செவ்வாய், 29 ஜூலை, 2014

வேதம் சொல்லும் செய்தி


 வேதம் சொல்லும் செய்தி:

முதலாவது 
   


முதலாவது 
   


தேவன் மனிதனை தமது சாயலாகப் படைத்து அவனுடன் ஓர் பரிபூரண உறவுவினை வைத்திருந்தார். “நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.” என்று இயேசு சொன்னார்    (யோவான் 10:10b)

 நமது விசுவாசத்தால் நாம் தேவனுக்கேற்ற நீதிமான்களாக்கப்பட்டோம். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம.(ரோமர் 5:1)

     இரண்டாவது                                        
                                                                                     

மனிதன் தேவனின் வழியை விட்டு விலகி தனது சொந்த வழியை தெரிந்து கொண்டான். இவ்விதமான வழி விலகுதலினால் (பாவம்) அவன் அவரிடமிருந்து பிரிக்கப்பட்டுப் போனான். அதாவது ஆத்துமார்த்தமாக அவன் செத்தான்.
"... உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவி கொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது." (ஏசாயா 59:2)
 


மூன்றாவது

தேவனின் ப‌ரிகார‌ம் - சிலுவை
இந்த‌ பிர‌ச்சனைக்குத் தீர்வு இயேசு கிறிஸ்து மட்டுமே. அவ‌ர் சிலுவையில் ம‌ரித்து க‌ல்ல‌றையிலிருந்து உயிர்தெழுந்து ந‌ம் பாவங்களுக்கான‌ ப‌ரிகார‌மான‌தினால் ந‌ம‌க்கும் தேவனுக்குமான‌ இடைவெளியினை இணைத்தார். இத‌ன் மூலம் மனிதனுக்கும் தேவனுக்கும் ஆதியிலே இருந்த பரிபூரண உறவை புதுப்பித்தார். 

கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.” (1 பேதுரு 3:18)

“தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.” (I தீமத்தேயு 2:5)

“நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப் பண்ணுகிறார்.” (ரோம‌ர் 5:8)

நான்காவது


 
நமது  பங்கு

தேவனுடன் வாழும் நித்திய வாழ்வுக்காக மனிதன் இப்பரிசை பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். இதற்காக நாம் செய்ய வேண்டுவதெல்லாம் பைபிளில் வாக்களிக்கப்பட்டவைகளை அவர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுடன் அவரை வேண்டிக்கொள்வதே.

“என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (யோவான் 5:24)
                                                                                                   

கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுவது எப்படி?

1. நான் ஒரு பாவி என ஒப்புக்கொள்ளுங்கள் 
2. பாவங்களிலிருந்து விலக ஒப்புக்கொள்ளுங்கள்
3. கிறிஸ்து இயேசு உங்களுக்காக மறித்து பின்  உயித்தார் என்பதை விசுவாசியுங்கள்
4. அவரயே ஆண்டவராகவும் வாழ்வின் மீட்பராகவும் ஏற்றுக்கொள்ளுங்கள்

- ஜெபத்தின் மூலம் உங்களுள் வரவழைத்து உங்கள் வாழ்கையை பரிசுத்த ஆவியின் மூலம் வழிநடத்தப்பட ஒப்புக்கொடுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக