செவ்வாய், 29 ஜூலை, 2014

சங்கீதம் 23



முக்கிய மான கொண்டாட்ட  நாட்க சங்கீதம் 23ளில் பாரம் பரிய கிறிஸ்தவர்கள் சங்கீதம் 128,91,23 ஆம் சங்கீதங்களை வாசிப்பார்கள். ஆனால் அதன் விளக்கம் அவர்களுக்கு தெரியாது. ஆகவே சங்கீதம் 23 இன் சிறிய தியானத்தை கீழே காண்போம்.




கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் - உறவு

நான் தாழ்ச்சியடைவதில்லை - தன்னிறைவு

அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து -அக்கறை

அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னை கொண்டுபோய் விடுகிறார் -தேவன் என்னோடு இருக்கிறார்

தம்முடைய நாமத்தினிமித்தம் - அவருடைய திட்டம்/நோக்கம்

நான் மரணஇருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் - சோதனை

பொல்லாப்புக்கு பயப்படேன் - விசுவாசம்

தேவரீர் என்னோடு கூட இருக்கிறீர் - நம்பிக்கை

உமது கோலும் உமது தடியும் என்னை தேற்றும் -வழித்துணை / ஆதரவு

என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி -விருப்பம்

என் தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்கிறீர் - பரிசுத்தம் செய்தல்

என் பாத்திரம் நிரம்பி வழிகிறது - நிறைவு

என் ஜீவனுள்ள நாள் எல்லாம் நன்மையையும் கிருபையும் என்னைத் தொடரும் -வாக்குத்தத்தம்

நான் கர்த்தருடைய வீட்டில் நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன் -ஆசை

நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன் - நித்தியம்

தேவன் முதல் நான்கு வசனங்களில் அவர் ஒரு உண்மையான மேய்ப்பன் என்று வெளிப்படுத்துகிறார்.

 அடுத்த இரண்டு வசனங்களில் கிருபையுள்ளவர் என்பதை தெளிவுபடுத்துகிறார்.

நாம் தேவனை மேய்ப்பனாய்க் காணும்போது மூன்று காரியங்களை யோசிக்கலாம்.

1. அவர் நம்முடைய தேவையை சந்திக்கிறார். (1-3)

2. அவர் நம்மை வழிநடத்துகிறார். (3 பின்பகுதி)

3. அவர் நம்மை பாதுகாக்கிறார் (4) சங்கீதம் 23

1 கருத்து: