சனி, 18 ஜூலை, 2015

ஏசாயா

“சீனீம் தேசத்திலிருந்து வருவார்கள்”-ஏசாயா தீர்க்கரின் துல்லியமான முன்னுரைப்பும் நிறைவேறுதலும்–

பூமியெங்கும் சிதறடிக்கப்பட்ட யூதர்கள் பூமியின் நாலா திசையிலிருந்தும் திரும்ப தேவ கிருபையினால் அதன் தேசத்திற்கு கூட்டிச்சேர்க்கப்படுவார்கள் என்று வேதத்தில் தீர்க்கதரிசிகளால ஏராளமான முன்னுரைப்புகள் உள்ளது, சில யூதர்கள் இப்போது உலக நாடுகளால் உண்ணிப்பாக கவனிக்கப்படுகிற நாடுகளான சீனா மற்றும் இந்தியாவில் பல காலமாக வாழ்ந்துவருகிற யூதர்கள் தங்கள் சொந்த நாடான இஸ்ரேலுக்கு வரத்துவங்கியுள்ளனர்.
சமீபத்தில் இஸ்ரேலில் உள்ள பென்குரியன் விமான நிலையத்தில் வந்திறங்கிய 7 சீன யூத ஆண்களை இஸ்ரேலிய யூத நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது, இவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்குரிய பயனத்தை துவக்குவதற்கு இவர்கள் 4 ஆண்டுகள் சட்ட சிக்கல்களை தாண்டி ஒரு வழியாக தங்கள் முற்பிதாக்களின் பூமியாகிய இஸ்ரேலுக்கு வந்து சேர்ந்துள்ளனர்.
தேவன் தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னறிவித்த விதமாகவே இன்றைக்கு எங்கள் சொந்தக் கண்கள் காண பூமியெங்கும் சிதறடிக்கப்பட்ட யூதர்கள், பூமியின் நாலா திசையிலிருந்தும் தங்கள் சுய தேசம் வந்துகொண்டிருப்பது அந்த தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் நிறைவேறி வருவதையே உறுதிப்படுத்துகிறது என்றார் மைக்கேல் ஃப்ருண்ட்(MICHAEL FREUND).

இந்த மைக்கேல் ஃப்ருண்ட் என்பவர் “ஷாவேய் இஸ்ரேல்(SHAVEI ISRAEL)” என்ற அமைப்பின் தலைவராக உள்ளார், சிதறிப்போன யூதர்களை மீண்டும் தங்கள் சொந்த தேசத்திற்கு கூட்டிச்சேர்க்கும் ஒரு அர்ப்பணிக்கப்பட்ட குழுவினரே இந்த ஷாவேய் இஸ்ரேல்

இப்போது இஸ்ரேல் வந்துள்ள இந்த சீன யூதர்கள் சைனாவிலுள்ள கைஃபெங்க்(KAIFENG) என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள், இந்தப் பகுதிக்கு இந்த யூத மக்கள் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வந்து குடியேறினர் என்றும், இவர்கள் பெர்சியா(ஈராக்) தேசத்திலிருந்து வெளியேறி சைனாவின் கைஃபெங்கில் குடியேறி இருக்கலாம் என்று வரலாற்று வல்லுனர்கள் கருதுகின்றனர்.

இவர்களுடைய மூதாதையர்கள் ஒரு காலக்கட்டத்தில் தங்கள் சுய தேசம் திரும்ப செல்லவேண்டும் என்று கனவு கண்டார்கள், அவர்களுடைய கனவு இந்த தலைமுறை சீன யூத ஆண்களால் நிறைவேறியுள்ளது. இவர்கள் தங்கள் சொந்த தேசத்திற்கு வந்ததினிமித்தமாக மிகுந்த சந்தோஷம் அடைந்துள்ளனர்.
அவர்களில் ஒருவரான ஜியூ சேய்(XUE ZEI),”இன்று, நாங்கள் மிக அதிகமாக சந்தோஷப்படுகிறோம், நாங்கள் மிக மிக மகிழ்சியாருக்கிறோம்(TODAY,WE MOST HAPPY, WE VERY, VERY SO HAPPY) என்று உணர்ச்சிப் பெருக்கோடு குறிப்பிடுகிறார்.
இவர்களைப் போல இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர் மற்றும் மிசோரம் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான பினேய் மனாசே யூதர்கள் இப்பகுதிகளில் இந்தியக் குடிமக்களாக உள்ளனர், இவர்களில் அனேகர் வாக்குதத்ததின் நாடான தங்கள் இஸ்ரேல் நாட்டிற்கு வரத்துவங்கியுள்ளனர், இந்தியாவிலிருந்து யூதர்கள் சுய தேசம் செல்வதைக் குறித்து ஏற்கனவே நம்முடைய ஜீவ ஊற்று இதழில் ஆதாரத்துடன் குறிப்பிட்டிருக்கிறதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன், (முந்தின இதழ்களை படிக்காதவர்கள் என்னுடைய இ-மெயிலில் தொடர்புகொண்டு pdf முறையிலான முந்திய இதழ்களை இலவசமாக பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன், மேலும் ஜீவ ஊற்று இணைய தளத்திலும் பழைய செய்திகளை இண்டர்நெட் மூலமாக படிக்கலாம், E-MAIL ID :dvimalansp123@gmail.com, / vimalanjeevavootru@yahoo.com,  WEB ADDRESS :www.jeevavootru.com).
இந்த சீன யூதர்கள் இஸ்ரேல் வந்து சேர்ந்த பின்பு “வெஸ்டர்ன் வால்” என்று சொல்லப்படுகிற மேற்கு சுவர் அல்லது புலம்பும் சுவர் பகுதிக்கு வந்து ஜெபம் செய்துவிட்டு, தங்கள் மூதாதையரின் தேசத்தில் புதிய வாழ்வை தொடங்கியுள்ளனர்.
இவர்கள் சைனாவிலுள்ள யூதர்களின் பிரதிநிதிகளாகவே இஸ்ரேல் வந்துள்ளனர், இன்னும் மீதமுள்ள 2000 சீன யூதர்கள் சீக்கிரத்தில் தங்கள் சுய தேசத்திற்கு திரும்பும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு சீக்கிரத்தில் வரும் என்று இதன் ஒருங்கினைப்பாளர்கள நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
கர்த்தர் தம் ஜனங்களைக் கூட்டிச்சேர்க்கிறார், அவர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தம் ஊழியர்களைக் கொண்டு முன்னுரைத்த வண்ணமே அதை திட்டமாக செய்து கொண்டு வருகிறார், அதுவும் மிகவும் துல்லியமாக சொல்லி அதை நிறைவேற்றி வருகிறார், இந்த நிகழ்வு துல்லியமாக முன்னுரைக்கப்பட்டது எப்படி என்று நீங்கள் கேட்கலாம், அதை தெரிந்துக்கொள்ளும் முன் அந்த தீர்க்கதரிசன வார்த்தையை முதலில் பார்க்கலாம்,
ஏசாயா 49:12 இதோ,இவர்கள் தூரத்திலிருந்து வருவார்கள்; இதோ, அவர்கள் வடக்கிலும் மேற்கிலுமிருந்து வருவார்கள், இவர்கள் சீனீம் தேசத்திலுமிருந்து வருவார்கள் என்கிறார்.
அதிசயிக்கும் வண்ணமாக சீனீம் என்பது சீனாவின் எபிரேய வார்த்தை என்பது குறிப்பிடத்தக்கது,
துல்லியமான வேதத்தின் முன்னுரைப்பு என்று நான் குறிப்பிட்டது சரிதான் என்பதை இப்போது புரிந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன், சிலர் எண்ணுகிறபடி வல்லரசுகள் உதவிசெய்கினறன, அதனால்தான் இஸ்ரேல் இருக்க முடிகிறது இல்லையானால் இஸ்ரேல் வரைபடத்தில் இல்லாமல் போய்விடும் என்கிறார்கள், ஒன்றை மாத்திரம் அவர்கள் ஏனோ யோசிக்கவில்லை, இறைவனுடைய சக்தியைக் காட்டிலும் பூமியின் வல்லரசுகள் பெரியவைகளோ?, இறைவனுடைய ஒத்தாசையினால்தான் இஸ்ரேல் இன்றைக்கு திரும்பவும் ஸ்தாபிக்கப்பட்டது என்று முழு மனதுடன் உணர்ந்து வேத வசனத்தை ஆராய்ந்து படிப்பீர்களானால் நிச்சயமாக எது சத்தியம் என்பதை அறிந்துக்கொள்வீர்கள், கர்த்தர் உங்களை நேசிக்கிறார்.  

“…இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுவார்”. ஏசாயா 11:12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக