செவ்வாய், 29 ஜூலை, 2014

சாத்தான்

போலியாக ஏமாற்றும் சாத்தான்  சாத்தான்






போலிகள் பல. அவைகளை உருவாக்குவது சாத்தானின் தந்திரம். 
சாத்தான் என்றால் எதிராளி,
 சத்துரு, குற்றம் சாட்டுகிறவன் என்று பல அர்த்தங்கள்  உண்டு.
சாத்தானைக் குறித்து  முதல் முதல் வேதம்

தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது (ஆதி 3:1) என அறிமுகப்படுத்துகிறது.

யோவான் கூறும் போது,

துவக்கத்தலிருந்தே பிசாசு பாவம் செய்துகொண்டிருக்கிறான். பாவத்தைத் தொடர்ந்து செய்யும் மனிதன் பிசாசுக்குரியவன். தேவ குமாரன் பிசாசின் செயலை அழிக்கும்பொருட்டே வந்தார்.(1 யோவான் 3:8)
பவுல் எழுதும் போது,

சாத்தான் என்னிடமிருந்த எதையும் வெல்ல முடியாதவகையில் இதைச் செய்தேன். சாத்தானின் சதிதிட்டங்களையும் நாம் நன்றாக அறிவோம்.(2 கொரி 2:11)

ஆகவே அவனது போலித்தன்மையை சற்று கவனிப்போம்:

1. அழிவின் மகனாகிய பாவமனிதன் 

ஆம்! தேவன் இவ்வுலகினைப் பெரிதும் நேசித்தார். எனவே தனது ஒரே குமாரனை இதற்குத் தந்தார். தேவன் தன் மகனைத் தந்ததால் அவரில் நம்பிக்கை வைக்கிற எவரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனைப் பெறுவர்.(யோவான் 3:16) தேவனுக்கு அவருடைய ஒரே பேரான குமாரனாகிய இயேசு கிறிஸ்து இருப்பது போல சாத்தானுக்கு அழிவின் மகன் இருக்கிறான்.

எவரும் உங்களை எவ்விதத்திலும் முட்டாள் ஆக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் விசுவாச மறுதலிப்பும், அழிவின் மகனாகிய பாவமனிதனும் தோன்றும் வரை அந்த நாள் வராது. பாவமனிதன் நரகத்துக்கு உரியவன்.(2 தெசலோனிக்கேயர் 2:3)
1. பிசாசின் பிள்ளைகள்.

சிலர் அவரை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் நம்பினர். தன்னை நம்பியவர்களுக்கு தேவனின் பிள்ளைகளாவதற்கு உரிமையைக் கொடுத்தார்.(யோவான் 1:12)  தேவனுடைய பிள்ளைகள் என அழைக்கப்படுபவர்கள் இருப்பது போல  பிசாசின் பிள்ளைகள் உள்ளனர்.
இவ்வுலகமே வயல். நல்ல விதைகள் பரலோகத்திற்குரிய நல்ல பிள்ளைகள். களைகள் பிசாசின் பிள்ளைகள்.(மத் 13 : 38என்று விவரிக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள். 

2. தீய கிரியைகள் 

ஆமாம், தேவன் உங்களில் பணியாற்றுகிறார். அவர் தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும், செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறார். அவற்றைச் செய்ய உங்களுக்கு தேவனே பலத்தைக் கொடுக்கிறார்.(பிலிப்பியர் 2:13) தேவன் தம்முடைய பிள்ளைகளில் செயலாற்றி தம்முடைய சித்தப்படி  செய்வதற்கு அவர்களுக்கு விருப்பத்தையும், வாஞ்சையையும் தருவது போல சாத்தான் மக்களுக்குள்  கிரியை செய்கின்றான். 

கடந்த காலத்தில் நாம் அனைவரும் அவர்களைப் போலவே வாழ்ந்தோம். நமது மனவிருப்பப்படி பாவத்தில் வாழ்ந்தோம். நமது மனமும் சரீரமும் விரும்பியதையே நாம் செய்தோம். நாம் தீயவர்களாய் இருந்தோம். நமது வாழ்க்கை முறையின் காரணமாக தேவனின் கோபத்தால் நாம் துன்பப்பட வேண்டும். மற்ற அனைத்து மக்களைப் போலவே நாமும் இருந்தோம்.(எபேசியர் 2:3)


3. ஒளியின் தூதன்

மீண்டும் இயேசு மக்களோடு பேசினார். அவர், “நானே உலகத்துக்கு ஒளி. என்னைப் பின்பற்றி வருகிற எவனும் ஒருபோதும் இருளில் வாழமாட்டான். அவன் வாழ்வைத் தருகிற ஒளியைப் பெறுவான்” என்றார்.(யோவான் 8:12) சாத்தானும் கூட ஒளியின் தூதனைப்போல நடிக்கிறான்

ஒளியின் தூதன் தேவனுடைய தூதுவன் போல சாத்தான் மக்களை ஏமாற்றி தன்னை தேவனிடமிருந்து வந்ததாக எண்ணச் செய்தான்.(2 கொரி 11:14 )

4. சாத்தானின்  ஊழியக்காரர்கள்
மறு நாள் காலையில் இயேசு தனது சீஷர்களை அழைத்தார். அவர்களுள் பன்னிரண்டு பேரைத் தேர்ந்தெடுத்தார். அவர்களுக்கு “அப்போஸ்தலர்கள்” என்று பெயரிட்டார். அவர்கள்:( (லூக்கா 6 : 13)கிறிஸ்து அப்போஸ்தலர்களை நியமித்தார் சாத்தானுக்கும் ஊழியக்காரர்கள் இருக்கிறார்கள்

எனவே சாத்தானின் வேலைக்காரர்கள் நீதியின் வேலைக்காரர்களைப் போன்று வேடமிடுவது வியப்புக்குரியதல்ல. ஆனால் இவர்கள் இறுதியில் தங்கள் செயலுக்காகத் தண்டிக்கப்படுவர்.          (2 கொரி 11:15)


5. சாத்தானின் ஆழங்கள் 

ஆனால், தேவன் இவற்றை ஆவியானவரின் மூலமாக எங்களுக்குக் காட்டியுள்ளார்.(1 கொரி 2:10)வேதத்தின் ஆழங்களை தேவ ஆவியானவர் வெளிப்படுத்தியது போல சாத்தானி நாலன்கலும் உண்டு.
“ஆனால் தியத்தீராவில் உள்ள மற்றவர்கள் சிலர் அவளது போதகத்தைப் பின்பற்றவில்லை. அவர்கள் சொல்லும் சாத்தானின் ஆழமான ரகசியங்களையும் நீ அறிந்திருக்கவில்லை. எனவே உங்கள் மீது இதைத்தவிர வேறு சுமைகளை சுமத்தமாட்டேன்.(வெளி 2:24)

6.அழிவின் மகன் 

ஆம்! தேவன் இவ்வுலகினைப் பெரிதும் நேசித்தார். எனவே தனது ஒரே குமாரனை இதற்குத் தந்தார். தேவன் தன் மகனைத் தந்ததால் அவரில் நம்பிக்கை வைக்கிற எவரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனைப் பெறுவர்.(யோவான் 3:16) சாத்தானுக்கும் அழிவின் மகன் இருக்கிறான்.

எவரும் உங்களை எவ்விதத்திலும் முட்டாள் ஆக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் விசுவாச மறுதலிப்பும், அழிவின் மகனாகிய பாவமனிதனும் தோன்றும் வரை அந்த நாள் வராது. பாவமனிதன் நரகத்துக்கு உரியவன்.(2 தெசலோனிக்கேயர் 2:3)


7. பிசாசின் திருத்துவம்

சமாதானத்தின் தேவன்தாமே உங்களை முழுமையாகப் பரிசுத்தமாக்கும் பொருட்டு தேவனிடம் பிரார்த்தனை செய்கிறோம். நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது உங்கள் ஆவி, ஆன்மா, சரீரம் முழுவதும் குற்றமில்லாததாய் இருக்கும்படி காக்கப்படுவதாக.(1 தெசலோனிக்கேயர் 5:23) பரிசுத்த திரித்துவம் இருப்பது போல சாத்தானுக்கும் திருத்துவம் உண்டு. சாத்தான், மிருகம், கள்ளத்தீர்க்கதரிசி.
மக்களைத் தந்திரத்தால் ஏமாற்றி வந்த சாத்தான், கந்தகம் எரியும் நெருப்புக் கடலுக்குள் வீசப்பட்டான். அவனோடு, அந்த மிருகமும், போலித் தீர்க்கதரிசியும் வீசப்பட்டனர். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வதைக்கப்படுவார்கள்.(
வெளி 20:10)

8. பாவத்தின் இரகசியம் 

நம் வழிபாட்டு வாழ்வின் இரகசியம் எந்த சந்தேகத்துக்கும் இடம் இல்லாமல் மிக உயர்ந்தது ஆகும்.“கிறிஸ்து மனித சரீரத்துடன் காட்சியளித்தார்.அவர் நீதியானவர் என்பதை ஆவியானவர் நிரூபித்தார்..”(1 தீமோத்தேயு 3:16) வழிபாட்டு வாழ்வின் இரகசியம் இரகசியம் நமக்கு இருப்பது போல சாத்தான் பாவத்தின் இரகசியத்தை வைத்திருக்கிறான்.

பாவத்தின் இரகசிய சக்தி ஏற்கெனவே உலகத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் அவனைத் தடுத்து நிறுத்தும் வல்லமை உடையவர் ஒருவரே! அவன் முழுமையாகத் தன் வழியில் இருந்து விலக்கப்படும்வரை அவனைத் தடுத்து நிறுத்துவார் அவர்.(2 தெசலோனிக்கேயர் 2:7)

9. சாத்தானின் அற்புதம் 

இயேசு பஸ்கா பண்டிகையின்போது எருசலேமில் இருந்தார். ஏராளமான மக்கள் அவர் செய்த அற்புதங்களைக் கண்டு அவர் மீது நம்பிக்கை வைத்தனர்.   ( யோவான் 2:23)  இயேசு அற்புதம் செய்தது போல, சாத்தானும் அற்புதங்கள் செய்கின்றான.


சாத்தானின் சக்தியாலேயே பாவமனிதன் வருவான். அவனுக்குப் பெரும் சக்தி இருக்கும். அதனால் போலி அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்வான்.(2 தெசலோனிக்கேயர் 2:9)
10. சாத்தானின் கூட்டம் 

கிறிஸ்துவின் பரிசுத்தவான்களைச் சேவை செய்ய தேவன் பல வரங்களைக் கொடுத்தார். கிறிஸ்துவின் சபையானது வல்லமை பெறவே அவர் வரங்களைக் கொடுத்தார்.(எபேசியர் 4:12)கிறிஸ்துவுக்கு அவருடைய சபையிருப்பது போல சாத்தானுக்கும் ஒரு கூட்டம் இருக்கிறது

தம்மைத் தாமே யூதர்கள் என்று அழைத்துக்கொள்கிறவர்களால் உங்களைப் பற்றிச் சொல்லப்பட்ட கெட்ட செய்திகளை நான் அறிவேன். ஆனால் உண்மையில் அவர்கள் யூதர்கள் அல்ல. அவர்கள் சாத்தானின் கூட்டத்தினர். (வெளி 2 : 9)

தேவ ஜனமே ஆண்டவர் இயேசு சொன்னார்,
இறுதி நாளன்று பலர் என்னிடம் ‘நீரே எங்கள் கர்த்தர். உம்மைப் போற்றினோம். அசுத்த ஆவிகளை உம் பெயரால் விரட்டினோம். அற்புதங்கள் பல செய்தோம்’ என்று கூறுவார்கள்.  அவர்களிடம் நான் ‘என்னை விட்டு விலகுங்கள். தவறு செய்தவர்கள் நீங்கள். உங்களை எனக்குத் தெரியாது’ என்று வெளிப்படையாகவே சொல்வேன்.(மத்தேயு 7:22-23)

கிறிஸ்துவின் பெயரைச் சொல்லி பல காரியங்களை  செய்யலாம், அவர் நாமத்தில் பிரசங்கம் செய்யலாம், உலகம் நம்மை அல்லேலுயா கூட்டம் என்று அறிந்திருக்கலாம், திருச்சபை நம்மை விசுவாசிகள், ஊழியர் என அறிந்திருக்கலாம். ஆனால் நாம் நமது ஆவிக்குரிய நிலைமையில் எங்கே இருக்கிறோம் என்பதைக் கண்டு கொள்ளுவது எவ்வளவு மிகவும் அவசியம். 

உனது சொந்த வாழ்கையில் பரிசுத்தம் இருக்கிறதா? இருதயத்தில் உண்மை உண்டா? சொந்த குடும்பத்தை விசாரிக்கிறாயா? பிள்ளைகளை நல்லொலுக்கமுடன் வளக்கிறாயா?  

தேவ வசனத்தைக் கொண்டு நம்மை நாமே  அறிந்து கொண்டு கர்த்தருக்குள்  உகந்த வாழ்கையை மேற்கொள்ளுவோம். சாத்தானின் தந்திரங்களிலிருந்து தப்பித்துக்கொல்லுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக