செவ்வாய், 29 ஜூலை, 2014

ஐயோ! பாவம்


ஐயோ! பாவம்ஐயோ! பாவம்



 
குண்டு பட்டு மரித்த குழந்தைகளைப் பார்த்து ஐயோ பாவம் என்கிறார்கள்
 
சுனாமியில் மரித்த மக்களைப் பார்த்து ஐயோ பாவம் என்று சொல்லுகிறார்கள்  
 
வாகனத்தில் அடிபட்டு இறந்த தெருநாயைப்
பார்த்து ஐயோ! பாவம் என்கிறார்கள் . 
 
தப்பு செய்துவிட்டு தாயிடம் உதைவாங்கும்
பிள்ளைப்பார்த்து ஐயோ! பாவம் என்கிறார்கள் . 

ஐயோ பாவம், 
 ஐயோ பாவம் என்று தம்  உணர்ச்சிகளை வெளிப்ப டுத்தும் சில மனிதர்கள் தங்கள் பாவங்களை குறித்து  கவலையற்று இருப்பது மிகவும் வேதனைக்குரியது.

பாவம் என்றால் என்ன?

நியாயப் பிரமாணத்தை மீறுவதே பாவம் (1 யோவான் 3:4)

 தேவனின் கட்டளையை மீறுவதுதான் பாவம் .என்று வேதம் கூறுகிறது.

பாவங்களை இரண்டாகப் பிரிக்கலாம்.

1. பிறப்புநிலைப் பாவம் (ஜென்ம பாவம்)

ஆதாம் ஏவாள் தேவ  கட்டளையை மீறி செய்த முதல் பாவம், மனிதரின் பரிசுத்த நிலையை  நீக்கி, மனித குலத்திற்கு சாவையும், துன்பத்தையும் கொண்டு வந்ததது. . இந்த பாவத்தின் பாதிப்பு, உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையோடும் இணைந்து பிறக்கிறது . இதுவே பிறப்புநிலைப் பாவம் .
2. செயல்வழிப் பாவம்

மனிதர் தங்கள் வாழ்நாளில் செய்யும் பாவம்,அதாவது எண்ணங்க ளினாலும், செயல்களினாலும் செய்பவைகள் செயல்வழிப் பாவம் என்று அழைக்கப்படுகிறது.

பாவத்தின் சம்பளம் மரணம். பாவம் செய்தவர்களுக்கு அதுவே பலன். ஆனால் தேவன் தம் மக்களுக்கு இலவசமான வரத்தைக் கொடுக்கிறார். அது நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள்ளான நித்திய வாழ்வே ஆகும்.(ரோமர் 6:23

இயேசு நாதர் சிலுவையில் மொழிந்த முதலாவது வார்த்தை,
“ பிதாவே இவர்களை மன்னியும் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக் 23;34) 

ஒரு மனிதன் மனந்திரும்பி அறிக்கை செய்யப்படும் பாவம் அவனுக்கு மன்னிக்கப்படும். ஏனெனில் யோவான் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும் (1யோவா.1:8)என்றான். 

ஒருவன் தன் பாவங்களை மறைக்க முயன்றால் அவனால் வெற்றிபெற இயலாது. ஆனால் ஒருவன் தன் பாவங்களுக்கு வருந்தி, தன் பாவங்களை ஒப்புக்கொண்டு தவறு செய்வதை நிறுத்திவிட்டால், தேவனும், மற்ற எல்லா ஜனங்களும் அவனுக்கு இரக்கம் காண்பிப்பார்கள்.(நீதிமொழிகள் 28:13)


பாவத்தில் பிறந்து பாவத்திலே உழன்று பாவத்தை சுமந்து
வாழும் மக்களை பார்க்கும் போது ஐயோ பாவம்! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக