப்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று வேதத்தில் ஆதார குறிப்பு உள்ளது, யோசுவா 15:1 ல் “யூதா புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான பங்குவீதமாவது: ஏதோமின் எல்லைக்கு அருகான சீன் வனாந்திரமே தென்புறத்தின் கடையெல்லை” 
இந்த சீன் ஆறு பெயெர்செபாவிலுள்ள ரமோன் பள்ளத்தாக்கில் துவங்கி நேகேவ் வனாந்திரங்களை கடந்து சவக்கடலில் கலக்கிறது, இந்த சீன் ஆறு கி.பி 70 ல் இஸ்ரேலர் பூமியெங்கும் சிதறடிக்கப்பட்டபின் வறண்டு போனது, அந்த வனாந்திரத்தில் இப்படியொரு ஆறு ஓடினதற்கான வறண்ட ஆற்றுப்படுகையை மாத்திரமே கண்ட இன்றைய தலைமுறை யூதர்கள் அந்த இடத்தில் மீண்டும் தோன்றியுள்ள இந்த சீன் ஆற்றைக் கண்டு மிகுந்த குதூகலம் அடைந்துள்ளனர்,
இந்த ஆறு எப்படி இத்தனை நூற்றாண்டுகளுக்கு பின் இப்போது மீண்டும் தோன்றியிருக்கும் என்று பார்த்தால் சிலர் சொல்கின்றனர் பருவ மழையின் நிமித்தமாக இந்த ஆறு திரும்ப தோன்றியுள்ளதாக கூறுகின்றனர், ஆனால் இந்த கூற்றை நிபுணர்கள் ஏற்கவில்லை, ஏனென்றால், இந்த வனாந்திரப்பகுதியில் குறிப்பிட்ட மழைக்காலத்தில் ஏற்கனவே மழை பொழிந்துள்ளது ஆனால் அப்போதெல்லாம் தோன்றாத இந்த ஆறு இப்போதுமட்டும் எப்படி தோன்றியிருக்க முடியும், இந்த ஆறு மீண்டும் தோன்றியதற்கான காரணத்தை நிச்சயமாக உறுதிபடுத்தி கூற இயலவில்லை என்றே தெரிவித்துள்ளனர்,
நிபுணர்களுக்கு தெரியாத அந்த உண்மை பரிசுத்த வேதாகமத்தை உடையவர்களுக்கு நிச்சயமாக தெரியும், அதெப்படி சொல்றீங்க அப்படின்னு நீங்க கேட்பீங்க, கிபி 70 ல் சிதறடிக்கப்பட்ட இஸ்ரேலர் மீண்டும் அவர்கள் தேசத்தில் குடியமர்த்தப்பட்டபின் இப்படியாக ஆறு தோன்றும் என்று வேதத்தில் ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக திட்டமாக முன்னறிவித்துள்ளது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?,  தயாராகுங்கள் அந்த ஆதாரத்தை காண்பதற்கு, ஏசாயா43:19-21ல் “இதோ, நான் புதிய காரியத்தை செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா?நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.
நான் தெரிந்துகொண்ட என் ஜனத்தின் தாகத்திற்கு வனாந்தரத்திலே தண்ணீர்களையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவதினால், காட்டுமிருகங்களும், வலுசர்ப்பங்களும், கோட்டான் குஞ்சுகளும் என்னைக் கனம்பண்ணும்.
இந்த ஜனங்களை எனக்கென்று ஏற்படுத்தினேன், இவர்கள் என் துதியை சொல்லி வருவார்கள்”, என்பதாக எவ்வளவு துல்லியமாக நம்முடைய வேதம் முன்னறிவித்துள்ளது என்பதை பார்த்தீர்களா?, இந்த தேவன் தாம் வாக்குதத்தம் பன்னின தம் ஜனங்களுக்கு எவ்வளவு உண்மையுள்ளவராக இருக்கிறார் என்று பாருங்கள், இஸ்ரேலர் அவருக்கு உண்மையுள்ளவர்களாயிருந்தார்களோ இல்லையோ உண்மையுள்ள தேவன் அவர்களுக்கு கொடுத்த வாக்குதத்தத்தில் சற்றும் அசதியாயிராமல் அதை நிறைவேற்றுகிறார், இந்த தேவனை உங்கள் வாழ்கையில் ஏற்றுக்கொள்வீர்களானால் உங்கள் வாழ்க்கையிலும் அவர் உண்மையுள்ளவராயிருப்பார், அவருடைய கிருபை இரக்கங்களுக்கு முடிவில்லையே, இன்றே அவரை உங்கள் மனதில் ஏற்றுக்கொள்ளுங்கள்

பிலாத்து

பிலாத்து சீசருக்கு அனுப்பிய கடிதத்தின் தமிழாக்கம்


மாட்சிமை தங்கிய ரோமாபுரி அரசருக்கு,
வணக்கத்துடன் தெரிவிப்பது என்னவென்றால்,
கடந்த சில நட்களாக என்னுடைய மாகாணத்தில் நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சிகளைப் பற்றி அறிவிக்கிறேன். இந்த நிகழ்ச்சிகள் நம்முடைய ஆளுகையை மாற்றியமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால்,எல்லாக் கடவுள்களாலும் ஒன்றும் செய்ய இயலவில்லை.
நான் Vallerius ஆட்சிக்குப்பின், யூதேயாவில் கால் எடுத்து வைத்த நாள் முதற் கொண்டு ஓய்வில்லாத மனச்சோர்வையும், துன்பத்தையும் தான் அனுபவிக்கிறேன்.
நான் எருசலேமிற்கு வந்து கவர்னர் பதவியை ஏற்றுக் கொண்ட போது, ஒரு உன்னதமான விருந்து தயார் செய்து, கலிலேயாவிலுள்ள காற்பங்கு தேசாதிபதியையும், பிரதான ஆசாரியரையும், அவருடைய அலுவலகத்திலுள்ள அதிகாரிகளையும் விரும்பி அழைத்திருந்தேன். குறித்த நேரத்தில் ஒருவரும் வரவில்லை. இதை எனக்கும், ரோமாபு
அரசாங்கத்திற்கும் இழைக்கப்பட்ட ஓர் அவமரியாதையாகவே நான் கருதுகிறேன்.
சில நாட்கள் சென்ற பின்பு, நான் பிரதான ஆசாரியரை அழைத்த போது, அவர் என்னை மதிக்காமல் வரவில்லை. அவர் வராமலிருந்தது மிகவும் மோசமான ஏமாற்றுதல் என கருதுகிறேன். அவர் தன்மார்க்க சட்டத்தை அனுசரித்து, ரோமருடன் ஒரே மேசையிலிருந்து உணவும், மதுபானமும் அருந்துவது தடைப்படுத்தப்பட்டிருக்கிறது என்றார். இது ஒரு பொய்யான கூற்று என்று அவருடைய முகமும், விழியும் தோற்றுவித்தது.
நான் அவருடைய விளக்கத்தைத் தற்போது ஒப்புக் கொண்டாலும், ஓர் அரசாங்கத்தால் ஆளப்படுகிறவர்கள் தங்களைச் சத்துருக்களாகவே நினைத்துக் கொள்கிறார்கள் என்று எனக்குத் தெளிவாய்த் தெரிகிறது.
பிரதான ஆசாரியர்களைக் குறித்து ரோமாபுரியர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் பதவிகளைக் கைப்பற்றவும், ஆடம்பர ஜீவியம் நடத்தவும் தங்களுடைய சொந்தத் தாயையும் பயன்படுத்துவார்கள். நாம் கைப்பற்றியிருப்பதில் எருசலேம் நகரமானது அரசாள்வதற்கு மிகவும் கடினம். எந்த நேரத்திலும், எருசலேம் மக்கள் குழப்பம் உண்டாக்குவார்கள் என்று நான் மிகவும் திகிலடைந்திருக்கிறேன். அவர்களை அடக்குவதற்குப் போதுமான அளவு படை என்னிடம் இல்லை. தற்பொழுது என்னிடம், ஒரு நூற்றுக்கதிபதியும், நூறுபேர் கொண்ட ஒரு படையும் தான் இருக்கிறது. சிரியா தேசத்து கவர்னரிடமிருந்து,எனக்கு ஒரு படை வேண்டுமென்று விண்ணப்பித்ததற்கு, தனக்கே தற்காப்புக்குப் போதுமான படை இல்லையென்று தர மறுத்து விட்டார். மேலும், நமது ராஜ்யத்தை வழி நடத்திச் செல்ல வேண்டுமென்ற ஆசை,நமது அரசாங்கத்தையே கவிழ்த்துப் போடுமென்று நான் அஞ்சுகிறேன்.
நான் இதற்குப் பயந்து அவர்களுடன் அதிகமாய் உறவு வைத்துக் கொள்ளாமல் காலம் கடத்தி வருகிறேன். இங்குள்ள குடிமக்களின் மனநிலை எவ்விதம் இருக்கிறதென்று அறிய நான் முயற்சி செய்கிறேன்.
என் செவிகளுக்கு எட்டின அநேகக் காரியங்களில் என்னைக் கவர்ந்தது என்னவெனில், கலிலேயா நாட்டிலுள்ள ஒரு வாலிபர் தன்னை அனுப்பின கடவுளைப்பற்றி மேன்மையான உபதேசங்களைக் கூறி வருகிறார். துவக்கத்தில், அவர் குடிமக்களை ரோமராஜ்யத்திற்கு விரோதமாய் குழப்பத்திற்கு ஏதுவாய் வழி நடத்துகிறார் என்று பயந்த நான், அப்படி இல்லை என்று திட்டவட்டமாய் அறிந்து கொண்டேன்.
நாசரேத் ஊரானாகிய இயேசு, தன்னை ரோமருக்கு ஒரு நல்ல நண்பனாகவே காண்பிக்கிறார். நான் ஒரு நாள்,சீலோவாம் ஊர் அருகில், ஒரு மாபெரும் கூட்டத்தின் நடுவில், ஒரு மரத்தின் மேல் சாய்ந்து நின்று, கூடி நின்றவர்களுக்கு அமைதியாய்ப் பிரசங்கம் செய்யும் ஒரு வாலிபனைக் கண்டேன். அவர்தான் இயேசு என்று எனக்கு அறிமுகப்படுத்தினார்கள்.
நான் அங்கு கூடியிருந்து கேட்டுக் கொண்டிருந்த கூட்டத்தையும், பிரசங்கிக்கிற இயேசுவையும், கண்டபோது சந்தேகப்பட்டேன்.
அவருக்கு சுமார் 30 வயதிருக்கும். இவரைப் போல் அழகும், சாந்தமும் நிறைந்த முகத்தையுடைய ஒருவரை நான் ஒருக்காலும் கண்டதில்லை. பிரசங்கிக்கிறவருக்கும், கேட்டுக்கொண்டிருக்கும் கூட்டத்தினருக்கும் உள்ள வித்தியாசம் தான் என்ன?. கூட்டத்தினர் விரும்பப்படத்தகாத ரூபமும், நீண்ட, கருத்த தாடிகளையும் உடையவர்களாய் இருந்தனர்.
கூட்டத்தைக் கலைக்க மனமில்லாமல் நான் கடந்து சென்று, என்னுடைய காரியதரிசியை அங்கு சென்று கவனமாய்க் கேட்டுவர அனுப்பி வைத்தேன். எனது காரியதரிசியின் பெயர் Manilus. Etruria என்ற இடத்தில் தங்கியிருந்த ஊயவயடiநெ என்ற குழப்பக்காரத் தலைவனுடைய பேரன் இவன். Manilus, யூதேயா தேசத்தில் நெடுங் காலமாய் வாழ்ந்து செய்து, எபிரேய மொழியைக் கற்றிருந்தான். எனக்கு அவன் மேல் பூரண நம்பிக்கையும், அபிமானமும் உண்டு.
நான் என் அலுவலகத்திற்குச் சென்றபோது Manilus- ஐக் கண்டேன். அவன் சீலோவாவிலே இயேசு பேசினவைகளைச் சொன்னான். எவ்வளவு பிரபலமான ஞானமுள்ளவனின் பேச்சுக்களையும், இந்த இயேசு பேசினவைகளுக்கு ஒப்பிட முடியாது.
மூர்க்க குணமுள்ளவர்கள் நிறைந்த எருசலேமில் உள்ள ஒரு குழப்பக்காரன், அவரிடத்தில் வந்து “இராயருக்கு வரி கொடுப்பது நியாயமா?” என்று கேட்டதற்கு, இயேசு அவனுக்கு மறுமொழியாக, “இராயருக்குள்ளதை இராயருக்கும், கடவுளுக்குள்ளதை கடவுளுக்கும் கொடுங்கள்” என்றார்.
இவ்வளவு கரை கடந்த ஞானம் நிறைந்தவர் ஆனதால், இந்த நசரேயனுக்கு முழு பேச்சுரிமையும் அளித்தேன். எனக்கு அவரைக் கைது செய்து தங்களிடம் அனுப்ப முழு அதிகாரமும் இருந்தது. அப்படிச் செய்வது, ரோம அரசாங்கம், நீதி தவறாத மனிதர்களை நல்லவிதமாய் நடத்திவரும் செயலுக்கு முரண்பாடாயிருக்குமல்லவா?இந்த இயேசு குழப்பம் அல்லது உபத்திரவம் உண்டாக்கவில்லை. என்னுடைய முழு பாதுகாப்பையும் அவர் அறியாமலே அவருக்கு நான் கொடுத்து வந்தேன். முழு சுதந்திரத்துடன் நடக்கவும், பேசவும், கூட்டங்களில் பிரசங்கிக்கவும், தனக்கு சீடர்களைத் தெரிந்து எடுக்கவும் அரசாங்க அனுமதி அளித்தேன். நம்முடைய முற்பிதாக்களுடைய மார்க்கம் அழிந்து போய் (அப்படி நடக்கக் கூடாது), இயேசுவின் மார்க்கம் உதித்தாலும்,யூதர்கள் சொல்லுகிறது போல், கடவுள் நடத்துதல் என்றும், நாம் எண்ணுகிறபடி தலைவிதி என்றும் எண்ணிக்கொள்ள வேண்டும். இவ்வளவுக்கும் நான் தான் காரணம் என்ற எண்ணமே நிலை நிற்கும்.
இந்த அளவு கடந்த சுதந்திரத்தோடு இயேசுவை நடமாட அனுமதித்தது ஏழை யூதர்களையல்ல,ஜசுவரியவான்களாகிய அதிகாரமுள்ள யூதர்களையே கோபமூட்டினது. ஜசுவரியவான்களிடம் இயேசு கடினமான வார்த்தைகளையே பேசினார். நான் அரசாங்க நோக்கின்படி நசரேயனுக்குத் தடையுத்தரவு விதிக்கவில்லை.
இயேசு, சதுசேயர், பரிசேயரிடம் பேசினது:
“விரியன் பாம்புக் குட்டிகளே, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே, நீங்கள் மனிதர் முன்பாக நல்லவர்களைப் போல் நடித்து, உள்ளான இருதயத்திலே மரணத்துக் கொப்பான விசயத்தை அடக்கி வைக்கிறீர்கள்.” மற்றொரு முறை, மமதை கொண்ட ஜசுவரியவான்கள் தர்மம் செய்வதை இயேசு ஏளனம் செய்தார். ஏழைகள் தங்களால் இயன்றதை தர்மம் செய்வது கடவுள் சன்னிதியில் விலையேறப் பெற்றதாயிருக்கிறது. தினந்தோறும் கிறிஸ்து இயேசு அத்துமீறி நடப்பதாக எதிரிகளிடமிருந்து அரசாங்கத்திற்குக் குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருந்தன.
இயேசுவுக்கு அசம்பாவிதமான உபத்திரவம் ஏற்படக்கூடும் என்றும் எனக்கு அறிவிக்கப்பட்டது. எருசலேமிலே தீர்க்கத்தரிசிகளைக் கல்லெறிந்து கொலை செய்வது ஒரு புதிய காரியமல்ல. இராயருக்கும் மனு தாக்கல் செய்யப்படும். எப்படியிருந்தாலும், என்னுடைய நடவடிக்கைகள் அரசாங்கத்தின் அங்கீகாரம் பெறப்பட்டிருந்தது.Parathian யுத்தம் முடிந்தவுடன் ஆவன செய்யப்படும் என்று வாக்களித்திருந்தார்கள்.
குழப்பங்களைக் கட்டுப்படுத்தும் சிரமங்களைத் தவிர்க்கவும், பட்டணத்தின் அமைதியை நிலை நிறுத்தவும்,அரசாங்கம் இழிவான நிலைக்கு வராமலிருக்கவும் நான் ஒரு முறையைக் கையாண்டேன். அதாவது,அரசாங்க காரியாலயத்திற்கு வருமாறு இயேசுவுக்கு ஒரு கடிதம் அனுப்பினேன். இயேசு வந்தார். என்னுடைய சரீரத்தில் ஸ்பானிய-ரோம இரத்தம் ஓடிக் கொண்டிருந்தது. நசரேயன் வந்த பொழுது நான் என் அரண்மனையில் நடந்து கொண்டிருந்தேன். ஆனால் என்னுடைய கால்கள் பளிங்குத் தரையில் இரும்புச் சங்கிலியினால் பிணைக்கப்பட்டது போன்ற உணர்வுடன், நான் ஒரு குற்றவாளியைப் போல உணர்ந்தேன். என் ஒவ்வொரு அவயவமும் நடுங்கினது. இவ்வளவிற்கும் நசரேயன் குற்றமற்றவராய் அமைதியாயிருந்தார்.
“நான் இங்கு இருக்கிறேன்”, என்று சொல்வதற்கு அடையாளமாய், அவர் என் அருகில் வந்தார். ஆனாலும் ஒரு வார்த்தை கூட அவர் வாயிலிருந்து எழவில்லை. நான் இந்த அதிசயமான, ஆச்சரியப்படத்தக்க இயேசுவைக் கண்டு, பயந்து ஆராய்ந்து கொண்டிருந்தேன். எண்ணற்ற சித்திரக்காரர்கள் வரைந்திருக்கும் அநேகக் கடவுள்களின் ஓவியங்களையும், வீரர்களின் ஓவியங்களையும் மனதில் ஆராய்ந்து, இந்த மகானை ஒருவரும் ஓவியமாக்கவில்லையே என்று மிகவும் நடுங்கி, அவரின் அருகில் செல்ல அஞ்சினேன். கடைசியில்,தைரியத்தை வரவழைத்து, “இயேசுவே”, என்றேன். என் நாக்கு அவரின் பெயரை உச்சரிக்க இயலாமல் தடுமாறியது. “நாசரேத் ஊரானாகிய இயேசுவே, கடந்த மூன்று ஆண்டுகளாய் நான் உங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தேன். அதற்காக நான் சிறிதேனும் வருத்தம் அடையவில்லை. தங்களுடைய வார்த்தைகள் ஞானிகளின் வசனங்களாயிருக்கின்றன. தாங்கள் சாக்ரடீஸ் அல்லது பிளேட்டோ இவர்களுடைய சரித்திரத்தைப் படித்திருக்கிறீர்களா? அந்த எல்லா தத்துவ ஞானிகளையும் விட தங்களுடைய உரையாடலில் கெம்பீரமான சாந்தம் நிறைந்திருப்பதால், அவர்களைவிட தாங்கள் மேலான ஸ்தானத்தில் வீற்றிருக்கிறீர்கள். இதைப் பற்றி ரோமாபுரி அரசாங்கத்திற்கு அறிவித்திருக்கிறேன்.
நான் அந்த அரசாங்கத்தின் எளிய பிரதிநிதியாக இங்கிருக்கிறேன். தங்களுக்கு உரித்தான எல்லா சுதந்திரங்களையும் வழங்கினதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனாலும் தங்களுடைய பிரசங்கங்கள் சக்தியுள்ளதாய், நாளடைவில் வளர்ந்து வந்து விரோதிகளை உண்டாக்கியிருக்கிறது. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. சாக்ரடீசுக்கு பகைவர்கள் உண்டாகி அவர்களால் அவர் மரணமடைந்தார். தங்களுக்கு அதைவிட பலமடங்கு சக்தி வாய்ந்த விரோதிகள் உண்டாயிருக்கிறார்கள். அதற்குக் காரணம் உங்களுடைய பிரசங்கங்கள். அவைகள், அவர்களுடைய குணாதிசயங்களை பகிரங்கமாய் வெளிப்படுத்தின. மேலும்,தங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்ததினால், என் மேலும் ஆத்திரம் அடைந்திருக்கிறார்கள். நான் மறைமுகமாய்த் தங்களோடு சேர்ந்து கொண்டு எபிரேயர்களுக்குக் கொடுத்திருக்கும் அற்பமான ரோம அரசின் அதிகாரங்களையும் அபகரித்துக் கொள்வதாயும் எண்ணுகிறார்கள். என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் (அரச உத்தரவு அல்ல) தாங்கள் எச்சரிக்கையாய், நிதானத்தோடு இனி பேச வேண்டும்.
ஏனெனில், தங்களுடைய சத்துருக்கள் கூடி புத்தியில்லாத ஜனங்களைக் கொண்டு, கிளர்ச்சி உண்டு பண்ணி,என்னை அரச அதிகாரத்தடன் ஏதாவது செய்யும்படி தூண்டுவார்கள் என்று சொன்னதற்கு, நசரேயனாகிய இயேசு சாந்தமாய் அளித்த பதில் என்னவெனில், “உலகத்தின் இளவரசே! தங்களுடைய வார்த்தைகள் உண்மையான ஞானத்தினால் உண்டாகவில்லை. மலைப் பள்ளத்தாக்குகளின் நடுவே கரைபுரண்டு பேரிரைச்சலோடு ஓடிவரும் பெரு வெள்ளத்தை நில் என்று சொன்னால் என்ன நடக்கும்? – பள்ளத்தாக்கிலுள்ள எல்லா மரங்களையும் வேரோடு பெயர்த்துக் கொண்டு போய்விடும் அல்லவா? பெருவெள்ளம் என்ன சொல்லும் தெரியுமா? நான் என்னை சிருஷ்டித்தவருக்கும், இயற்கை விதிகளுக்கும் தான் கீழ்ப்படிவேன். கடவுளுக்கு மாத்திரம் தான் பெருவெள்ளம் எங்கே ஓடுகிறதென்று தெரியும். மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், “சாரோனின் ரோஜா மலருமுன் குற்றமற்றவரின் உதிரம் பூமியில் சிந்தப்படும்”, என்றார்.
நான் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு, வேகத்தோடு, “உங்களுடைய உதிரம் சிந்தப்பட மாட்டாது”, என்று சொன்னேன். என் மனதில், தங்களின் ஞானத்தை சீர்தூக்கிப் பார்க்கையில், குழப்பக்காரரும், பெருமைக்காரரும்,ரோம அரசால் அளிக்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தை அவமதிக்கிறவருமாகிய பரிசேயரைப் பார்க்கிலும் தாங்கள் எவ்வளவோ மேலானவர். அவர்கள், இராயருக்கு விரோதமாய் இரகசியக் கூட்டம் போட்டும், கல்வியறிவு இல்லாத மக்களிடம், “இராயர் ஒரு கொடுங்கோல் மன்னன்,” என்று போதித்தும், தங்களுக்கு அழிவைத் தேடுகிறார்கள். அகம்பாவம் நிறைந்த பிச்சைக்காரர்கள்! ஸைபீரியா தேசத்து ஓநாய்கள்! சில சமயங்களில் ஆட்டுத்தோலைப் போர்த்துக் கொண்டு கொடூரமானச் செயல்களைச் செய்ய முயற்சிக்கிறார்கள். நான் தங்களுக்கு அவர்களிடமிருந்து பாதுகாப்பு அளிப்பேன். என்னுடைய அரசாங்கம் தங்களுக்கு, இரவும் பகலும் ஒரு அடைக்கலப் பட்டணமாயிருக்கும்,” என்றேன்.
இயேசுவோ, சாதாரணமாய்த் தலையை அசைத்து, தெய்வீகப் புன்னகையுடன் சொன்னதாவது, “பூமியிலும்,அதன் தாழ்விடம் வரையிலும், மனுசக் குமாரனுக்கு பாதுகாப்பு கிடைக்காத நாட்கள் வரப் போகிறது. வானாதி வானங்களை அவர் சுட்டிக்காட்டி, “நீதிமான்களுக்கு அடைக்கலம் அங்கே இருக்கிறது: தீர்க்கத்தரிசிகளின் புத்தகங்களில் எழுதியிருப்பவை நிறைவேற வேண்டியது அவசியம்,” என்று சொன்னார்.
நான் அவரை, “வாலிபனே,” என்று அழைத்து, “தயவு செய்து என்னுடைய வேண்டுகோளை அரசாங்க உத்தரவாக ஏற்றுக் கொள்வாயாக. இந்த இராஜ்யத்தில் சமாதானத்தை நிறுவும் உத்தரவாதம் என் பொறுப்பில் உள்ளது. உங்களுடைய பேச்சைக் கொஞ்சம் விட்டுக் கொடுக்கிறவராய் இருக்க வேண்டும். என்னுடைய உத்தரவை மீறி நடக்காதிருங்கள். மீறினால் என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியுமே? என்னுடைய சந்தோசம் உங்களோடு இருப்பதாக – போய் வாருங்கள்,” என்றேன்.
அதற்கு அவர், “உலகத்தின் இளவரசே, நான் உலகத்தில் யுத்தம் நடத்த வராமல், சமாதானம், அன்பு, மனுசர் மேல் பிரியம், இவைகளையே கொண்டு வந்திருக்கிறேன். Augustus Ceasar, பிறந்த அதே நாளில் நானும் பிறந்தேன். Augustus, ரோம ராஜ்யத்திற்கு சமாதானம் அளிக்கிறார். உபத்திரவங்கள் என்னிடத்திலிருந்து புறப்படாது. மற்றவர்களிடமிருந்து அவைகளை நான் எதிர்பார்க்கிறேன். நான் அவைகளை, என் பிதாவிற்குக் கீழ்ப்படிந்து. அவர் சித்தப்படி ஏற்றுக் கொள்வேன். அவர் எனக்கு வழிகாட்டியாயிருக்கிறார். உங்கள் உலக ஞானத்தைக் கொஞ்சம் அடக்கிக் கொள்ளுங்கள். மரண வாசலில் இருக்கும் ஒரு கைதியைக் கைது செய்ய உங்களுக்கு அதிகாரம் கிடையாது,” என்று சொல்லிக் கொண்டே, பிரகாசமான நிழல் போல் அரண்மனையின் திரைச்சீலையின் பின்னால் மறைந்து போனார். அவர் முன்னிலையில் நான் என்னை விடுவித்துக் கொள்ள முடியாத பிரமாண்டமான பாரத்திலிருந்து, விடுதலை பெற்றேன்.
அந்நாட்களில், கலிலேயா நாட்டை ஆட்சி புரிந்த ஏரோதுவிடம், இயேசுவின் விரோதிகள், அவரைப் பழி வாங்கும் நோக்கத்துடன் முறையிட்டார்கள். ஏரோது தன் சொந்த விருப்பத்தின்படி செய்ய வேண்டுமென்று நினைத்திருந்தால் இயேசுவைக் கொலை செய்ய அனுமதித்திருக்கலாம். ஆனால், ஒருவேளை, தன்னுடைய உயர் பதவியின் நிமித்தமோ, அல்லது பாராளுமன்றம் இச்செயலை விரும்புமோ? அல்லது என்னைப் போல் இயேசுவுக்குப் பயந்துதான் இயேசுவைக் கொலை செய்ய அனுமதியாமலிருந்தாரோ தெரியவில்லை. ஒரு ரோம அதிகாரி யூதர்களோடு ஐக்கியமாய் இருக்கக் கூடாது. முன்பு ஒருமுறை, ஏரோது என் அரண்மனைக்கு வந்திருந்த பொழுது, பல காரியங்களைப் பற்றி பேசிய பின்பு, இந்த நசரேயனைக் குறித்து என் அபிப்பிராயம் என்னவென்று கேட்டார்.
நான் சொன்னதாவது, “இயேசு, என் பார்வையில், பெரிய தத்துவ ஞானிகளில் ஒருவர். அவருடைய பிரசங்கங்கள் குழப்பம் உண்டாக்கக் கூடியவைகள் அல்ல என்றும், ரோம அரசாங்கம், அவர் பேசுகிறதற்கு ஒரு தடையும் விதிக்கத் தேவையில்லை என்றும் சொன்னேன்.” எனக்கு சந்தோசமாய் வந்தனம் செய்து விட்டுச் சென்றார்.
யூதருடைய விசேஷமான பஸ்கா பண்டிகை நெருங்கி வருகிற படியால், எப்பொழுதும் போல், அதைக் கொண்டாட ஆவலாய்க் காத்து இருந்தார்கள். பட்டணம் பெரியக் கூட்டத்துடன் அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. நசரேயனைத் தீர்த்துக்கட்டி விட வேண்டுமென்று சிலர் துடித்துக் கொண்டிருந்தனர்;. அவர்கள் ஆலயத்திலுள்ள பொக்கிசத்தைச் செலவு செய்து திரளான ஜனங்களைக் கூட்டிச் சேர்க்கிறதாக, என்னுடைய ஆட்கள் சொன்னார்கள். அபாயங்கள் நெருங்கி வந்து கொண்டிருந்தன. ஒரு ரோம நூற்றுக்கதிபதி அவமானப் படுத்தப்பட்டான். நான் சிரியா தேசத்து அதிகாரியை எனக்கு உதவி செய்ய, நூறு பேர்கொண்ட ஒரு படையும்,குதிரைப் படையும் வேண்டுமென்று எழுதியிருந்தேன். அவர் மறுத்து விட்டார். நான் தன்னந் தனியாக,மிகவும் சொற்பமான ஆட்களைக் கொண்ட படையை வைத்து, குழப்பம் நிறைந்த ஒரு பட்டணத்தை அடக்கத் திராணியற்றவனாய்த் திகைத்துக் கொண்டிருந்தேன். வேறு என்ன செய்ய என்னால் இயலும்?.
அவர்கள் இயேசுவைப் பிடித்து, அவரைச் சிலுவையில் அறைய வேண்டுமென்று கூச்சலிட்டார்கள். அவர்களுக்கு என் பெயரில் நம்பிக்கை கிடையாது. மூன்று பெரிய சதிக் கூட்டங்கள் இயேசுவுக்கு எதிராக ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தன.
முதலாவதாக, சதுசேயரும், ஏரோதியர்களும் இரட்டை நோக்கத்துடன் வேலை செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் நசரேயனை மனமார வெறுத்து, ரோம அரசாங்கத்தை அதம் பண்ண இருந்தார்கள். நான் ரோம ராஜ்யத்து மன்னருடைய சின்னம் பொறிக்கப்பட்ட கொடிகளை ஏந்திக் கொண்டு, பட்டணத்திற்குள் பிரவேசித்ததை, பெரிய குற்றமாக எண்ணியிருந்தார்கள். ஆனாலும், அவர்கள் ஆலயத்தின் பொக்கிசத்திலிருந்து பணத்தை எடுத்து வீணாயச் செலவு செய்தது எவ்வளவு பெரிய குற்றம் என்று எண்ணவில்லை. மற்றொரு சம்பவம் என்னவென்றால், நான் ஆலய பொக்கிசத்திலிருந்து பணம் எடுத்து பொது மக்களுடைய அவசரத் தேவைக்காகச் செலவு செய்ய வேண்டும் என்றதை மறுத்து விட்டார்கள். இதுவும் அவர்கள் மனதில் குற்றமாய்க் குடி கொண்டிருந்தது.
பரிசேயர்கள் இயேசுவின் பயங்கர விரோதிகள். அவர்களுக்கு அரசாங்கத்தைப் பற்றிய அக்கறையே கிடையாது. நசரேயனாகிய இயேசு, மூன்று வருட காலமாய், அவர்கள் பயங்கரமாய்ச் செய்து வந்த தப்பிதங்களையெல்லாம் அவர் போன இடங்களிலெல்லாம் கண்டித்துக் கொண்டே வந்தார். இதை அவர்கள்,மனதில் பழிவாங்கும் நோக்கத்துடன் ஒதுக்கி வைத்திருந்தார்கள்.
தனித்து நின்று செயல்பட கோழைத்தனமாயிருந்தபடியால் அவர்கள் சதுசேயரையும், ஏரோதியரையும் தங்களோடு சேர்த்துக் கொண்டார்கள். மேலும் ஜனக்கூட்டம், சதி ஆலோசனைகளின்படி குழப்பங்கள் உண்டு பண்ணியதால், தங்களுக்கு ஆதாயம் தரும் வழிகளை உண்டாக்கிக் கொண்டார்கள்.
இயேசு பிரதான ஆசாரியன் முன்பாக இழுத்துச் செல்லப்பட்டு, சிலுவையில் மரண தண்டனை விதிக்கப் பெற்றார்;. பின்பு, பிரதான ஆசாரியன், காய்பாவிடம் இயேசுவை அனுப்பி வைத்தான். அவன் தன்னுடையக் கைதியை என்னிடம் அனுப்பி, அவர்கள் எடுத்த முடிவு சரியானது என்று ஊர்ஜிதப் படுத்தப் பிரயாசப் பட்டான்.
இயேசு ஒரு கலிலேயன் ஆனபடியால், ஏரோதின் ஆட்சிக்குட்பட்டவர் என்று கூறி அவரை இங்கு அனுப்பினான். தன்னைவிட்டு வேறு எங்காவது போய்த் தொலையட்டும் என்ற நோக்கத்தோடு அவரை இங்கு அனுப்பி வைத்தான். ஜனங்கள் அலை அலையாய் வந்து கூடி விட்டார்கள். யூதேயா நாட்டு ஜனங்கள் யாவரும் திரளாய் வந்து விட்டார்கள். எருசலேம் நகர மலைச்சரிவில் இருந்து பட்டணம் முழுவதும் ஜனசமுத்திரம் நிறைந்து வழிந்தது.
நான் கால் (Gaul) தேசத்திலிருந்து ஒரு பெண்ணை மணம் புரிந்திருந்தேன். அவள் பின்னால் நடக்கப் போகும் காரியங்களை முன்கூட்டியே அறிவிக்கும் சக்தி தனக்கு இருப்பது போல் பாவிப்பாள். அவள், அழுது புலம்பி,என் கால்மாட்டில் வீழ்ந்து, அந்த பரிசுத்தமான மனிதனுக்கு யாதொரு தீங்கும் செய்யக் கூடாது என்று என்னைக் கண்டிப்பாய் எச்சரித்தாள். நேற்று இரவு நான் அவரை ஒரு தரிசனத்தில் கண்டேன். தண்ணீரின் மேல் நடந்து கொண்டிருந்தார். காற்றை செட்டைகளாய் பாவித்து மேகங்களின் மேல் பறந்து சென்றார். அவர் புயல் காற்றுடனும், நீரில் வாழும் மீன்களுடனும் சம்பாஷித்தார். எல்லாம் அவருக்குக் கீழ்ப்படிந்தன. பாருங்கள், கெதரோன் மலையிலிருந்து உதிரம் வெள்ளம் போல் புரண்டு வருகிறது. ராயருடைய சிலை முழுவதும் Genocide–ஆல் நிறைகிறது. அரண்மனையின் தூண்களில் வெடிப்பு ஏற்படுகிறது. சூரியனோ,தன்னை முக்காடு போட்டு மூடிக் கொண்டு, கல்லறையினுள் புலம்பிக் கொண்டிருக்கிறது. ஜயோ! பிலாத்துவே, துன்பங்கள் உன் வாசலண்டையில் காத்துக் கிடக்கிறது. தங்களுடைய மனைவியின் ஆணைக்குச் செவிமடுக்காவிடில், ஒரு ரோம அதிகாரிக்கு நேரிடும் சாபங்களுக்கு ஆளாவீர். சீசருடைய கோபத்திற்கும் உட்படுவீர் என்றாள்.
இந்தத் தருணத்தில், பளிங்கு ஏணிப்படிகள் கூட்டத்தின் பாரச்சுமை தாங்க முடியாமல் முனங்கிற்று. நசரேயன் என்னிடத்தில் கொண்டு வரப்பட்டார். நான் நீதிமண்டபத்திற்கு என்னுடைய காவலருடன் சென்று,அதிகாரத்தோடு, அவர்களிடம், “என்ன வேண்டும்,?” என்று கேட்டேன்.
“நசரேயனைக் கொல்ல வேண்டும்”, என்றார்கள்.
“என்ன குற்றத்திற்காக?”.
“அவன் தேவதூஷணம் சொன்னான். தேவாலயத்தைப் பற்றி தீர்க்கத் தரிசனம் சொன்னான். தன்னை தேவகுமாரன் என்றும், மேசியாவும், யூதருடைய ராஜாவும் நான் தான் என்றும் சொன்னான்”.
“ரோம அரசாங்கம் இந்த மாதிரி குற்றங்களுக்கு மரணதண்டனை விதிக்காது”, என்றேன்.
“சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்”, என்று குழம்பி நின்ற கூட்டத்தினர் கூக்குரலிட்டார்கள்.
கோபாவேசத்தோடு நின்ற ஜனசமுத்திரம் போட்ட கூக்குரலில் அரண்மனையின் அஸ்திபாரமே அதிர்ந்து கொடுத்தது.
இந்த பயங்கர கூட்டத்தின் நடுவில், ஒரே ஒரு ஜென்மம் மாத்திரம் சாந்தமாய், சமாதானத்தோடு நின்று கொண்டிருந்தது! அது நசரேயனாகிய இயேசுவே.!!
எத்தனையோ வழிகளில் நசரேயனைக் காப்பாற்ற நான் முயற்சி செய்தும் தோல்வியுற்றேன். கடைசியில் ஒரே ஒரு வழி மட்டும் எனக்குப் புலப்பட்டது. அதைக் கொண்டு அவருடைய உயிரைக் காப்பாற்றலாம் என்று அவர்களிடம் அந்த வழியைக் கூறினேன்.
யூதர்களின் பஸ்கா பண்டிகை தோறும் ஒரு கைதியை விடுதலை செய்வது வழக்கம். ஆகையால், இயேசு என்ற அடிக்கப்படும் ஆட்டுக்குட்டியை விடுதலை செய்யலாமா?, என்றேன். ஆனால் ஜனங்களோ, “இயேசு சிலுவையில் அறையப்பட வேண்டும்”, என்றார்கள்.
நான் திரும்பவும் அவர்களுடன் பேசினேன்.
நீங்கள் சொல்வது சரியல்ல, சட்ட விரோதமானது. எந்தக் குற்றவாளியும் ஒரு நாள் முழுவதும் விரதம் இருந்த பின்பு தான் நியாயாதிபதி தண்டனை விதிக்க வேண்டும். தண்டனையும் சனகரீம் சங்கத்தின் அனுமதி பெற்றதற்கு அடையாளமாக தலைவரின் கைச்சாத்தும் உடையதாயிருக்க வேண்டும். தண்டனையை விதித்த அன்றே அதனை நிறைவேற்றக் கூடாது. மறுநாளும், சனகரீம் சங்கம் திரும்பவும் முழு நடவடிக்கைகளையும் ஆராய வேண்டும். இதுதான் அவர்கள் சட்டம். மேலும், நியாயஸ்தலத்தின் வாசலில் ஒருவன் கொடி பிடித்து நிற்க வேண்டும். மற்றொருவன் சற்று அப்பால் குதிரை மேல் இருந்து கொண்டு, குற்றவாளியின் பெயரையும்,அவன் செய்த குற்றத்தையும் எல்லாருக்கும் கேட்கும் படியாய் உரத்த சத்தமிட்டுச் சொல்ல வேண்டும். சாட்சிகளின் பெயரையும் கூறவேண்டும். அதில் யாராவது குற்றவாளிக்குச் சாதகமாகச் சாட்சி சொல்லுகிறார்களா என்று கவனிக்க வேண்டும். குற்றவாளியும் மூன்று தடவை திரும்பி ஏதாவது கேட்க வேண்டுமானால் கேட்கலாம்.
இந்த எல்லா முறைகளையும் கூறி நான் பிரயாசப்பட்டும் அவர்கள் அவரை, “சிலுவையில் அறையும்,சிலுவையில் அறையும்”, என்று கூக்குரலிட்டார்கள். முடிவாக, வேறுவழியின்றி, இயேசுவை நான் வாரினால் அடிப்பதற்கு உத்தரவிட்டேன். ஒருவேளை அவர்கள் திருப்தியடைவார்கள் என்று நான் நினைத்தேன். ஆனால் இது அவர்களுடைய கோபத்தைத்தான் அதிகப்படுத்தியது. அடுத்தாற் போல், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி, “நான் என்னுடைய விசாரணையில் மரணத்துக்கேதுவான ஒரு குற்றமும் இயேசு செய்யவில்லை”, என்று சொல்லி, ஜனக்கூட்டத்தின் முன்பாக என் கைகளைக் கழுவினேன். ஒரு பிரயோஜனமும் இல்லை.
இந்த அக்கிரமக்காரர் அவருடைய ஜீவனின் மேல் தாகம் கொண்டிருந்தார்கள். என்னுடைய அனேக சிவில் விவகாரங்களில் கோபம் அடைபவர்கள் உண்டு, ஆனாலும் இந்தக் கூட்டத்தைப் போல் நான் என் ஆயுள் நாட்களில் ஒரு கூட்டத்தையும் கண்டதில்லை. உண்மையைக் கூறினால், எல்லாப் பாகங்களிலிருந்தும் ஜனங்கள் எருசலேமில் கூடி இருந்தார்கள்.
ஜனத்திரள் நடந்த மாதிரி தெரியவில்லை. ஆனால், சுழற்காற்று மனித அலைகளை உருட்டிக் கொண்டு, நீதி மன்றத்திலிருந்து சீயோன் மலை மட்டும் கொண்டு போனது போலிருந்தது. கூட்டமோ, கூச்சலிட்டுக் கொண்டும், அலறிக் கொண்டும், ஊளையிட்டுக் கொண்டும் போனதைப் போல் நான் ஒரு இடத்திலும், ஒரு சந்தர்ப்பத்திலும் கேள்விப் பட்டதேயில்லை.
கொஞ்சம் கொஞ்சமாக, மழைக் காலத்து மாலை நேரம் போல, பகல் இருளாகிக் கொண்டிருந்தது. மகத்தான ஜீலியஸ் சீசர் மரணத்தோடு நடந்தது போல் இருந்தது. மார்ச் மாத Ides போல இருந்தது. நானோ மாகாண கவர்னராக, ஒரு குழப்பம் நிறைந்த நிலையில், அரண்மனைத் தூணில் சாய்ந்து கொண்டு, வெறி கொண்ட ஜனத்திரள், ஒருபாவமும் இல்லாத பரிசுத்தனாகிய நசரேயனை, கொலைக் களத்திற்கு இழுத்துக் கொண்டுப் போவதைப் பார்த்துக் கொண்டே நின்றேன்.
என்னைச் சுற்றி இருந்தவர்கள் எல்லாரும் போய் விட்டார்கள். எருசலேம் பட்டணத்தில் வாசம் செய்தவர்களை மரண ஊர்வலம் சிதறடித்திருந்தது. ஒரு வெறுமையும், மனவருத்தமும் என்னை மூடிக் கொண்டது. என்னுடைய காவலர்கள் குதிரைப்படையில் சேர்ந்து கொண்டனர். நூற்றுக்கதிபதியோ அதிகாரத்தோடு ஒழுங்கைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான். நான் தனியாய் விடப்பட்டேன். என்னுடைய நொறுங்குண்ட இருதயம், அந்த நேரத்தில் நடந்த சம்பவங்களைக் குறித்து ஆழ்ந்த சிந்தனையுடன் ஆராய்ந்து,இது கடவுளுடைய சரித்திரத்தைக் குறிப்பதேயல்லாமல் மனிதர்களைப் பற்றியதல்ல என்று தீர்மானித்தது. கொல்கதா மலை மேட்டிலிருந்து காற்று மூலமாய் வந்த ஓசையுடன் கூடிய சத்தம், ஒருநாளும் கேள்விப் பட்டிராததும், பிராண வேதனையுடையதுமாயிருந்தது. கார்மேகம் ஆலயத்தின் கோபுரத்திலும், எருசலேம் பட்டணத்தின் மேலும் இறங்கி இருட்டடித்தது. மிகவும் பயங்கரமான அடையாளங்கள் பூமியிலும்,வானத்திலும் காணப்பட்டன. Dionysius-ம், Areopagite-ம், இந்த அடையாளங்களைக் கண்டு விட்டு, ஒன்று சிருஷ்டி கர்த்தா துன்பப்பட வேண்டும், அல்லது பூலோகமே சின்னா பின்னமாகிக் கொண்டிருக்க வேண்டும் என்றார்களாம்.
இந்த பயங்கரமான சம்பவங்கள் இயற்கையில் நேர்ந்து கொண்டிருக்கும் போது, எகிப்து தேசத்தின் கீழ்ப்பாகத்தில் மிகவும் பயங்கரமான பூமியதிர்ச்சி உண்டாகி எல்லா ஜனங்களையும் மரண பயத்திற்குள் ஆழ்த்தியதோடல்லாமல், மூடநம்பிக்கையில்லா யூதர்களையும் மரண வேதனையடையச் செய்தது. அந்திரேயாவிலுள்ள ஒரு வயோதிக ஞானமுள்ள Belthasar எனும் யூதன், அதே நேரத்தில் அதிர்ச்சியடைந்து மரித்துப் போனார். அவர் பயத்தால் மரித்தாரோ, அல்லது துக்க மேலீட்டால் மரித்தாரோ என்று திட்டவட்டமாய்ப் புலப்படவில்லை. ஆனால் அவர் நசரேயனுடைய நெருங்கிய அந்தரங்க நண்பராயிருந்தார்.
இரவின் முன் நேரத்தில், நான் சால்வையை எடுத்து, என்னை மூடிக் கொண்டு பட்டணத்தின் வழியாகக் கொல்கதா மேட்டு மலையின் பிரதான வாசலுக்கு நேராக நடந்து சென்றேன். அந்த நேரத்தில், பலியின் நடவடிக்கைகள் எல்லாம் முடிவடைந்திருந்தன. கூட்டம் கலைந்து, அவரவர்கள் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். என்றாலும் உண்மையாக அவர்கள், திகிலடைந்தவர்களாகவும்,கிலேசமடைந்தவர்களாகவும், ஆபத்துக்களை எதிர்நோக்கினவர்களாகவும், மௌனமாயிருந்தனர். அவர்கள் தங்கள் கண்களால் கண்ட சம்பவங்களே, அவர்களை இந்த நிலைக்குக் கொண்டு வந்திருந்தது. மேலும, எனது சிறிய ரோமப்படை கழுகின் சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை மூடி மறைத்துக் கொண்டு துயரம் தாங்கொண்ணாமல் புலம்பிக் கொண்டு போனது. சில யூதப் படையிலுள்ளவர்கள் நான் அறியாத பாசையில் என்னவெல்லாமோ உளறிக் கொண்டே போனார்கள்.
மற்றவர்கள், ரோமாபுரியார்களை, இயேசு அற்புதங்களினால் மடங்கடித்த செயல்களை மறுபடியும் நினைவுபடுத்திக் கொண்டிருந்தனர். சில சமயங்களில், மனிதர்கள் சிறு குழுக்களாய் நின்று விடுவார்கள். கல்வாரி மலை மேட்டைத் திரும்பிப் பார்ப்பார்கள். அசைவற்று மரம் போல் நின்று ஏதாவது அதிசய சம்பவம் நேரிடும் என்று எண்ணினார்கள்.
நான் துக்கமும், சஞ்சலமும் நிறைந்தவனாய் அரண்மனைக்குத் திரும்பினேன். நசரேயனுடைய இரத்தம் சிந்தப்பட்டிருந்த மாடிப்படிகளின் வழியாய் வரும் பொழுது ஒரு வயது சென்ற மனிதன், பரிதாபமாய்க் கெஞ்சும் பாவனையில் அமர்ந்திருந்தான். அவனுக்குப் பின்னால் அநேக ரோமாபுரியார்கள், மாலை மாலையாய்க் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தனர். அவன் என் கால்மாட்டில் வீழ்ந்து கதறி அழுதான்.
அந்த வயோதிபன் அழுவதைக் கண்டதும், நான் முன்பே துக்கம் நிறைந்தவனாய் இருந்தபடியால், நானும் சேர்ந்து அழுதேன். அந்த வயோதிபனை ஒருக்காலும் நான் கண்டதில்லை. உண்மையாய்ச் சொல்லப் போனால், நான் கண்ட அநேகரின் கண்களில், தொடர்ந்து அவர்கள் அழுததால், கண்ணீரே இல்லாதிருந்தது.
நான் என் ஆயுளில் இப்படி அளவு கடந்த விரோதத்துடன் யாரும் நடந்து கொண்டதைக் காணவில்லை. அவரைக் காட்டிக் கொடுத்தவரும், விலைபேசி விற்றவரும், அவருக்கு எதிராய்ப் பொய்சாட்சி சொன்னவரும்,சிலுவையில் அறையும் என்று கூச்சலிட்டவர்களும், அவன் இரத்தப்பழி எங்கள் மேலும், எங்கள் பிள்ளைகள் மேலும் இருக்கட்டும் என்றவர்களும், கோழைகளைப் போல அடங்கி, தங்கள் பற்களைக் காடியால் கழுவினார்கள். இயேசு கிறிஸ்து, உயிர்த்தெழுதலும், மரணத்துக்குப் பின் நல்லவர்களும், கெட்டவர்களும் தனித்தனியாய் பிரிக்கப்படுவார்கள் என்று முன்பே போதித்ததாகக் கேள்விப்பட்டேன். அப்படியானால், அது இந்த பெரிய ஜனக் கூட்டத்திலேயே ஆரம்பமாயிற்று என்று நான் திட்டவட்டமாய் நம்புகிறேன்.
அந்த வயோதிபனை நோக்கி, “தகப்பனே, நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?”, என்று என் மனவருத்தத்தை உள்ளடக்கிக் கொண்டு விசாரித்தேன். அவர் முழங்காலில் நின்று கொண்டு மிகவும் பணிவன்புடன், “நான் அரிமத்தியா ஊரானான யோசேப்பு. நான் நசரேயனாகிய இயேசுவை நல் அடக்கம் செய்ய தங்களிடம் அனுமதி கோரி நிற்கிறேன்” என்றார்.
“உங்களுடைய விண்ணப்பத்திற்குச் செவிமடுத்தேன்”, என்று சொல்லி, அதே நேரத்தில் Manilus ஜ சில படைவீரர்களுடன் அனுப்பி, இயேசுவை நல் அடக்கம் செய்யும்படி ஏற்பாடு செய்தேன்.
சில நாட்கள் சென்ற பின், இயேசுவினுடைய கல்லறை வெறுமையாயிருந்தது. அவருடைய சீஷர்கள், இயேசு தாம் முன் அறிவித்தபடியே உயிர்த்தெழுந்தார் என்று தேசம் முழுவதும் பறைசாற்றினார்கள். சிலுவையில் அறைந்த சம்பவத்தை விட உயிர்த்தெழுதல் அதிகக் கிளர்ச்சியை உண்டாக்கி விட்டது. நான் இதை உண்மையாய்ச் சொல்ல முடியாது. என்றாலும், நான் தீர விசாரித்தேன். நீங்களும் ஆராய்ந்து பார்த்து, நான் தப்பிதமாய்ச் சொல்லிவிட்டேனோ என்று ஏரோது சொன்னதையும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு இயேசுவின் சடலத்தை தனக்காக ஆயத்தப்படுத்தி வைத்திருந்த கல்லறையில் நல் அடக்கம் செய்தான். இயேசுவின் உயிர்த்தெழுதலை மனதில் வைத்துக் கொண்டு இந்தக் கல்லறையைக் கட்டியிருந்தானோ? அல்லது, வேறு ஒரு கல்லறையைக் கட்ட நினைத்திருந்தானோ? எனக்குச் சொல்ல முடியவில்லை.
அடக்கம் செய்யப்பட்ட மறுநாள், ஒரு ஆசாரியன் என்னிடத்தில் வந்து, இயேசுவின் சரீரத்தை சீஷர்கள் திருடிக் கொண்டு போய் விட்டு, அவர் முன்பே அறிவித்தபடி, மரித்தோரிலிருந்து அவர் உயிர்த்தெழுந்தார் என்று பொய் சொல்லுவார்கள் என்று நாங்கள் நிச்சயமாய் நம்புகிறோம் என்றான். நான் உடனே அவனை Malcus- என்ற ரோமாபுரி அரசாங்க சேனைத் தலைவனிடம் அனுப்பி, எத்தனை யூதப் போர்வீரர்கள் தேவைப்படுமோ,அத்தனை வீரர்களைக் கொண்டு காவல் புரியும்படி ஏற்பாடு செய்தேன். அவர்கள் நினைத்தது போல் ஏதாவது நடந்து விட்டால், ரோம ராஜ்யத்தைக் குறை கூற முடியாமற் போகுமல்லவா?
கல்லறை வெறுமையாக்கப் பட்டதைக் குறித்து பிரமிப்பு உண்டான உடனே, நானும் மிகவும் பயந்து, ஏதாவது சம்பவிக்குமோ என்று அஞ்சினேன்.
என்னிடத்தில் வந்து உயிர்த்தெழுதலைப் பற்றிச் சொன்ன Islam-ஐ வரவழைத்தேன். அவன் முழு விவரமும் சொன்னான். அவர்கள், ஓர் அழகான மெல்லிய வெளிச்சம் கல்லறையின் மேல் பிரகாசிக்கக் கண்டார்களாம். உடனே இயேசுவுக்குச் சொந்தமான பெண்கள் யாராவது யூதர் வழக்கப்படி சடலத்திற்குக் கந்தவர்க்கம் பூச வந்திருப்பார்கள் என்று நினைத்ததுமில்லாமல், அவர்கள் எப்படி இவ்வளவு காவலர்களையும் கடந்து கல்லறையண்டை வந்தார்கள் என்றும் ஆராய்ந்து கொண்டிருக்கும் பொழுதே, அந்தப் பிரதேசம் முழுவதும் பிரகாசமான ஒளியில் மூழ்கியதோடல்லாமல், கூட்டம் கூட்டமாய், மரித்தோர்கள் தங்கள் கல்லறைத் துணிகளுடன் அங்கு எழும்பி நிற்பதையும் கண்டு அதிசயித்தானாம். அந்தக் கூட்டத்தினர் யாவரும் ஏகோபித்து முழங்கின சப்தம் அந்தப் பிரதேசத்தையே நிரப்பிவிட்டது. அவன் ஒரு நாளும் கேட்டு அனுபவித்திராத இனிய நாதமுள்ள சங்கீதம், பூமியிலும், ஆகாயத்திலும் கடவுளைத் துதித்துப் பாடிக் கொண்டே இருந்தது. அதே வேளையில், பூமியானது மனக் கலக்கத்தையும், வேதனையையும் உண்டாக்கத் தக்கதாக சுழன்று கொண்டிருந்தபடியால், என் கால்களைத் தரையில் ஊன்றி நிற்க முடியவில்லை. என் மூளையும் குழம்பி என்ன நடக்கிறது என்றே தெரியாமல் போய் விட்டது என்றான்.
“உனக்குப் புத்தி தெளிந்த பிறகு நீ என்ன நிலையிலிருந்தாய்”, என்று கேட்டதற்கு, “நான் முகம் குப்புறத் தரையில் விழுந்து கிடந்தேன்”, என்றான். “ஒருவேளை நீ திடீரென்று தூக்கத்திலிருந்து விழிப்படைந்ததினால் உண்டான மயக்கமாயிருக்கலாம்”, என்றதற்கு, “நான் ஒருநாளும் வேலை நேரத்தில் உறங்க மாட்டேன்,அப்படிச் செய்தால், மரண தண்டனை விதிக்கப்படும் என்று எனக்குத் தெரியும்”, என்றான். “நானும் உறங்கினேன், மற்ற போர்ச் சேவகர்களும் உறங்கினார்கள்”;. “எவ்வளவு நேரம் நீடித்திருந்தது?”, என்று நான் கேட்டதற்கு, “எனக்குத் தெரியாது, ஒருவேளை ஒரு மணி நேரமாயிருக்கலாம்”, என்றான். “சரி, இதற்குப் பிறகு,நீ இயேசுவின் கல்லறைக்குப் போனாயா?”, என்று கேட்டதற்கு, “நான் போகவே இல்லை… எனக்கு மிகவும் பயமாக இருந்தது”, என்றான்.
“உன்னிடத்தில் ஆசாரியர்கள் கேள்விகள் கேட்டார்களா?”, என்றதற்கு, “ஆம், கேட்டார்கள். நான் தூங்கி விட்டேன், பூமி அதிர்ச்சி வந்தது என்று சொல்லும் படியாகவும், இயேசுவின் சீஷர்கள்தான் அவருடைய சடலத்தைக் களவாடிச் சென்றார்கள் என்று சொல்லும் படியாகவும், அப்படிச் சொன்னால் பணம் தருவதாகவும் சொன்னார்கள்”, என்றான். அவனோ உறங்காமல் இருந்திருக்கிறான், இயேசுவின் சடலம் அங்கு இல்லை என்பதுவும் அவர்கள் சொல்லித்தான் தெரியுமாம். “அந்த ஆசாரியர்களின் சொந்த அபிப்பிராயம் என்ன?, என்று சொல்”, என்றதற்கு, “இயேசு ஒரு மனிதரல்ல, மரியாளுடைய மகனும் அல்ல, கன்னிமரியம்மாளின் வயிற்றில்,பெத்லகேம் ஊரில் பிறக்கவும் இல்லையாம்”, என்றான்.
யூதருடைய இந்த அனுமானம் உண்மையானால், அவர்கள் சொல்வது சரியாயிருக்கலாம். குயவன் கையில் உள்ள களிமண் எப்படியெல்லாம் செய்யப்படுமோ அது போல அவர் இஷ்டப்படி எல்லாம் நடந்தது. அவருடைய சிநேகிதரும், சத்துருக்களும் அப்படியே நினைக்கிறார்கள். ஏனென்றால், அவர் தண்ணீரைத் திராட்சை ரசமாக்கினார், மரித்தோரை உயிரோடு எழும்பப் பண்ணினார், கடல் கொந்தளிப்பை சாந்தப்படுத்தினார், காற்றை அதட்டினார், கடலிலிருந்து மீனைப் பணத்தோடு வரவழைத்தார். மேற்கூறிய சம்பவங்கள் எல்லாம் அவரால் செய்ய முடிந்தது. இன்னும் இது போல அநேகக் காரியங்கள் அவரால் செய்ய முடியும். யூதர்களும் இதற்குச் சாட்சிகள். இவைகளையெல்லாம் நேரில் பார்த்ததினால், யூதருக்கு அவர் மேல் பகை உண்டாயிற்று. அவர்மேல், அவர் குற்றம் செய்ததாகவோ, அல்லது அவர் சட்டத்தை மீறினதாகவோ நீதி விசாரணை நடத்தப்படவில்லை. மேலும், எந்த ஒரு தனி நபருக்கும் விரோதமாக அவர் ஒன்றும் செய்யவில்லை. ஆயிரமாயிரம் ஜனங்களுக்கும், அவர் நண்பர்களுக்கும், விரோதிகளுக்கும் இவை யாவும் நன்கு தெரியும். Malcus சிலுவையின் அடிவாரத்தில் நின்று கொண்டு, “உண்மையாகவே இவர் தேவனுடைய குமாரன்”, என்று சொன்ன சாட்சியை நானும் இப்போது தைரியமாகச் சொல்லத் தயாராய் இருக்கிறேன்.
இப்போதும் மகாகனம் பொருந்திய ராஜாவே, நான் என்னால் கூடிய வரையில் பிரயாசப்பட்டு, முழு விபரங்களையும் சேகரித்து, தங்களுக்கு அனுப்பியிருக்கிறேன். தாங்களே முழுவதையும் படித்து ஆராய்ந்து,நான் எவ்விதம் இந்தக் காரியத்தில் நடந்து கொண்டேன் என்று தீர்மானியுங்கள்.
Antipater இந்தக் காரியத்தில் என்னைப் பற்றி அநேக கடினமான காரியங்களைச் சொல்லியிருப்பதாய் அறிகிறேன்.
தங்களுடைய உண்மையும், நன்றியுமுள்ள ஊழியன், மிக்க வந்தனங்களுடன் முடிக்கிறேன்.
-பொந்தியு பிலாத்து (Pontius Pilate)
குறிப்பு :  டோனால்ட் என். லீட்டேன் என்பவர் இஸ்ரேல் நாட்டின் எருசலேமிலுள்ள “மவுன்ட் சியோன் நிருபருக்கு கொடுத்து உதவியது இக்கையழுத்துப் பிரதிகள் ஐம்பது பகுதிளாக எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதியும் இரண்டு அடிக்கு நாலடி அளவு கொண்டது. விசேஷித்த அனுமதி பெற்ற பின்னர்தான் வாசிப்பதற்கு அனுமதிக்கிறார்கள். ஒரு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது) இது ரோமாபுரியிலுள்ள வாடிகன் நகரில் உள்ளதுபிலாத்து