பூச்சி பிடிக்கும், ஜாக்கிரதை!
இஸ்ரவேல் ஜனங்கள் தேவ ஆலோசனைகளுக்கு புறம்பாக சொல்லப்பட்ட அளவுக்கு மிஞ்சி மன்னாவை சேர்த்து அடுத்த நாளுக்குகென்று வைத்தபோது அது பூச்சி பிடித்து நாற்றமெடுத்தது. பின் தேவ சித்தப்படி ஓய்வு நாளுக்காக இரண்டு மடங்கு சேர்த்தபோது பூச்சி பிடிக்கவுமில்லை, நாற்றெமெடுக்கவுமில்லை. தேவ சித்தமில்லாமல் நாம் (அநீதியாக) சேர்க்கும் பொருள்களோ, ஆஸ்தியோ நமக்கு ஆசீர்வாதமாக இருக்காது. அழிவுக்காக சேர்க்கப்பட்டதாகவே இருக்கும். தேவன் அனுமதிக்கும் சேமிப்புகளே நிலைத்திருக்கும்.
"பரலோகத்திலே உங்களுக்கு பொக்கிஷங்களை சேர்த்து வையுங்கள்: அங்கே பூச்சியாவது, துருவாவது கெடுக்கிறதும் இல்லை.... உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்" மத். 6:20,21
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக