ஞாயிறு, 15 மே, 2016

நன்றி சொல்கிறேன்

  நன்றி சொல்கிறேன்


நன்றி சொல்கிறேன் - 2

நன்றி சொல்கிறேன் - 2
நாள் முழுதும் நன்றி சொல்கிறேன் - 2

வல்லவரே உமக்கு நன்றி சொல்கிறேன்
நல்லவரே உமக்கு நன்றி சொல்கிறேன்
பரிசுத்தரே உமக்கு நன்றி சொல்கிறேன்
படைத்தவரே உமக்கு நன்றி சொல்கிறேன்

காண்பவரே உமக்கு நன்றி சொல்கிறேன்
காப்பவரே உமக்கு நன்றி சொல்கிறேன்
சுமந்து வந்தீரே உமக்கு நன்றி சொல்கிறேன்
சுகம் தந்தீரே உமக்கு நன்றி சொல்கிறேன்

அற்புதரே உமக்கு நன்றி சொல்கிறேன்
ஆண்டவரே உமக்கு நன்றி சொல்கிறேன்
அரவணைத்தீரே உமக்கு நன்றி சொல்கிறேன்
அன்பு செய்தீரே உமக்கு நன்றி சொல்கிறேன்





வியாழன், 12 மே, 2016

இயேசு ராஜாவுக்கு ஜே ஜே- எங்கள்

இயேசு ராஜாவுக்கு ஜே ஜே- எங்கள்


இயேசு ராஜாவுக்கு ஜே ஜே- எங்கள்
இயேசு ராஜாவுக்கு ஜே ஜே

இகமதில் வாழ்பவர் --அல்லேலுயா
அகமதில் வாழ்பவர் --அல்லேலுயா
சுகமது தருபவர் --அல்லேலுயா
பரலோகம் சேர்ப்பார் --அல்லேலுயா

சத்தியபரன் அவர் --அல்லேலுயா
சந்தோஷம் தருவார் --அல்லேலுயா
மன்னாதி மன்னன் --அல்லேலுயா
மகிமையில் சேர்த்திடுவார-அல்லேலுயா

சாத்தனை வீழ்த்தியவர்--அல்லேலுயா
சாவினை ஜெயித்தார்--அல்லேலுயா
சீக்கரம் வந்திடுவார்--அல்லேலுயா
சீயோனில் சேர்த்திடுவார்--அல்லேலுயா

என் நம்பிக்கையே உமக்கு

  என் நம்பிக்கையே உமக்கு
என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரமே

என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரமே
என் புகழிடமே உமக்கு ஸ்தோத்திரம்
உம்மைத்தான் நாம் நம்பியிக்கேன்
அற்புதங்கள் எனக்கு செய்யுங்கப்பா

100க்கு 100 உம்மையே நாம் நம்பியுள்ளேன்
அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
மனிதர்கள் முன்பாக தலைகுனிந்து போகாமல்
உதவி செய்திடுங் உயர்த்தி வெச்சிடுங்க

ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்பவரே
அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
இரட்டிப்பான நன்மைகளை தருவேன் என்று சொன்னீரே
இப்பவே தந்திடுங்க இன்றைக்கே தந்திடுங்க

உம்மை அல்லாமல் யார் என்னை உயர்த்தக் கூடும்
அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
ஐஸ்வாõயம் கனமுமே உம்மாலேதான் வருகிறது
ஆளுகை செய்யுங்கப்பா மேன்மை படுத்துங்கப்பா






புதன், 11 மே, 2016

இயேசு நல்லவர் இயேசு வல்லவர்

இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
இயேசு நல்லவர் இயேசு வல்லவர்

இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
இயேசு இரட்சகரே
அல்லேலூயா ஆராதனை ராஜ ராஜனுக்கே

1. வறண்ட நிலமாய் இருந்த வாழ்வை
வயலாய் மாற்றினாரே
அழுகை நிறைந்த பள்ளத்தாக்கை
களிப்பாய் மாற்றினாரே
குறைகள் எல்லாம் நிறைவாய் மாற்றி
கவலை தீர்த்தாரே கண்ணீர் துடைத்தாரே (2)

2. சேற்றினின்றும் குழியினின்றும் தூக்கி எடுத்தாரே
கன்மலைமேல் கால்கள் நிறுத்தி
உறுதிப்படுத்தினாரே
புதிய பாடல் நாவில் தந்து பாட வைத்தாரே
துதிக்க செய்தாரே - என்னை (2)

3. பாவம் யாவும் மன்னித்தாரே சாபம் நீக்கினாரே
கிருபையாலே நீதிமானாய் என்னை மாற்றினாரே
பிள்ளையாக என்னை கூட
ஏற்றுக் கொண்டாரே
அப்பா இயேசுவே - என் (2)

4. பரலோகத்தில் எனது பெயரை எழுதி வைத்தாரே
நானும் வாழ அங்கோர் இடத்தை
தெரிந்து வைத்தாரே
இயேசு வருவார் அழைத்துச் செல்வார்
பறந்து சென்றிடுவேன்
சுகமாய் வாழ்ந்திடுவேன் (2) அங்கு



சனி, 7 மே, 2016

சிலுவையை பற்றிய உண்மைகள்

சிலுவையை பற்றிய அரிய உண்மைகள்: 
சிலுவையை பற்றிய உண்மைகள் சிலுவையை பற்றிய அரிய உண்மைகள்:
"இயேசு கிறிஸ்து சுமந்த சிலுவையின்
எடை-150 கிலோ
நீளம்-15 அடி
அகலம்-8 அடி"
------------------------------------------
சரீர்த்தில் அறையப்பட்ட 🔩ஆணியின் நீலம்-8
அங்குலம்
அகளம்-3/4 அங்குலம்
------------------------------------------
இயேசுவை பற்றி:
அவருடைய உயரம்:-
5அடி 11அங்குலம்
அவருடைய எடை: 85கிலோ
------------------------------------------
இயேசுவின் பாடுகளை பற்றி:
"இயேசு கிறிஸ்து நடந்து வந்த போது 3
முறைத் தடுமாறி கீழே விழுந்திருக்கிறார்"
=====================
17மணி நேரம் தண்ணீர் இல்லாமல்
அவதிப்பட்டிருக்கிறார்
------------------------------------------
அவர் சரீரத்தில் மொத்தம் 5480 காயங்கள்
ஏற்பட்டிருக்கின்றன
=====================
அவருடைய முதுகில் ஏறத்தாழ 150 ஆழமான
காயங்கள் இருந்தன
------------------------------------------
அவருடைய தலையை கிளித்து 17 முட்கள்
உள்ளே சென்றன
=====================
அவருடைய உடலில் இருந்து 6.5 லிட்டர் இரத்தம்
கசிந்தது
------------------------------------------
இயேசு கிறிஸ்துவை எருசலேம் வீதி
வழியாக 350 சேவகர்களும், 50குதிரை
வீரர்களும் இழுத்துச் சென்றனர்
=====================
யூத கால அட்டவணையின் படி "அக் அபூர்வே
கோன்ஜீதா 785 நிசான்15அன்று மரித்தார்; நாம்
பின்பற்றும் கால அட்டவணையின்படி
கிபி 30ஆம் ஆண்டு ஏப்ரல்7ஆம் தேதியிலே
மரித்தார்
------------------------------------------
➕சிலுவையிலுள்ள INRI எழுத்து லத்தீன்
வார்த்தை; அதின் அர்த்தம்;
.
I-IESUS
N-NAZARINE
R-REXO
I-IDONEUS
இவ்வார்த்தையின் பொருள்: "நசரேயனாகிய
இயேசு யூதருக்கு ராஜா
=====================
இயேசுவின் சீஷர்களில் ஒருவர்:
மருத்துவராகிய லூக்கா இயேசு மரித்ததற்கு
சான்றிதழ் வழங்கினார

ஜாண் பன்னியன் வாழ்க்கை வரலாறு

பரிசுத்தவான்களின் வாழ்க்கை வரலாறுகள்
ஜாண் பன்னியன் வாழ்க்கை வரலாறு
ஜாண் பன்னியன் (1628 - 1688)


"பன்றியானது எவ்வளவுக்கு எவ்வளவு கொழுப்பாய் இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது சேற்றை நாடுகிறது. எருது எவ்வளவுக்குக் கொழுத்திருக்கிறதோ அவ்வளவுக்கு அது கும்மாளம் போட்டுக்கொண்டு கொலைக் களம் போகிறது. சிற்றின்ப பிரியன் எவ்வளவுக்கு சுக ஜீவியாக இருக்கின்றானோ அவ்வளவுக்கு அவன் தீமையின் மேல் நாட்டம் கொள்ளுகின்றான். பட்டு கட்டி பகட்டாய்த் திரிய வேண்டும் என்று பெண்கள் பெரும்பாலும் ஆசைப்படுகின்றார்கள். தேவனுடைய பார்வைக்கு மதிப்பைக் கொடுக்கும் இலட்சணா அலங்காரமே பெண் அலங்காரம். ஒரு வருஷம் முழுவதிலும் ஓய்வில்லாமல் விழித்திருப்பதிலும் ஒரு இரவு கண் விழித்திருப்பது லேசான காரியம். அப்படியே மோட்ச பாக்கியம் பெறும்படி முடிவுபரியந்தம் பக்தியை விடாதிருப்பதிலும் ஆரம்பத்தில் கொஞ்ச காலம் பக்தியாய் இருப்பது இலகுவான காரியம். எந்த மாலுமியும் கடலில் கடும் புயல் அடிக்கையில் அற்ப பிரயோஜனமுள்ள பொருட்களை மனதார கடலில் எறிகிறது உண்டு. ஆனால் முதல்தரமான விலையேறப்பெற்ற பொருட்களை முதலில் எவன்தான் கடலில் எறிவான்? தேவனுக்குப் பயப்படாதவனே அல்லாமல் வேறொருவனும் அப்படிச் செய்யான். ஒரு சிறிய பொத்தல் (துவாரம்) பெருங்கப்பலையும் ஆழ்த்திப்போடும். ஒரு சிறிய பாவம் பாவியை நிர்மூலமாக்கிவிடும். சிநேகிதனை மறக்கிறவன் நன்றி கேடன். ஆனால் தன் இரட்சகரை மறக்கிறவனோ தன்னை நாசமாக்குகிறான். பாவத்திலே ஜீவித்துக்கொண்டு பரலோக பாக்கியம் பெற்றுக்கொள்ளுவேன் என்று எதிர்பார்க்கிறவன் முட்பூண்டுகளை விதைத்து நவதானியங்களை கழஞ்சியத்தில் சேர்ப்பேன் என்று நினைக்கிறவனுக்கு ஒப்பாய் இருக்கிறான். ஒருவன் மோட்ச பாக்கிய வாழ்வை பெறவேண்டுமானால் அவன் தன் மரண நாளை சதா தன் நினைவில் கொண்டு அதை ஒரு ஊன்று கோலைப்போல பயன்படுத்தி வரவேண்டும்" (மோட்ச பிரயாண புத்தகத்தில் ஜாண் பன்னியன் எழுதிய வரிகள்)
பரிசுத்த வேதாகமத்திற்கு அடுத்தபடியாகப் போற்றப்படும் "மோட்ச பிரயாணம்" என்ற உலகப்புகழ்பெற்ற கிறிஸ்தவ நூலை எழுதிய ஜாண் பன்னியன் என்ற பரிசுத்த தேவ பக்தன் இங்கிலாந்து தேசத்திலுள்ள பெட்ஃபோர்ட் நகருக்கு ஒரு மைல் தொலைவிலுள்ள எல்ஸ்டவ் என்ற கிராமத்தில் 1628 ஆம் ஆண்டு பிறந்தார். ஒரு காலத்தில் அவரது முந்தைய தலைமுறையினர் நிலச்சுவான்தார்களாக வாழ்ந்தபோதிலும் ஜாண் பன்னியனுடைய நாட்களில் அந்தச் செழுமையும், செல்வாக்கும் பறந்துபோய்விட்டது. ஏழையிலும் ஏழையாக வாழவேண்டிய சூழ்நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருந்தார்.
ஜாண் பன்னியன், தகர டப்பாக்கள், கெட்டில்கள் போன்றவற்றை செய்யும் தகர வேலைக்காரன் தொழிலையே செய்து வந்தார். அவரது தந்தையும் கூட வெண்கல பாத்திரங்களை உருவாக்கும் ஒரு தொழிலாளிதான். ஜாண் பன்னியன் தனது எல்ஸ்டவ் ஊரில் மிகவும் அற்பமான கல்வியை கற்றுவிட்டு தான் கற்ற அந்த சிறிய படிப்பையும் கூட மறந்துவிட்டு நின்றுவிட்டார். மற்ற ஏழைகளின் குழந்தைகளைப்போன்றே ஏழையான எனது கல்வியும் அமைந்தது என்று பன்னியன் கூறுவதுண்டு. எல்ஸ்டவ் கிராமத்திலிருந்த ஜாண் பன்னியனுடைய வீட்டை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
பன்னியன் தன் இளமைக் காலத்தில் தன்னுடன் தனது இளமை நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு தனது கிராமத்தில் காட்டுமிராண்டித்தனமாக வாழ்ந்தார். அவரைப்போல பொய் புரளி பேசவும், சபிக்கவும், கொடுந்தூஷணம் சொல்லவும், ஆண்டவரை நிந்தனை செய்யவும் அவருக்கு இணையாக எவரும் இருக்க இயலாது. கண்ணிகள் வைத்து பட்சி பறவைகள் போன்றவற்றை வேட்டையாடுவது, மற்றவர்களின் பழத்தோட்டங்களை கொள்ளையிடுவது போன்றவற்றிலும் அவரது கரம் முதன்மையாக சேர்ந்திருந்தது. தங்கள் ஊர் தீயவர் கூட்டத்தின் கலகத் தலைவன் தலைமைப்பொறுப்பு தன் வசம்தான் இருந்ததாக அவரே சொல்லுவார். எல்ஸ்டவ் ஊரில் அனைவராலும் இழிவாகக் கருதப்பட்ட கற்பு நெறி தவறிய பெண்கள் கூட ஜாண் பன்னியனை காரி உமிழ்ந்து அருவெறுத்து பேசும் எல்லைக்கு அவரது நடத்தை சென்றது. தனது தீய கூட்டாளிகளுடன் சேர்ந்து நடனம் ஆடுவது அவருக்கு மிகவும் விருப்பமாகும். ஜாண் பன்னியன் படிக்கும் புத்தகங்கள் எப்பொழுதும் காதல் புத்தகங்களாகவேதான் இருக்கும். ஆனால், கர்த்தருடைய கிருபையால், அவர் ஒருக்காலும் விபச்சாரம், வேசித்தன பாவங்களில் விழவில்லை. சலங்கை மணிகளை கால் கரங்களில் கட்டிக்கொண்டு விளையாடுவது போன்ற விளையாட்டுகளை அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவார். கர்த்தருடைய பரிசுத்த ஓய்வுநாட்களில் "டிப்-காட்" என்ற ஒரு விளையாட்டை அவர் ஆர்வமாக விளையாடுவதுண்டு. "டிப்-காட்" என்பது நம் தமிழ் நாட்டில் சிறுவர்கள் விளையாடும் "கிட்டிப்புள்" என்ற "குச்சி-கம்பு" விளையாட்டாகும். இரு பக்கமும் கூர்மையாக சீவப்பட்ட ஒரு சிறிய குச்சியை தரையில் வைத்து கடினமான ஒரு சிறிய கட்டையால் தரையில் கிடக்கும் குச்சியின் ஒரு ஓரத்தை அடித்து எழுப்பி அடுத்த அடியால் அதனை தூரமாக செல்லப்பண்ணுவார்கள். அது மிகவும் சுவையான விளையாட்டாகும். அந்தக் கூர்மையான குச்சி அடிபட்டு எழுந்து செல்லும். அந்தக் குச்சியை பிடித்துவிட்டால் அதை அடித்த நபர் ஆட்டத்திலிருந்து நீக்கப்படுவார். அந்த விளையாட்டின் காரணமாக தங்கள் கண் பார்வையை இழந்து குருடரான சிறுவர்கள் பலர் உண்டு.

மரணத்தின் நிச்சயமான பிடிகளிலிருந்து
பாதுகாத்த தேவ கரம்
ஜாண் பன்னியன் மரணத்தின் பிடியிலிருந்து பல தடவைகளிலும் கர்த்தரால் அற்புதமாகப் பாதுகாக்கப்பட்டிருக்கின்றார். ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளாத அந்த நாட்களில் அவருக்கு மரணம் சம்பவித்திருந்தால் நிச்சயமாக அவர் நரகத்துக்குத்தான் சென்றிருக்க வேண்டும். எனினும் தேவனுடைய அநாதி கிருபை அவரைப் பாதுகாத்தது. ஒரு சமயம் மலைகளுக்கு இடையேயுள்ள குறுகலான கடற்கழியில் விழுந்து நிச்சயமான மரணத்தின் பிடியிலிருந்து அவர் காப்பாற்றப்பட்டார். பெட்போர்ட் நகரத்திலுள்ள நதியில் படகிலிருந்து ஒரு தடவை தவறி விழுந்தும் நீரில் மூழ்கிவிடாமல் கர்த்தரால் அற்புதமாக காக்கப்பட்டார். ஒரு தடவை அவர் தனது நண்பனுடன் வயல் வெளியில் நின்று கொண்டிருக்கையில் ரஸ்தாவில் சென்று கொண்டிருந்த ஒரு பெரிய விஷமுள்ள கட்டு விரியன் பாம்பைக் கண்டார். கையில் நல்ல வலுவான கம்பு இருந்ததால் விரைந்து ஓடிச்சென்று அதை முதுகில் பலமாக அடித்து அதை ஓட இயலாமல் செய்தார். அத்துடன் அவர் நிற்கவில்லை. தனது கம்பால் அதின் வாயைத்திறந்து அதின் விஷப்பல்லை தனது மதியீனத்தால் பிடுங்கி எடுக்க முயற்சித்தார். தனது முழுமையான முட்டாள்தனத்தால் தனது சாவை ஒரு நொடிப்பொழுதில் தனக்கு வரவழைத்துக் கொள்ள இருந்த இடத்தில் அவரை அதிகமாக நேசித்த அவருடைய அன்பின் தேவனுடைய கரம் அவரை அதிசயமாகப் பாதுகாத்துக்கொண்டது.
பன்னியன் தனது வாழ் நாள் முழுவதும் தன் ஆண்டவருக்கு நன்றி ஸ்தோத்திரம் ஏறெடுத்துக்கொண்டே இருக்கத்தக்கதான ஒரு அசாதாரண சம்பவம் அவரது வாழ்வில் நிகழ்ந்தது. அப்பொழுது அவர் ராணுவத்தில் இருந்தார். ஒரு இடத்தை அவரது படைப் பிரிவு முற்றுகையிட வேண்டுமென்பது மேலிடத்து கட்டளை. அவர் அதற்கு ஆயத்தமாகி போக தயாராகிக் கொண்டிருந்தபோது அவருடைய ஸ்தானத்தில் அவரது கூட்டாளி ஒருவன் அவருடைய சம்மதத்துடன் சென்று முற்றுகையிட்ட இடத்தில் காவலாளியாக நின்று கொண்டிருந்தான். அப்படி நின்று கொண்டிருந்த அவனது தலையை எதிரியின் நாட்டுத் துப்பாக்கியிலிருந்து வந்த குண்டு ஒன்று துளைத்துச் சென்றுவிட்டது. அந்த இடத்திலேயே அவன் துடிதுடித்து மாண்டான். தான் துடிதுடித்துச் சாக வேண்டிய இடத்தில் தனது நண்பன் மடிந்ததை அவர் மிகுந்த கண்ணீரோடு நினைவுகூர்ந்தார். இவைகள் எல்லாம் நடைபெற்றபோதினும் பன்னியன் மனந்திரும்பாமல் இன்னும் தன்னைக் கடினப்படுத்தி வாழ்ந்து கொண்டும், தேவனுடைய கிருபைக்கும், இரக்கத்துக்கும், அன்புக்கும் எதிராக கலகம் பண்ணிக் கொண்டும் தனது இரட்சிப்பின் காரியத்தைக் குறித்து மிகவும் அசட்டை செய்து கொண்டும் தனது காலத்தை செலவிட்டுக் கொண்டிருந்தார்.

தேவனிடமிருந்து வந்த கிருபையின் எச்சரிப்புகள்:
ஜாண் பன்னியன் சிறு வயதிலிருந்தே பயங்கரமான கனவுகளைக் கண்டு வந்தார். ஆண்டவருடைய இரண்டாம் வருகை வருவதைப் போலவும், ஆயத்தமானோர் அவரால் மத்திய ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதையும், பாவத்தில் ஜீவிக்கும் அவர் தேவனால் கைவிடப்படுவதையும் கண்டு படுக்கையில் அலறுவார். அவரது பாவச் செயல்கள் அதிகரிக்க, அதிகரிக்க அவர் காண்கின்ற சொப்பனங்களும் அவரை கதி கலங்கப்பண்ணுவதாக இருந்தன. சாத்தானாம் பிசாசு அவரை சங்கிலிகளால் கட்டி நரக பாதாளத்தில் தள்ள அவனது கரங்களில் கொண்டு வந்த இரும்பு சங்கிலிகளின் சலசலக்கும் ஓசையைக் கேட்டு ஒரு சொப்பனத்தில் அவர் வேர்த்து வியர்த்து நடுநடுங்கி திகைத்து எழும்பினார். தனது மற்றொரு சொப்பனத்தில் அடித்தளமே காணப்படாததான நரக தீச்சூளை தனக்கு முன்பாக திறந்திருப்பதைப் பார்த்து ஓலமிட்டுப் புலம்பினார்.
தான் மனந்திரும்ப வழி வகுத்துக்கொடுத்த ஒரு சம்பவத்தை ஜாண் பன்னியனே தமது சொந்த வார்த்தைகளால் நமக்கு விளக்குகின்றார்:- "கர்த்தருடைய பரிசுத்த ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டியதன் அவசியத்தை அன்று குருவானவர் ஆலயத்தில் அத்தனை கண்டிப்பாகப் பேசினார். அந்த நாளில் வேலை செய்வதோ, விளையாடுவதோ மற்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் பொழுதைப் போக்குவதோ கண்டிப்பாகக் கூடாது என்று திட்டமும் தெளிவுமாக அவர் பேசினார். "அவரது தேவச்செய்தி என் உள்ளத்தைத் தொட்டது. எனது பாவக்குற்றங்களை உணர்ந்து இனிமேல் ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு வீட்டுக்கு வந்த நான் நன்றாக சாப்பிட்டுவிட்டு உணர்வற்ற மிருகம் போல "டிப்-காட்" விளையாட்டு விளையாட தெருவுக்குச் சென்று தீவிரமாக எனது ஆட்டத்தில் ஈடுபட்டிருந்தேன். எனக்கு முன்னால் தரையில் கீழே கிடந்த இருபுறமும் கூர்மையான குச்சியை எனது கரத்திலிருந்த கடினமான சிறிய கட்டை கம்பால் ஒரு தடவை அடித்து, மேலே எழும்பிய அந்தக் குச்சியை அடுத்த அடியால் வெகு தொலைவுக்கு செலுத்த முயன்றபோது "உன்னுடைய பாவங்களை விட்டுவிட்டு மோட்சம் செல்லுவாயா? அல்லது பாவங்களைச் செய்து நரக பாதாளம் செல்லப்போகின்றாயா?" என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் கூர்மையான அம்பைப்போல எனது இருதயத்தை ஊடுருவிச் சென்றது. என்னோடு பேசிய ஆண்டவரின் பரலோக வார்த்தையால் நான் தாக்குண்டு இனி பாவத்தில் நீடித்தால் அழிவே நமது பங்காகிவிடும் என்ற பயத்தால் நான் இரட்சிப்பைத் தேட ஆரம்பித்தேன்" என்கின்றார் ஜாண் பன்னியன்.

ஜாண் பன்னியன் இரட்சிப்பைக் கண்டடைந்தது
ஜாண் பன்னியன் ஒரு தேவ பக்தியுள்ள ஏழை மனிதரின் மகளை திருமணம் செய்தார். அந்தப் பெண்மணி தன்னுடன் சீதனமாகக் கொண்டு வந்த பொருட்கள் ஒரு சாப்பிடும் தட்டும் ஒரு கரண்டியுமாகும். அத்துடன் அந்தப் பக்தியான பெண் இரண்டு அருமையான கிறிஸ்தவ ஆவிக்குரிய புத்தகங்களையும் கொண்டு வந்திருந்தார்கள். "பக்தி வாழ்வை அப்பியாசித்தல்" "மனிதனை பரலோகத்துக்கு அழைத்துச் செல்லும் பாதை" என்ற அந்த இரண்டு புத்தகங்களும் பாவத்தில் ஜீவித்த பன்னியனை பக்தி வாழ்வுக்கு அடி எடுத்து வைக்க பெரிதும் கை கொடுத்து உதவின. எனினும், இந்தப் புத்தகங்கள் மாத்திரம்தான் அவரை இரட்சிப்புக்குள் வழிநடத்தினது என்று நாம் சொல்ல இயலாது.

பரிசுத்த குருவானவர் ஜாண் ஹிஃபோர்ட்
ஜாண் பன்னியனை ஆண்டவருடைய இரட்சிப்பின் நிச்சயத்துக்குள்ளும், மறுபடியும் பிறந்த பரலோக அனுபவத்துக்குள்ளும் வழிநடத்தியவர் பெட்ஃபோர்ட் நகரத்துப் பரிசுத்த குருவானவர் ஜாண் ஹிஃபோர்ட் என்பவராவார். ஜாண் ஹிஃபோர்ட் தனது வாழ்க்கையை ஒரு போர் வீரனாக ஆரம்பித்தார். வாழ்வில் அவர் துஷ்டனும், துன்மார்க்கனும், சூதாட்டக்காரனும், ஊறிப்போன குடிகாரனுமாக இருந்தார். ஊதாரித்தனமாக வாழ்ந்த அவருடைய வாயிலிருந்து கடல் மடை திறந்தது போல ஆணையிடுதல்கள் அவலட்சணமான தூஷண வார்த்தைகளோடு புறப்பட்டு வரும் என்று அவரை அறிந்தவரான ராபர்ட் சவுதே என்பவர் கூறுகின்றார். ஜாண் ஹிஃபோர்ட் தான் வாழ்ந்த பெட்ஃபோர்ட் பட்டணத்திலுள்ள பியூரிட்டான்கள் (Puritans) என்று அழைக்கப்பட்ட பிராட்டஸ்டண்ட் பரிசுத்த பக்தர்களை இம்சிப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அவர்களின் தலைவனான அன்றோணி ஹாரிங்டன் என்பவரை கொலை செய்ய அவர் வெகுவாக முயற்சித்தார். தெய்வாதீனமாக அந்த பக்தன் கர்த்தரால் காக்கப்பட்டார்.
இங்கிலாந்தில் உள் நாட்டுப் போர் நடந்த சமயம் ஜாண் ஹிஃபோர்ட் அரசருடைய படையில் சேர்ந்திருந்தார். மன்னருக்கெதிரான படையின் தளபதி ஒருவன் ஜாணை எதிர்பாராதவிதமாக கைது செய்து அவருடன் சேர்ந்த சிலரையும் அடுத்த நாள் தூக்கிலிட்டு கொல்ல பாதுகாப்பான ஒரு இடத்தில் கொண்டு வைத்திருந்தான். அதைக் கேள்விப்பட்ட ஜாண் ஹிஃபோர்டின் உடன் பிறந்த சகோதரி தனது உயிரையும் துச்சமாக மதித்து அவர் சிறை வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு நள்ளிரவு நேரம் சென்றார். தனது சகோதரனை பாதுகாத்துக் கொண்டிருந்த காவலர்கள் நன்கு மதுபானம் குடித்து மயங்கிக்கிடந்த அந்த நேரத்தில் அவரை ஓசைப்படாமல் அழைத்து வந்துவிட்டார். அடுத்து வந்த மூன்று நாட்கள் ஜாண் ஹிஃபோர்ட் தனது உயிரைப் பாதுகாத்துக் கொள்ள ஆழமான ஒரு நாற்ற சாக்கடைத் தண்ணீருக்குள் மூழ்கி இருக்க வேண்டியதானது. ஆண்டவரின் பாதுகாவலின் கரங்கள் நிச்சயமாக அவரோடு இருந்தபடியால் தான் சந்திக்க வேண்டிய முழு நிச்சயமான மரண தண்டனையிலிருந்து ஆச்சரியம் அற்புதமாக தப்பிக் கொண்டார்.
அதின் பின்னர் ஜாண் ஹிஃபோர்ட் என்பவர் ராபர்ட் போல்ற்றன் என்ற பரிசுத்தவான் எழுதிய ஒரு பக்தியுள்ள புத்தகத்தை வாசித்து ஆழமான மனந்திரும்புதலுக்குள் கடந்து வந்தார். அதின் பின்னர் அநேகரை நீதிக்குட்படுத்தும் பரிசுத்த குருவானவராக பெட்ஃபோர்ட் பட்டணத்து தேவாலயத்தில் பணி புரிந்தார். இரட்சிப்பைக் கண்டடையும் விஷயத்தில் நிலை தடுமாறிக்கொண்டிருந்த ஜாண் பன்னியனை சில தேவ பிள்ளைகள் தங்கள் குருவானவராகிய ஜாண் ஹிஃபோர்ட்டிடம் அழைத்து வந்து இரட்சிப்பின் வழியையும், மறுபடியும் பிறந்த பரலோக அனுபவத்தையும் கண்டு கொள்ள வகை செய்தனர்.
கர்த்தருடைய இரட்சிப்பைக் கண்டடைந்த ஜாண் பன்னியனை தேவன் தமது வல்லமையான பாத்திரமாக ஆரம்பம் முதலே பயன்படுத்த தொடங்கினார். "ஜாண் பன்னியன் நல்ல உயரமான மனிதர். அவரது தலை முடி சுருள் சுருளாக செந்நிறமாகவும், அவரது கண்கள் பளிச்சிட்டு மின்னுவதாகவும் இருக்கும். அவரது நெற்றி உயரமானதாகவும், அவரது முகப்பார்வை உறுதியானதும், கோபம் கொண்டோனைப்போல காணப்படுவதாயினும் அவர் பேசத் தொடங்கிவிட்டால் அவரில் அன்பும், தாழ்மையும், எளிமையும் பாய்ந்தோட ஆரம்பித்துவிடும். பிரசங்க பீடத்தில் நின்று பன்னியன் பிரசங்கிக்கும்போது அவரது தேவச்செய்தியும், பாவனைகளும் மிகுந்த பக்தி வினயமாக இருக்கும். "தேவனுக்குப் பயப்படாமல் தங்கள் பாவங்களில் வாழ்வோருக்கு அவரது தேவச் செய்தி பயங்கரமான மின்னல் தாக்குதல் போல அத்தனை எச்சரிக்கையாக இருக்கும்" என்று அவரது நண்பர்களில் ஒருவர் கூறினார்.

ஜூவாலித்து எரிந்த அக்கினி பிரசங்கியார்
ஜாண் பன்னியன், ஒரு வேதாகம ஆசிரியரும், பிரசங்கியாருமாவார். ஆனால், அது அவருக்கே தெரியாது. அவர் எந்த ஒரு வேதாகம கல்லூரிக்கும் சென்று திருமறை பயின்றவர் அல்ல. அவர் தேவ வல்லமையால் நிறைந்திருப்பதை அவருடைய தேவச்செய்திகளைக்கேட்ட மக்கள் அவரில் கண்டு அவருக்குத் தெரிவித்தனர். அவர் தனது முயற்சிகளில் கிட்டத்தட்ட நம்பிக்கையிழந்து போகும் கடைசி கட்டம் வரை செல்ல வேண்டியதானது. எரிகின்ற தீச்சூழையின் அக்கினி ஏழு மடங்கு ஜூவாலித்து எரியவும், அதின் ஊடாக தேவன் அவரை கடந்து செல்லவும் பண்ணினார். அந்த அக்கினியின் ஊடாக தேவ குமாரனை அவர் கண்டுகொள்ளும் வரை அவரை அழைத்துச் சென்றார். இறுதியில் அவர் கண்களிலிருந்து செதில்கள் விழுந்தன. ஜாண் பன்னியன் தனது ஆண்டவர் இயேசுவைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.
அவரை அறிந்து அவருடன் ஐக்கியம் கொண்டிருந்த பெட்ஃபோர்டிலுள்ள கிறிஸ்தவ தேவ மக்கள் ஜாண் பன்னியன் மனந்திரும்பிய சாதாரண ஒரு விசுவாசி அல்ல என்றும் வெறுமனே தண்ணீரில் மூழ்கிமட்டும் அவர் ஞானஸ்நானம் எடுத்துக்கொண்டவரல்ல என்றும் பெந்தேகோஸ்தே நாளின் அக்கினி அபிஷேகம் அவரில் அமர்ந்தருப்பதையும் அவர்கள் திட்டமாகக் கண்டு கொண்டார்கள்.
தனது பாதங்களண்டை பக்தி வினயத்தோடு அமர்ந்து தேவனுடைய வார்த்தைகளைக்கேட்க மிகவும் வாஞ்சை கொண்ட மக்களுக்கே மிகவும் மனத்தாழ்மையுடன் ஜாண் பன்னியன் கர்த்தருடைய வார்த்தைகளை விளக்கிக் கூறுவார். அதைச் செய்ய விரும்பும் மக்கள் ஜாண் பன்னியனை முதலாவது மிகவும் வேண்டி விரும்பி வற்புறுத்திக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். பெருங்கூட்டங்களில் தேவனுடைய செய்தியைக் கொடுப்பதைவிட சொற்பமாகக் கூடி வரும் சிறு சிறு கூட்டங்களில் பேசவே அவர் அதிகமாக விரும்புவார். எனினும், இரண்டு பெரிய தேவாராதனைக் கூட்டங்களில் அவர் ஒழுங்காக பேசி வந்தார். அவருடைய பிரசங்கங்களைக் கேட்ட மக்கள் தங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தருக்கு நன்றி கூறி அவரைத் துதித்து மகிமைப் படுத்தினார்கள்.
எந்த ஒரு தீர்க்கத்தரிசிக்கும் அவனது சொந்த ஊரில் கனம் இல்லை என்பதை அறிந்திருந்த காரணத்தினாலோ என்னவோ ஜாண் பன்னியன் தனது சொந்த இடங்களான எல்ஸ்டவ் மற்றும் பெட்ஃபோர்ட் இடங்களில் அதிகமாகப் பிரசங்கித்ததாகத் தெரியவில்லை. ஆனால், சுற்றியுள்ள பல இடங்களிலும் அவர் பிரசங்கித்து திரளான மக்களை கர்த்தரண்டை வழிநடத்தினார். அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட தேவனுடைய வார்த்தைகளைக்கேட்ட மக்கள் அந்த நாட்களில் சமீபத்திலும், தூரத்திலுமாக இருந்து வந்து நூற்றுக்கணக்கில் திரண்டனர். "மனுமக்களின் பாவங்களுக்கு எதிராகவும், அந்தப் பாவங்களின் காரணமாக அவர்கள் சந்திக்கப்போகும் பயங்கரமான நித்திய நியாயத்தீர்ப்பினை நினைத்தவனாகவும் நான் இரண்டு வருடங்கள் அழுதுகொண்டே சுற்றித்திரிந்து சுவிசேஷத்தைப் பிரசங்கித்தேன்" என்று ஜாண் பன்னியன் ஒரு தடவை கூறினார்.
"நான் பிரசங்கிக்கும்போது என் இருதயம் அடிக்கடி "தேவனே, உம்முடைய வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருக்கும் உம்முடைய ஜனங்கள் ஆத்தும இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளுவார்களாக" என்று தனக்குள்ளாக கூக்குரலிடும்" என்று அவர் சொல்லியிருக்கின்றார்.
தேவன் அவருடைய ஊழியத்தை ஆசீர்வதித்து தம்முடைய தாசனை தேவனுடைய வசனங்களைக் குறித்த ஆழமான அனுபவங்களுக்குள் வழிநடத்திச் சென்றார். பரிசுத்த ஆவியானவர் தனக்கு எதைப்போதித்தாரோ அதையே அவர் தேவனுடைய ஜனங்களுக்குப் பிரசங்கித்தார். மக்களுக்கு தேவனுடைய செய்தியைப் பிரசங்கிக்கும்போது மெய்யாகவே ஒரு தேவ தூதன் தன்னருகில் நின்று கொண்டு தன்னைப் பெலப்படுத்தி, தன்னை ஊக்கப்படுத்திக்கொண்டிருப்பதை தான் நன்றாக உணர்ந்து கொள்ள முடிவதாக அவர் ஆச்சரியத்துடன் சொல்லுவார். தனது பிரசங்கங்களில் தான் பேசிய சத்தியங்களை குறித்து தான் நம்புவதாகவோ அல்லது விசுவாசிப்பதாகவோ அல்லது இப்படித்தான் இருக்கும் என்று அவர் சந்தேகப்பட்டுச் சொல்லாமல் தான் கொடுத்த சத்தியம் மெய்யான தேவ சத்தியமே என்று உறுதியிட்டுப் பேசுவார்.
மக்களுக்கு தான் பிரசங்கிக்கப்போகும் பிரசங்கங்களை அவர் முன்கூட்டியே எழுதி ஆயத்தம் செய்து அதை மிகவும் கவனமாக வாசித்துக்கொள்ளுவார். எந்த ஒரு நிலையிலும் ஆயத்தமில்லாமல் அவர் பிரசங்கபீடம் ஏறமாட்டார். பிரசங்கித்திற்கான குறிப்புகள் அவர் கைவசம் இருக்கும். தனது பிரசங்கங்களில் அரசியல் சம்பந்தமான எந்த ஒரு விஷயத்தையும் அவர் குறிப்பிடுவதில்லை. "தனது பிரசங்கங்களின் குறிப்புகளை எல்லாம் யாராவது விரும்பிக்கேட்கும் பட்சத்தில் அவைகளைக்கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், அவைகள் எல்லாம் ஆத்துமாக்களின் இரட்சிப்பையே மையமாக கொண்டிருப்பதை அவர்கள் காண முடியும்" என்று அவர் ஒரு தடவை சவால் விட்டுப் பேசினார்.
பன்னியன், தான் மக்களுக்கு பிரசங்கிக்கும் தேவச்செய்திகளை பிரசங்கம் செய்து முடிந்ததும் பத்திரமாக எழுதி வைத்துக்கொள்ளும் சிறந்த பழக்கத்தை தன் வசம் வைத்திருந்தார். அதின் காரணமாக அவருடைய எழுத்துக்கள் புத்தகங்களாக அச்சிடப்பட்டு நமக்குக் கிடைத்திருக்கின்றன. "நஷ்டப்பட்ட பாவியின் துயரப் புலம்பல்கள்" என்ற நரகத்திலிருந்து ஐசுவரியவான் எழுப்பிய வியாகுலங்களை ஐசுவரியவான்-லாசரு சரித்திரத்திலிருந்து (லூக்கா 16 ஆம் அதிகாரம்) அதை வாசிக்கும் எவரும் நடுநடுங்கும் விதத்தில் பிரமிக்கத்தக்கவிதமாக எழுதியிருக்கின்றார். அப்படி அவர் தனது பிரசங்கங்க குறிப்புகளைக் கொண்டு எழுதிய புத்தகங்கள் அநேகமாகும். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.
ஜாண் பன்னியன் விரும்பியிருப்பாரானால் இங்கிலாந்து தேசத்திலேயே ஒரு புகழ்பெற்ற பிரசங்கியாராக ஆகியிருக்கலாம். அவரை வந்து பேசும்படியாக இங்கிலாந்தின் பெரிய பெரிய பட்டணங்களிலிருந்த தேவாலயங்கள் எல்லாம் அவருக்கு அழைப்புகள் வந்தன. ஆனால் தேவ மனிதர் அவைகளை எல்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை. கூட்டத்திற்கு வந்து பேசுவதற்கு முன்னால் அதற்கான பணத்தை திட்டமாகப் பேசிச்செல்லும் பிரசங்கியார்களைப்போல இல்லாமல் அப்படிப்பட்ட கூட்டங்களில் சென்று பேசுவதானால் தனக்கு அதிகமான பணம் கிடைக்கும் என்றும் அதினால் தனது தற்போதைய எளிய நிலை மாறி ஐசுவரியவானாக உயர்ந்துவிடும் என்றும் அதின் மூலம் தான் பெற்ற தேவனுடைய அளவற்ற கிருபையின் ஐசுவரியத்தை இழக்க நேரிடும் என்று அஞ்சி அப்படிப்பட்ட பெருங்கூட்ட அழைப்புகளை எல்லாம் அவர் திட்டமாக மறுத்து உதறித் தள்ளினார்.
உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் அந்த நாட்களில் துணை வேந்தராக (Vice-Chancellor) இருந்த மாமேதையும், ஒப்பற்ற ஞானவானும், சிறந்த தேவ பக்தனுமான ஜாண் ஓவன் என்பவரிடம் அந்நாட்களில் இங்கிலாந்து தேசத்தை அரசாண்டு கொண்டிருந்த 2 ஆம் சார்லஸ் மன்னர் ஒரு சமயம் "ஜாண் பன்னியனுடைய பிரசங்கங்களைக் கேட்க நீங்கள் அடிக்கடி ஏன் செல்லுகின்றீர்கள்? " என்று கேட்டபோது "பெட்போர்ட் தகரக்காரர் (Tinker) ஜாண் பன்னியனைப்போன்று கிறிஸ்து இரட்சகரைப் பிரசங்கிக்கும் திறமையை அவர் என்னிடம் பண்டமாற்று செய்து கொள்ள முடியுமானால் எனக்குள்ள அனைத்து கல்வி ஞானங்களையும், தாலந்துகளையும் நான் அவருக்கு மிகவும் சந்தோசத்துடன் கையளிக்க ஆவலாக இருக்கின்றேன்" என்று மன்னர் வியப்பில் ஆழ்ந்து போகும் வண்ணம் சொன்னார்.

ஜாண் பன்னியனின் சிறைக்கூட வாழ்க்கை
ஜாண் பன்னியனின் 60 ஆண்டு கால பூலோக வாழ்க்கையில் முழுமையான 12 (பன்னிரண்டு) ஆண்டு காலத்தை அவர் தனது கர்த்தருக்காக சிறைக்கூடத்திலேயே செலவிட வேண்டியதாக இருந்தது. அப்படி 12 ஆண்டு கால சிறைவாசத்தை அனுபவிக்க அவர் எத்தனையானதொரு கொலை பாதகச் செயல் செய்திருப்பார் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? இல்லவே இல்லை, தேவனுடைய இரட்சிப்பின் மாட்சிமையான சுவிசேஷ சத்தியத்தை அந்த நாட்களில் இங்கிலாந்து தேச புராட்டஸ்டண்ட் சபையின் தேவாலயங்களில் பிரசங்கிக்க தடை செய்யப்பட்டிருந்தபடியால் தெருக்களிலும், சந்தை வெளிகளிலும், புல்மைதானங்களிலும், பண்ணை வீடுகளின் தானிய சேமிப்பு கிடங்குகளிலும், மக்கள் கூட்டம் எங்கெங்கெல்லாம் காணப்படுகின்றதோ அங்கெல்லாம் சென்று மக்களுக்கு பிரசங்கித்தபடியாலும், இங்கிலாந்து தேச திருச்சபையினர் தங்கள் தேவாலயங்களில் பயன்படுத்தும் "பொதுவான ஜெப புத்தகத்தை" (Common Prayer Book) அவர் ஏற்றுக் கொள்ளாததாலும், அதை பயன்படுத்த மறுத்ததாலும் அந்த நீண்ட கால சிறை வாழ்க்கை அவருக்கு கிடைத்தது.
17 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து தேசத்தின் சிறைக்கூடங்களின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அவர் அடையுண்டு கிடந்த பெட்போர்ட் சிறைக்கூடத்தில் குளிர் காய எந்த ஒரு கணப்பு அடுப்புகளும் இல்லாதிருந்தது. சிறைக் கைதிகள் தரையில் போடப்பட்டிருந்த வைக்கோற் புல்லின் மேல் படுத்திருந்தனர். கழிப்பிட வசதிகளைப் பற்றி நாம் இங்கு குறிப்பிட வேண்டிய அவசியமே இல்லை. அவர் அந்த இருளான சிறைக்கூடத்தில் பட்ட பாடுகளையும், துயரங்களையும் அதிகமாகப் பொருட்படுத்தாமல் தனது வீட்டில் இருந்த மனைவி மற்றும் பிள்ளைகளைப் பற்றித்தான் குறிப்பாக தனது கண் பார்வையை இழந்து குருடாக இருந்த சின்ன மகள் மேரியை எண்ணிக் கலங்கினார். அவர் அடையுண்டு கிடந்த சிறைக்காவலனுக்கு பணம் கொடுப்பதன் மூலமாக சில சிறிய வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. அந்த விசயத்தில் பெட்போர்ட்டிலுள்ள ஜாண் பன்னியனை அதிகமாக நேசித்த அவரது தேவ பக்தியுள்ள நண்பர்களும், கர்த்தருடைய பிள்ளைகளும் சிறைக் காவலர்களுக்கு உதவி செய்து வந்தனர். அதின் காரணமாக அவர் தனது சிறைக்கூட அறையை விட்டுவிட்டு அவ்வப்போது தேவனுடைய சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க பெட்போர்ட்டை சுற்றியுள்ள இடங்களுக்குச் சென்று வந்தார். ஒரு தடவை தேவ தயவால் அவர் லண்டன் பட்டணம் வரை கூட போய் வந்தார். ஆனால் இவை எல்லாவற்றிலும் தேவனுடைய பாதுகாவலின் கரம் அவருடன் கூட இருந்தது என்பதை நாம் மறப்பதற்கில்லை.
ஒரு நாள் இரவில் அவர் தனது மனைவி பிள்ளைகளைப் பார்ப்பதற்காக சிறைக்கூட காவலரால் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். வீடு சென்ற ஜாண் பன்னியன் குடும்பத்தினருடன் ஓரிரு மணி நேரங்கள் இருந்த பின்னர் கர்த்தருடைய ஆவியானவர் அவரை உடனடியாக சிறைக்கூடத்திற்கு திரும்பிச் செல்ல ஏவினார். ஆவியானவரின் தூண்டுதலை உணர்ந்த அவர் மிகவும் விரைவாக தனது சிறைக்கூட அறைக்கே திரும்பி வந்துவிட்டார். அவர் வந்து சேர்ந்த சிறிது நேரத்திற்குள்ளாக அவரது எதிரிகளான இங்கிலாந்து தேச மன்னரின் ஆட்கள் பட்டணத்தின் உயர்ந்த காவல் துறை அதிகாரிகளுடன் சிறைக்கூடத்திற்கு வந்துவிட்டனர். ஜாண் பன்னியன் சிறையில் இருக்கின்றாரா என்பதை கேட்டறிந்த அவர்கள் தாங்களாகவே நேரில் சென்று அங்கு அவர் இருப்பதைக் கண்டு திருப்தியுடன் சென்றனர். அந்த இரவு முழுவதுமே ஜாண் பன்னியனை அவருடைய வீட்டில் இருந்துவிட்டு அடுத்த நாள் காலையில்தான் வருவதற்கு சிறைக்காவலர் கேட்டிருந்தார். ஆனால், தேவ நடத்துதல் அவரை உடனே திரும்பி வரச் செய்ததால் பெரிய தண்டனையிலிருந்து அவர் தப்பிக் கொள்ள முடிந்தது. தனக்கு விரோதமாக இங்கிலாந்து தேச மன்னரே இருப்பதை உணர்ந்த பன்னியன் எப்படியாவது ஒரு நாள் தனக்கு நிச்சயமாகத் தூக்குத் தண்டனை கிடைக்கும் என்பதை எதிர்நோக்கியிருந்தார். ஆனால், தேவன் அவரை தூக்குத் தண்டனையிலிருந்து காத்துக்கொண்டார். சிறைக்கூடத்தில் இருக்கும்போது அவர் தனது கரிய நிழல் உருவத்தை சுவரில் பார்க்கும்போதெல்லாம் தன்னை துரிதமாகச் சந்திக்கப் போகும் மரணமே அது என்று எண்ணிக் கொண்டிருந்ததாக எழுதியிருக்கின்றார்.
பெட்போர்ட் சிறைக்கூடத்திலிருந்த ஜாண் பன்னியனுக்கு கர்த்தருடைய பரிசுத்த வேதாகமமும், ஜாண் ஃபாக்ஸ் என்ற பரிசுத்த பக்தன் எழுதிய "இரத்த சாட்சிகளின் வரலாறு" (Fox's Book of Martyrs) என்ற புத்தகமும், மார்ட்டின் லூத்தர் எழுதிய வேத வியாக்கியான புத்தகமும் மிகவும் பயனுள்ளவைகளாக இருந்தன. தனது சிறைவாச காலத்தின் பெரும் பகுதியை அவைகளை வாசிப்பதிலேயே அவர் செலவிட்டார். கர்த்தருடைய பரிசுத்த வேதாகமத்தை அவர் எத்தனை தடவைகள் முழுமையாக வாசித்திருப்பார் என்பதைப் பற்றிய தகவல்கள் நமக்கு இல்லாத போதினும் அந்த தேவ மனிதர் அதை பல நூறு தடவைகள் வாசித்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கர்த்தருடைய பரிசுத்த வேதாகமத்திற்கு அடுத்தபடியாக கிறிஸ்தவ உலகம் போற்றும் "மோட்ச பிரயாணம்" என்ற பரிசுத்த பிரபந்தத்தை இந்த பெட்போர்ட் சிறைக்கூடத்தில் இருந்தபோதுதான் ஜாண் பன்னியன் எழுதினார். வேதாகமத்தைப் போன்றே மோட்ச பிரயாணமும் உலகத்தின் அநேக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதின் ஒரே காரணம், மோட்ச பிரயாணம் புத்தகம் முழுமையும் தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகளால் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. மோட்ச பிரயாண புத்தகத்தை வாசிப்போர் பரிசுத்த வேதாகமத்தின் நறுமணம் அதின் ஒவ்வொரு பக்கங்களிலும் வாசனை வீசி பரிமளித்துக் கொண்டிருப்பதை கண்டு கொள்ளலாம். ஜாண் பன்னியன் உயிரோடிருந்த காலத்திலேயே அது பல தடவைகள் அச்சுப் பதுப்பிக்கப்பட்டதுடன் அநேக ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டது.
ராட்சத தேவ மனிதரும், பிரசங்க வேந்தருமான சார்லஸ் ஸ்பர்ஜன் என்பவர் மோட்ச பிரயாண புத்தகத்தை 100 தடவைகள் முழுமையாக வாசித்து கர்த்தருக்குள் ஆனந்தித்திருக்கின்றார் என்றால் நமக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது அல்லவா! அந்த பக்த சிரோன்மணி அதைக்குறித்துக் கூறும்போது நீங்கள் "மோட்ச பிரயாணம்" புத்தகத்தில் எந்த இடத்தில் ஊசியால் குத்தினாலும் தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தை என்ற BIBILINEஅதிலிருந்து சுரந்து வருவதை நீங்கள் காணலாம் என்று கூறினார். பூமாலைகள் பின்னும் பூக்கடைக்காரர் வாசமிகும் வண்ண வண்ண மலர்களால் தனது மாலையை உருவாக்குவதுபோல ஜாண் பன்னியன் தமது மோட்ச பிரயாண நூலை முழுமையாக தேவனுடைய வசனங்களால் கோர்வைப்படுத்தியிருப்பதை அதை வாசிக்கும் எவரும் எளிதில் கண்டு கொள்ளலாம்.
ஜாண் பன்னியன் சிறைக்கூடத்தில் இருந்த நாட்களில் வேறு அநேகம் புத்தகங்களையும் எழுதினார். அதில் "திருப்போர்" (HOLY WAR) என்ற புத்தகமும் சிறப்பான ஒன்றாகும். பெட்போர்ட் சிறைக்கூடத்தில் இருந்த நாட்களில் அவர் தனது மனைவி, பிள்ளைகளை காப்பாற்ற சப்பாத்துக்களைக் கட்டும் நல்ல அழகான வண்ண வண்ண ஜரிகை நாடாக்களை நிறைய எண்ணிக்கையில் தயாரித்து அவைகளை தனது கண்ணற்ற கபோதி மகளான மேரியைத் தன்னருகில் நிறுத்திக்கொண்டு தான் அடையுண்டு கிடந்த சிறைக்கூடத்தின் பிரதான நுழைவு வாயிலில் நின்று கொண்டு தெருவில் போகின்ற மக்களுக்கு விற்பனை செய்து அதின் மூலமாகக் கிடைத்த பணத்தைக்கொண்டு தன் மனைவி பிள்ளைகளைக் காப்பாற்றினார். தனது குருடான மகள் மேரி இறந்தபின்னர் அவர் மட்டும் தனியாக நின்று சப்பாத்து நாடாக்களை விற்பனை செய்தார். பெட்போர்ட் நதியையும், ஜாண் பன்னியன் சிறை வைக்கப்பட்டிருந்த நதியின் பாலத்துக்கு அருகிலுள்ள பெட்போர்ட் சிறைக்கூடத்தையும் நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
தான் சிறையிலிருந்த நாட்களில் தன்னோடு சிறையில் இருந்த கைதிகளுக்கும் தேவனுடைய சுவிசேஷத்தை அவர் எந்த ஒரு அரசாங்க தடையும் இல்லாமல் தாராளமாகப் பிரசங்கித்தார். இறுதியாக அவர் 1676 ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். அவர் சிறையுண்டு கிடந்த சிறைக்கூடம் 1801 ஆம் ஆண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அந்தச் சிறைக்கூடத்தின் மூன்று அடுக்குகள் கொண்ட ஓக் மரத்திலான பிரமாண்டமான கதவு இந்நாள் வரை லண்டன் பட்டணத்திலுள்ள அருங்காட்சியகத்தில் ஞாபகச்சின்னமாக வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

தேவன் பயன்படுத்தின பரிசுத்த பாத்திரம்
"காண்டா மிருகத்துக்கு ஒத்த பெலன் அவர்களுக்கு உண்டு" (எண் 23 : 22) என்ற கர்த்தருடைய வசனத்தின்படி பன்னியனுடைய பெலன் அபரிதமாக இருந்தது. கர்த்தருடைய நாம மகிமைக்காக அவர் 66 புத்தகங்களை எழுதினார். அவற்றில் சில அநேக நூற்றுக்கணக்கான பக்கங்களைக் கொண்டதாகும். அவர் எழுதிய "மோட்ச பிரயாணம்" என்ற புத்தகம் உலகம் உள்ளவரை அவரது ஆண்டவரது புகழையும், மகிமையையும் பறைசாற்றிக் கொண்டே இருக்கும். அவர் தமது எழுத்து வேலைகளுடன் பல இடங்களுக்கும் ஓடி ஓடி சென்று பிரசங்கிப்பதிலும், போதிப்பதிலும், மக்களுக்கு தேவ ஆலோசனைகள் கூறுவதிலும், ஒரு குருவானவர் என்ற ஸ்தானத்தில் தனது சபை மக்களை சந்திப்பதிலும் தனது காலத்தை செலவிட்டார். தனது சிறைவாசமான 12 ஆண்டுகள் முடிந்த பின்னர் பன்னியன் அடிக்கடி லண்டன் பட்டணம் போய் வந்தார். அங்கு அவருக்கு அநேக கர்த்தருடைய பிள்ளைகள் நண்பர்களாகக் கிடைத்திருந்தனர். லண்டன் மாநகரத்து தலைவரான லார்ட் மேயர் ஷார்ட்டர் அவர்களே பன்னியனுடைய உற்ற நண்பரும், அவருடைய பிரசங்கங்களைக் அதிக ஆவலோடு கவனிக்கும் அன்பராகவும் இருந்தார். லண்டனிலுள்ள பல தேவாலயங்களும் அவரை பிரசங்கிக்க அழைத்தன. ஓய்வு நாட்களில் லண்டனிலுள்ள தேவாலயங்களில் அவர் பிரசங்கித்தால் 3000 பேர்கள் மிக எளிதாக கூடிவிடுவார்கள். தேவாலயங்களில் இடம் போதாத காரணத்தால் அவரது செய்திகளை கேட்க இயலாமல் வீட்டுக்கு துக்கத்துடன் திரும்பிச் செல்லுவோரும் ஏராளம் உண்டு. பன்னியன் பிரசங்கிக்கப் போகின்றார் என்று ஒரு நாளுக்கு முன்னர் அறிவிப்பு கொடுத்தால் தேவாலயம் நிரம்பி வழியும் அளவுக்கு மக்கள் கூடிவிடுவார்கள். கடுங்குளிரான பனி நாட்களிலும் கூட இருள் சூழ்ந்த அதிகாலை நேரம் ஓய்வு நாள் இல்லாத இடை நாளில் கூட 17 ஆம் நூற்றாண்டான அந்த ஜனப்பெருக்கம் இல்லாத காலத்தில் 1200 பேர் வரை கூடிவிடுவார்கள். அவரது பிரசங்கங்களால் ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட மக்களின் தொகை மிகப் பெரிய ஒன்றாகும். கர்த்தருடைய கல்வாரி அன்பை நினைத்து கண்ணீர் விட்டு கதறும் தேவ பக்தன் அவர். கர்த்தருடைய இராப்போஜன பந்தியில் அவர் பங்கு பெறும் போது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தோட தனக்களிக்கப்படும் அப்பத்தையும், திராட்ச ரசத்தையும் புசித்துப் பானம் பண்ணுவார்.
"மோட்ச பிரயாணம்" என்ற அவரது புத்தகம் அவரது வாழ்நாட் காலத்திலேயே 1,00,000 (ஒரு இலட்சம்) பிரதிகள் விற்பனையானது. 100 மொழிகளுக்கு மேல் அந்த நூலை மொழி மாற்றம் செய்துள்ளனர். பன்னியனுடைய மரணத்துக்குப் பின்னர் அந்தப் பக்தி நூல் எத்தனை லட்சங்கள் அச்சிடப்பட்டு எத்தனை எத்தனை மொழிகளில் விற்பனையாயின என்பது எவராலும் கணக்கிட இயலாத காரியமாகும். கர்த்தருடைய பரிசுத்த வேதாகமத்துக்கு அடுத்த ஸ்தானத்தில் அந்த பரிசுத்த புத்தகம் வைத்துப் போற்றப்படுகின்றது. ஜாண் பன்னியன் மாத்திரம் நினைத்திருந்தால் அவருடைய புத்தகங்களின் விற்பனை மூலமாக கிடைக்கக்கூடிய பதிப்புரிமை (Royalty) மூலமாக கிடைக்கக்கூடிய பணத்தின் மூலமாக ஆடம்பரமான வீடுகளையும், நிலபுலங்களையும், பெருஞ்செல்வத்தையும் சம்பாதித்திருக்க முடியும். ஆனால், அவர் தனது மரணபரியந்தம் ஒரு ஏழை மனிதனாகவே இருந்து இந்த உலகத்தைவிட்டுக் கடந்து சென்றார். தனது பிரசங்கங்களுக்காக அதிகமான பணம் கொடுக்க முன்வரும் பெரிய கூட்டங்களில் அவர் பேசவே மாட்டார். பணத்தை அவர் விரும்பவே இல்லை. அவர் மரிக்கும்போது அவர் விட்டுச் சென்ற செல்வம் வெறும் 42 பவுண்டுகள் 19 ஷில்லிங் மட்டுமேதான்! பன்னியன் தனது முதல் மனைவி இறந்ததும் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இரு மனைவிகளுக்குமாக சேர்த்து 3 ஆண்கள் 3 பெண்கள் இருந்தனர். ஆனால் இன்று அவரது வம்சாவழியில் அவரது கடைசி மகள் சாராள் குடும்பத்தினரே எஞ்சி உள்ளனர்.

"என்னை இழுத்துக் கொள்ளும், இதோ நான்
உம்மண்டை வருகின்றேன்"
1688 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை வேளையானது நல்ல அமைதியாக விடிந்து வந்த வேளையில் இடி முழக்கத்துடன் கூடிய திடீரென்று கொட்டிய பலத்த மழை ஒன்று அந்த அமைதியைக் குலைத்துவிட்ட போதினும் அது சீக்கிரமாகக் கடந்து மறைந்து சென்றுவிட்டது.
வெப்பம் காரணமாக கடந்து சென்ற இரவு மிதமிஞ்சிய புழுக்கமாக இருந்தபடியால் படுக்கையிலிருந்த ஜாண் பன்னியன் மூச்சுவிடுவதற்காகத் தவித்துக்கொண்டிருந்தார். அவர் படுத்திருந்த அறையின் கதவும், ஜன்னல்களும் முழுமையாக திறந்து வைக்கப்பட்டன. அவர் மிகவும் சோர்போடு இருந்தபடியால் அவரது கரங்கள் பெலனிழந்து தானாக அவ்வப்போது அவரது கட்டுப்பாட்டை மீறி படுக்கைத் துணிகளில் விழுந்து கொண்டிருந்தன. அவருடைய படுக்கைக்கு அருகில் பலசரக்கு வியாபாரி ஜாண் ஸ்ட்ரவிக், தேவ ஊழியர் ஜியார்ஜ் கோக்கின், சீப்புகள் செய்யும் சகோதரன் சார்லஸ் டோ ஆகிய மூவரும் இரவு மழுவதும் நின்று அவரைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.
ஜாண் பன்னியன் படுத்திருந்த ஜாண் ஸ்ட்ரவிக் என்பவரின் வீட்டின் அறையில் மரண தூதனின் பிரசன்னம் நிச்சயமாக உணரப்பட்டபோதினும் பரலோக மகிமையின் காட்சி அந்த அறையில் கூடியிருந்த சிறிய குழுவின் மேல் செட்டைகளை விரித்து அமர்ந்திருந்தது. அவர்களுடைய இருதயங்கள் எல்லாம் பரிசுத்த சந்தோசத்தால் முழுமையாக நிரம்பியிருந்தது. அதின் காரணமாக அந்த பரிசுத்த தேவ மக்கள் மரணத்தின் கூரை உணராமல் மரணத்தை தமது மரணத்தால் ஜெயித்து வெற்றி கொண்ட கிறிஸ்து இரட்சகரின் நிறைவான பிரசன்னத்தை கண்டு கொள்ள முடிந்தது.
ஜாண் பன்னியன் "போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார்" என்ற பரம அழைப்பின் குரலுக்காக மிகவும் பொறுமையோடு காத்துக்கொண்டிருந்தார். ஆயினும் அந்த வேளை இன்னும் வரவில்லை. அவர் தனக்கு அருகில் நின்று கொண்டிருந்த தனது சிநேகிதன் ஜீயார்ஜ் கோக்கின் என்பவரைப் பார்த்து தான் கடைசியாக எழுதின "தேவனுக்கு உகந்த ஜீவ பலி" என்ற புத்தகத்திற்கு தலையங்கம் எழுதிவிடும்படியாக கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். நித்திய அக்கினியாம் நரகத்தை நோக்கி நாசத்தின் வழியில் சென்று கொண்டிருக்கும் அழியும் ஆத்துமாக்களைக் குறித்த எண்ணம் அந்த இறுதி நேரத்திலும் அவரது கண்களை கண்ணீரால் நிரப்புவதாக இருந்தது. அதைக் குறித்து அவர் தனது பரிசுத்த நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தார். இந்த வேளையில் அவர் அருகில் நின்ற அவரது நண்பன் சார்லஸ் டோ அவரது படுக்கையருகில் அவரண்டை வந்து அவரது முகத்துக்கு நேராகக் குனிந்து அவரது கரத்தைத் தூக்கி எடுத்து அன்பொழுக அதைத் தட்டிக் கொடுத்து ஏங்கி ஏங்கி அழுதவராக "சகோதரன் பன்னியன், சகோதரன் பன்னியன், நீங்கள் கடைசியாக எழுதிய உங்கள் புத்தகத்தை ஆவலோடு வாசித்தேன். "கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்" என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய உங்கள் புத்தகத்தை நான் வேதாகமத்துக்கு அடுத்தபடியாக வாசித்து மகிழ்ந்தேன். அதுதான் உங்கள் புத்தகங்கள் யாவற்றிலும் முதன்மையானது என்றும் எண்ணினேன். ஆனால் உண்மையில் உங்கள் புத்தகங்கள் அனைத்தும் அருமையானவைள். அவைகளிலிருந்து பெருமளவிற்கு நான் தேவ சமாதானத்தையும், ஆறுதலையும் பெற்று ஆனந்தித்துக் கொண்டிருக்கின்றேன்" என்று கூறினார்.
தனது முடிவை மிகவும் துரிதமாக நெருங்கிக் கொண்டிருக்கும் ஜாண் பன்னியனுக்கு சார்லஸ் டோ அவர்களின் சற்று நீளமான வார்த்தைகள் சோர்பை அளிப்பதாகவே இருந்திருக்கும். இந்த வேளையில் ஜாண் ஸ்ட்ரவிக் அவர்கள் ஜாண் பன்னியனின் ஒரு கரத்தையும், ஜியார்ஜ் கோக்கின் பன்னியனின் அடுத்த கரத்தையும் அன்பொழுகப் பற்றிப் பிடித்தவர்களாக அவரது படுக்கைக்கு அருகில் முழங்காலில் நின்றனர். அடுத்து சில நிமிடங்களுக்குள்ளாக தங்களுடைய அருமை சகோதரனுக்கு தவிர்க்க முடியாதது நடக்கப் போவதை அவர்கள் எதிர்பார்த்தவர்களாக காணப்பட்டனர்.
சீதோஷ்ண நிலை வர வர தெளிவாகத் தொடங்கியது. இப்பொழுது அது திரும்பவும் நேர்த்தியாகக் காணப்பட்டது. பிரகாசமான சூரிய ஒளிக்கதிர்கள் மரித்துக் கொண்டிருந்த தேவ மனிதரின் அறைக்குள் வெள்ளம் போல பாய்ந்து கொண்டிருந்தது. அந்த சூரிய ஒளி ஜாண் பன்னியனின் முகத்திலும் சூடாகப்பட்டுக்கொண்டிருந்தது. அந்தக் காலை வேளை சூரிய ஒளிக்கதிர்கள் அல்ல, தான் விரைந்து பயணப்பட்டுக் கொண்டிருக்கும் உச்சிதப்பட்டணத்திலிருந்து வரக்கூடிய மகிமையின் பேரொளிக் கிரணங்களையும் அங்கு வாசம் செய்யும் ஒளி மயரூபிகளின் சாயல்களையும், தங்கள் கின்னரங்களைக் கரங்களில் ஏந்தி மா இன்பமாக, இசைக்கின்ற கீதவாத்தியக்காரர்களின் மங்கள கீதங்களையும், அவர்கள் பாடும் பாட்டோசையால் பரலோகமே எதிர் ஒலி கொடுப்பதையும் அவர் கவனித்தார். பரலோகத்தின் ஜொலித்திலங்கும் பெரிய தங்க கதவுகள் அவர் உள்ளே வருவதற்காக திறப்பதையும், உச்சிதப்பட்டணத்தின் திரள் சேனையான பாடகர் குழு "சேனைகளின் தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்" என்று ஆரவாரித்துப் பாடித் துதிப்பதையும், அந்த பரிசுத்தர்களின் கூட்டத்தில் தானும் ஒருவனாகச் சேர்ந்து கொண்டு தன் நேச இரட்சகரை பாடிப்போற்ற வேண்டும் என்ற ஆவல் அவரைப் பலமாக ஏவுவதையும் அவர் உணர்ந்தார்.
இந்த வேளை ஜாண் பன்னியன் தனது இன்பமான குறுகிய நேர நல்ல தூக்கத்திலிருந்து கண் விழித்துக் கொண்டார். தன்னைச் சுற்றி நின்ற தனது பரிசுத்த நண்பர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே நன்றாகப் பார்த்தார். அவர்கள் அவருடைய படுக்கையைச் சுற்றிலும் அவருக்கு மிகவும் சமீபமாக முழங்காலூன்றியிருந்தனர். தாங்கள் அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் அவரைப் பார்த்துக் கேட்டனர். "சகோதரர்களே" என்ற மிகவும் கனிந்த குரலில் "எனக்கு ஒன்றும் தேவையில்லை. கிறிஸ்து இரட்சகரோடு நான் சேர்ந்து கொள்ளுவதே எனக்குப் பேரானந்த பாக்கியம்" என்றார் பன்னியன்.
தனது கரங்களை அன்பொழுகப் பற்றிப் பிடித்திருந்த தனது நண்பர்களின் கரங்களை இப்பொழுது மெதுவாகத் தளர்த்திக் கொண்டார். துறைமுகத்திலுள்ள கப்பல் பூமியோடு தன்னை கட்டி வைத்திருந்த தனது கடைசி நங்கூரத்தை தளர்த்திக்கொள்ளும் வண்ணமாக அவர் தன்னைப்பற்றியிருந்த பூமியின் கடைசிப் பிணைப்பையும் விலக்கிக் கொண்டார். தான் தலை வைத்துப் படுத்திருந்த தலையணையிலிருந்து தனது தலையை சற்று உயர்த்திய பொழுது அவரது நரைத்த தலை முடி சுருள்கள் அவரது தலையைச் சுற்றிலும் அழகாகத் தொங்கிக் கொண்டிருந்தது. அவரது பிரகாசமான நீல நிறக்கண்கள் சூரிய ஒளியில் பட்டுப் பிரகாசிப்பதாக இருந்தது. அவரது கன்னங்கள் வழக்கமான செந்நிற வண்ணத்துடன் காணப்படுவதாக இருந்தது. தனது பந்தயத்தில் ஜெயத்தை சுதந்தரித்துக் கொண்ட வெற்றி வீரன் வீர முழக்கமிடுபவனைப்போன்று ஜாண் பன்னியன் தனது கரங்கள் இரண்டையும் வானத்திற்கு நேராக உயர்த்தி சற்று சப்தமான குரலில் "என்னை இழுத்துக்கொள்ளும், இதோ நான் உம்மண்டை வருகின்றேன்" என்று ஆரவாரித்தார்.
ஆம், பரிசுத்த பக்த சிரோன்மணி ஜாண் பன்னியனின் ஆத்துமா இவ்வண்ணமாக ஜெய கெம்பீர தொனியுடன் தனது ஆண்டவருடைய சமூகத்துக்குப் பாடி பறந்து சென்றது. ஜாண் பன்னியன் மரிக்கும்போது அவரது வயது 60 மாத்திரமேதான் ஆகும். அவர் மரணம் அடைந்த லண்டன் பட்டணத்திற்கு அருகிலிருந்த பன்ஹில் ஃபீல்ட்ஸ் என்ற இடத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டார். அவரது கல்லறையை நீங்கள் இந்தச் செய்தியில் பார்க்கலாம்.
அரசர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடமான (Westminster Abbey) "வெஸ்ட்மின்ஸ்டர் அபி" உள்ள லண்டனில் ஜாண் பன்னியனுக்கு ஒரு ஞாபகார்த்த பலகணி நிறுவப்பட்டுள்ளது. அவர் 12 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்ததும், மோட்ச பிரயாணம் என்ற பரிசுத்த நூலை எழுதியதுமான பெட்போர்ட் நகரத்தில் பன்னியனுடைய உருவச் சிலை எழுப்பப்பட்டு அங்குள்ள அருங்காட்சியகத்தில் அவரது பொருட்கள் பலவும் வைக்கப்பட்டுள்ளன. பன்னியன் தனது மோட்ச பிரயாண புத்தகத்தில் வியாக்கியானி முனிவர் வீட்டில் மோட்ச பிரயாணி கிறிஸ்தியான் கண்டதான ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த காட்சியில் வரும் மனித உருவத்தை பெட்போர்டில் செதுக்கி வைத்துள்ளனர். அந்த மனிதன் பரலோகத்தை அண்ணாந்து பார்த்த வண்ணமாக இருப்பதையும், உலகத்தையும், அதின் மேன்மைகளையும் அற்பமும் குப்பையுமாக எண்ணி தன் கால்களுக்கு கீழாக அவைகளை மிதித்துத் தள்ளிப் புறக்கணித்திருப்பதையும், மனந்திரும்பி தேவனை அண்டிக்கொள்ள பூலோக மாந்தரிடம் அந்த உருவம் உள்ளம் கனிந்து பரிந்து மன்றாடுவதைப் போன்ற பாவனையில் அந்தச் சிலையை செதுக்கியிருக்கின்றனர்.

பைபிள் அறிவியலும்

பைபிள் அறிவியலும்

http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
1. புவி - (யோபு 26: 7) விண்வெளியில் சுதந்திரமாக மிதக்கிறது மட்டுமே ஈர்ப்பு பாதிக்கப்பட்ட. மற்ற ஆதாரங்களில் பூமியில் ஒரு யானை அல்லது ஆமை மீண்டும் அமர்ந்து என்று விளக்கினார் போது, அல்லது அட்லஸ் தாங்கிக்கொண்டன பைபிள் நாம் இப்போது உண்மை தெரியும் என்ன கூறுகிறார் - "அவர் எதுவும் பூமியிலே நின்றுவிடும்."
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
2. - நம் கண்கள் வேறுபடுத்த துகள்கள் உருவாக்கம், (எபி 11: 3). இல்லை 1900 வரை அனைத்து புலப்படும் விஷயம் கண்ணுக்கு தெரியாத கூறுகளை கொண்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டது.
http://www.apg29.nu/bild2.php?w=480&h=75&src=img/1439459715-hr-lightblue.png
3. - பைபிள் ஒரு நிலையான நீர் கப்பல் (ஆதியாகமம் 6:15) சரியான பரிமாணங்களை குறிப்பிடுகிறது. Skeppsbyggaregatan இன்று கப்பல் ஸ்திரத்தன்மை சிறந்த பரிமாணத்தை நீளம் ஆறு மடங்கு அகலம் என்று நன்கு தெரியும். நினைவில் வைத்து கொள்ளுங்கள், கடவுள், 4,500 ஆண்டுகளுக்கு முன்பு பெட்டிக்கு நோவா சிறந்த பரிமாணங்களை கூறினார்.
http://www.apg29.nu/bild2.php?w=480&h=75&src=img/1439459715-hr-lightblue.png
4. - நோய் தண்ணீர் இயங்கும் கீழ் கழுவ வேண்டும் ஆடைகள் மற்றும் உடல் (லேவியராகமம் 15:13) கையாளும் போது. பல நூற்றாண்டுகளாக மக்கள் கபடமற்ற நிற்கும் தண்ணீர் கழுவ. இன்று, நாம் புதிய தண்ணீர் கிருமிகள் விட்டு கழுவ வேண்டும் அடையாளம்.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
5. - கழிப்பறை. (ஆதியாகமம் 23: 12-13). 3,500 ஆண்டுகளுக்கு முன்பு, கடவுள் அவர்கள் மலம் கழிக்க முடியவில்லை அங்கு முகாமுக்கு வெளியே ஒரு இடம் வேண்டும் அவரது ஜனங்களுக்கும் கட்டளையிட்டான்.அவர்கள் ஒரு துளை (கழிவறை) தோண்டி தங்கள் கழிவு மறைக்க முடியும், அதனால் ஒரு மண்வாரி கொண்டு இருந்தது. அவர்கள் மனித கழிவு தனிமைப்படுத்தப்பட்டு இல்லை, ஏனெனில் முதல் உலக போர் வரை, மேலும் போரில் வீரர்கள் விட நோய் இருந்து இறந்தார்.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
6. - சமுத்திரங்கள் ஆதாரங்கள் (யோபு 38:16) கொண்டிருக்கின்றன. கடல் மிக ஆழமானது.கிட்டத்தட்ட அனைத்து கடல் படுக்கையில் இருட்டிலும் ஆகிறது மற்றும் ஒரு பெரிய அழுத்தம் ஏற்பட்டுள்ளது. வேலை ஆராய்ந்துள்ளன அது சாத்தியமற்றது இருந்திருக்கும் "கடல் நீரூற்றுகள்." சமீப காலம் வரை இது சமுத்திரங்கள் மட்டுமே ஆறுகள் மற்றும் மழை குடிக்கலாம் என்று நம்பப்பட்டது. ஆனால் 1970 களில், சதுர அங்குல அழுத்தம் ஒன்றுக்கு 6,000 பவுண்டுகள் தாங்கும் கட்டப்பட்டது என்று ஆராய்ச்சி நீர்மூழ்கி கப்பல்கள், ஆழமான முழுக்கு உதவியுடன் கடலியலாளர்கள் கடல்படுக்கையானது மீது நீரூற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டது!
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
7. - கடல் தரையில் (: 5-6 யோனா 2) மலைகளை உள்ளன. கடந்த நூற்றாண்டில், நாம் கடல் ஆழம் உள்ள உயரமான மலைகளும் ஆழமான அகழிகளில் உள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டது.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
8. - (அப்போஸ்தலர் 14:17) மகிழ்ச்சியையும்.பரிணாமம் உணர்வுகளை விளக்க முடியாது.பொருள் சக்தி தெரியாது. (சங்கீதம் 16:11) "உங்கள் முன்னிலையில் மகிழ்ச்சி முற்றாக உள்ளது" -, மற்றும் இறுதி மகிழ்ச்சி மட்டுமே நம் படைப்பாளரின் முன்னிலையில் உள்ளது: புனித நூல்களை கடவுள் (7 சங்கீதம் 4) நம் இதயத்தில் மகிழ்ச்சி நிலைபாடு என்று அறிவிக்கிறது.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
9. - இரத்த வாழ்க்கை மற்றும் சுகாதார ஆதாரமாக (லேவியராகமம் 17:11, 14) உள்ளது. 120 ஆண்டுகளுக்கு முன் வரை, பல இரத்தப்போக்கு விளைவாக இறந்தார். (எ.கா. ஜார்ஜ் வாஷிங்டன்). நாம் இப்போது புதிய இரத்தம் உடலில் ஒவ்வொரு செல் வாழ்க்கையை கொடுக்கும் ஊட்டச்சத்து பெற அவசியம் என்று எனக்கு தெரியும். கடவுள் அறிவியல் அதன் செயல்பாடு புரிந்து முன் நீண்ட "மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது" என்று கூறினார்.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
10. - கடவுளின் அதன் வகையான (ஆதியாகமம் 1:24) படி வாழ்க்கை உருவாக்கப்பட்ட என்று கூறுகிறார். கடவுள், வகையான வேறுபடுத்தி என்று உண்மையில் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டார் என்ன ஒப்புக்கொள்கிறார், - என்று வாழ்க்கை மாறுபடும் முடியாது இது தாண்டி படுகிடையான மரபணு எல்லைகளை உள்ளன என்று சொல்ல வேண்டும்.வாழ்க்கை அதன் சொந்த வகையான பின்னர் தயாரிக்கிறது. நாய்கள் பூனைகள் ரோஜாக்கள் ரோஜாக்கள் உற்பத்தி, பூனைகள் உற்பத்தி, நாய்கள் தயாரிக்கின்றன. பரிணாம வளர்ச்சி மற்றொரு வகை நாம் ஒருபோதும் கண்டிராத உள்ளி salag மாற்றம் குறிக்கிறது. இது உயிரியல் மாற்றம் உண்மையில் இயல்பான எல்லைக்கு தான்.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
11. - நோபல் நடத்தை (: 7-8 யோவான் 15:13, ரோமர் 5) புரிந்து. பைபிள் மற்றும் வரலாறு பல மக்கள் அருகிவரும் அல்லது மற்றொரு தங்கள் உயிரை தியாகம் என்பதை காட்டுகிறது. இந்த உண்மை இயற்கை தேர்வு டார்வினின் கோட்பாடு முரண்பாடுகள் முழுமையாக உள்ளது.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
12. - கோழி அல்லது (ஆதியாகமம் 1: 20-22) தீர்க்கப்பட முட்டை சங்கடத்தை. என்ன, முதல் வந்தது கோழி அல்லது முட்டை? இந்தக் கேள்வியைக் நூற்றாண்டுகளாக தத்துவ தொல்லைகள். பைபிள் கடவுள் தங்கள் தங்கள் ஜாதியின்படியே இனப்பெருக்கம் திறன் கொண்ட பறவைகள் உருவாக்கப்பட்ட என்று கூறுகிறார். கோழி முட்டைகள் செய்ய முதல் திறனை ஏனெனில் உருவாக்கப்பட்ட!ஆயினும் பரிணாம வளர்ச்சி இந்த சங்கடத்தை தீர்வு அல்ல.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
13. - முதலில் வந்தது, புரதங்கள் அல்லது டிஎன்ஏ (வெளிப்படுத்துதல் 4:11)?பரிணாமவாதிகளுக்கு, கோழி அல்லது முட்டை சங்கடம் இன்னும் ஆழமாக செல்கிறது. கோழிகள் புரதங்கள் உள்ளன.டிஎன்ஏ / ஆர்என்ஏ கணினி ஒவ்வொரு புரதம் குறியீடு. எனினும், புரதங்கள் டிஎன்ஏ உற்பத்திக்குத் தேவையான. எனவே முதல் வந்த: புரதங்கள் அல்லது டிஎன்ஏ? ஒரே விளக்கம், அவர்கள் ஒன்றாக உருவாக்கப்பட்ட உள்ளது.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
14. - எங்கள் உடல்கள் பூமியின் தூசி (: 3:19 7 ஆதியாகமம் 2) செய்யப்படுகின்றன.விஞ்ஞானிகள் மனித உடலில் உறுப்புகள் சுமார் 28 அடிப்படை கொண்டுள்ளது மற்றும் பீறிடும் என்று கண்டுபிடிக்கப்பட்டது - பூமியில் உள்ளது.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
15. - நிறுவப்பட்டது வெப்பவியக்கவியலின் முதலாவது விதிப்படி (ஆதியாகமம் 2: 1-2).முதல் சட்டம் பிரபஞ்சத்தில் ஆற்றல் மற்றும் விஷயம் மொத்த அளவு நிலையான என்று கூறுகிறது. ஆற்றல் அல்லது விஷயம் ஒரு வடிவம் மற்றொரு மாற்றப்பட முடியும், ஆனால் மொத்த அளவு எப்போதும் அதே உள்ளது. எனவே படைப்பு கடவுளின் வழியில் திரும்பி ஆதியாகமம் சொன்னபடியே முடிந்ததும்.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
16. - ஆதியாகமம் முதல் மூன்று வசனங்கள் துல்லியமாக உருவாக்கம் அனைத்து அறியப்பட்ட அம்சங்கள் (: 1-3 ஆதியாகமம் 1) தெரிவிக்கிறது. நேரம், இடம், பொருள் சக்தி அறிவியல் வடிவில் பிரபஞ்சத்தின் வெளிப்படுத்துகிறது. ஆதியாகமம் அதிகாரம் ஒன்று, நாம் வாசிக்கிறோம். "ஆதியிலே (நேரம்) தேவன் வானத்தையும் (இடைவெளி), பூமி (விஷயம்) உருவாக்கப்பட்ட ... மேலும் கடவுள்," ஒளி (ஆற்றல்) இருக்கட்டும் "வேறு எந்த உருவாக்கம் கணக்கு காணக்கூடிய ஆதாரங்கள் ஒப்புக்கொள்கிறார்.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
17. - பிரபஞ்சத்திற்கு ஆரம்பம் (:: 10-12 எபிரெயர் 1 1 ஆதியாகமம் 1) இருந்தது. 1900 களின் முற்பகுதியில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ஆய்வுகள் மற்றும் இன்றும் தொடர்ந்து இருந்து, அறிவியல் பிரபஞ்சத்தின் ஒரு தொடக்கம் இருந்தது என்று விவிலிய கருத்தை உறுதி செய்தார். பைபிள் எழுதப்பட்ட போது, பெரும்பாலான மக்கள் பிரபஞ்சத்தின் நித்திய என்று நினைத்தேன்.அறிவியல் அவர்களை தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது, ஆனால் சரியாக பைபிள்.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
18. புவி - ஒரு கோளம் (ஏசாயா 40:22) உள்ளது.பல பூமி தட்டையானது என்று நினைத்தேன் போது ஒரு நேரத்தில் பைபிளோ, பூமியில் கோள என்று கூறினார்.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
19. - புனித ஒரு சுழலும் (கோள) பூமியில் (: 34-36 லூக்கா 17) வகிக்கிறது. இயேசு சில திரும்பிய மற்றவர்கள் area.This மீது பகல்நேர நடவடிக்கைகள் வேலை செய்யும் போது இரவும் பகலும், இரவில் ஒரு சுழலும் பூமி ஒரு தெளிவான அறிகுறி உள்ளது தூங்க ஒரே நேரத்தில் ஏற்படும் என்று கூறினார்.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
(: 5-6 ஆதியாகமம் 2) .Före பிரளயம் பூமியில் ஒரு வித்தியாசமான சூழலில் இருந்தது: - 20. வானவில் தோற்றம் (13-16 ஆதியாகமம் 9) விளக்கினார். ஜலப்பிரளயத்துக்குப்பின் அவர் மீண்டும் தண்ணீர் மூலம் பூமியை நியாயந்தீர்க்க மாட்டேன் என்று ஒரு அடையாளமாக "மேகம்" அவரது ரெயின்போ அமைக்கிறது. ஒரு முப்பட்டை கண்ணாடி செயல்படும் - - அதன் நிறமாலை வெள்ளை ஒளியை பிரிக்கிறது வானிலை ஆய்வாளர்கள் இப்போது சூரியன் நீர் துளிகளால் மூலம் ஜொலித்து போது ஒரு வானவில் வடிவங்கள் என்று புரிந்து கொள்ள.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
21. - பிரிந்தது ஒளி (யோபு 38:24). சர் ஐசக் நியூட்டன், ஒளி ஆய்வு மற்றும் வெள்ளை ஒளி "parted" பின்னர் மறுகுழுவாக்கப்பட்டவை முடியும் ஏழு நிறங்கள், உருவாக்குகின்றது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அறிவியல் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த உறுதி - கடவுள் நான்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பிரகடனம்!
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
22. - எதிர்பார்க்கப்படுகிறது கடல் நீரோட்டங்கள் (சங் 8: 8). மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பைபிள் 'கடலின் பாதைகள். "என்று விவரித்தார் கடலியல் தந்தை - - 19 ஆம் நூற்றாண்டின் மத்தேயு மாரி சங்கீதம் 8 படித்த பிறகு, ஆராய்ச்சி மற்றும் சமுத்திரங்கள் மூலம் குறிப்பிட்ட யாவும் பின்பற்ற என்று கடல் நீரோட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டது! மாரி தரவு பயன்படுத்தி பின்னர் பல நாட்கள் சமுத்திரங்கள் கடந்து தேவையான நேரம் குறைக்கப்பட்டது கடல் மாலுமிகள் உள்ளது.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
23. - பாலியல் ஒழுக்கமின்மை (1 கொரிந்தியர் 6:18, ரோமர் 1:27) உங்கள் சுகாதார ஆபத்தானது. பைபிள் "என்று அவர் தனது சொந்த உடல் எதிரான பாலியல் ஒழுக்கக்கேடு பாவத்துக்குட்பட்டால்", மற்றும் ஓரின பாவத்தைச் செய்தவர்கள் அவர்களுடைய misstag.Mycket தரவு தண்டனை "எடுத்து" என்று இப்போது புனித திருமணத்தின் வெளியே எந்த பாலியல் உறவு நிச்சயமற்ற என்று உறுதிப்படுத்துகிறது என்று எச்சரிக்கிறார்.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
24. - (: 27-28, 2:24, மாற்கு 10: 6-8 ஆதியாகமம் 1) விளக்கினார். வளர்ச்சி அதே நேரத்தில் உருவாக்கப்பட்டது எப்படி ஆண் மற்றும் பெண் பாலியல் உறுப்புகளின் விளக்க கொள்ள முடியாது என்றாலும், பைபிள் ஆரம்பத்தில் இருந்து கடவுள் மனித இனம் மற்றும் கால்நடை வகையான பரப்ப ஆணையும் பெண்ணையும் படைத்தார் என்று கூறுகிறார்.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
25. - நட்சத்திரங்கள் கணக்கிலடங்கா (எரேமியா 33:22). ஒரு நேரத்தில் மனித கண்ணுக்கு புலப்படும் குறைவான 5,000 நட்சத்திரங்கள், எண்ணற்ற இருந்தது வானத்தின் நட்சத்திரங்கள் கடவுள் என்றார்.17 ஆம் நூற்றாண்டில் வரை கலீலியோ தனது புதிய தொலைநோக்கி மூலம் நமது பிரபஞ்சத்தின் முடிவிலி பார்வையை. இன்று, வானியல் பத்தாயிரம் கோடி லட்சம் கோடி நட்சத்திரங்கள் உள்ளன என்று மதிப்பிட்டுள்ளனர் - 25 பூஜ்யங்கள் ஒரு 1 தான்! ஆனால், பைபிள் மாநிலங்கள் என, விஞ்ஞானிகள் இந்த எண்ணிக்கை மிகவும் போதுமான இருக்க முடியும் ஒப்புக்கொள்கின்றன.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
26. - நட்சத்திரங்களின் எண்ணிக்கை, எனினும் பெரிய, .Although மனிதன் நட்சத்திரங்கள் சரியான எண்ணிக்கை கணக்கிட முடியவில்லை (ஏசாயா 40:26) வரையறுக்கப்பட்ட ஆனால், இப்போது நாம் அவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்று எனக்கு தெரியும். நிச்சயமாக, கடவுள் இந்த அனைத்து நேரம் தெரியும் - "அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை, அவர் பெயர் அவர்களை அழைக்கிறார் கணக்கில்" (சங்கீதம் 147: 4). என்ன ஒரு அற்புதமான கடவுள்!
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
27. - பைபிள் கடற்கரையில் மணல் துகள்களின் எண்ணிக்கை நட்சத்திரங்களின் எண்ணிக்கை (ஆதியாகமம் 22:17, எபி 11:12) ஒப்பிட்டு. அதிசயமாக, மணல் துகள்களின் எண்ணிக்கை மொத்த மதிப்பீடுகள் அண்டத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களும் மதிப்பிடப்பட்டுள்ளது எண் ஒப்பிட வேண்டும்.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
28. - சரிவு தார்மீக மனச்சாட்சியின்மை (: 20-32 ரோமர் 1) விளைவாக உருவாக்குகிறது.பைபிள் மனித குலத்தின் படைப்பாளர், அக்கிரமம், முன்னணி என்ற பெரும் சான்றுகளை நிராகரித்தால் என்று எச்சரிக்கிறார். பரிணாம வளர்ச்சி கோட்பாடு முதலியன உலக, கருக்கலைப்பு, ஆபாசம், இனப்படுகொலை, சுத்தமாகவே இருந்து, கடுமையாக உயர்ந்துள்ளன.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
29. - பூமியில் (நோவாவின் வெள்ளம்) (2 பேதுரு 3: 5-6) கொடுக்கப்பட மாட்டார்கள் போது கடவுள் வெள்ளம் என்ற உண்மையை.இந்த உண்மையை படிம ஆதாரங்கள் நிறைய உள்ளன, ஆனால் அது மனிதனின் பொல்லாப்பு கடவுளின் தீர்ப்பு ஏனெனில் அது பரிசீலனைக்கு இடமின்றி, அறிவியல் உலகின் மிக புறக்கணித்து விட்டது.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
30. - எதிர்பார்க்கப்படுகிறது பரந்த படிம வைப்பு (ஆதியாகமம் 7). தாவரங்கள் மற்றும் விலங்குகள் இறக்கும் போது அவர்கள் விரைவாக அழுகுதல். ஆயினும் உலகம் முழுவதும் வாழ்க்கை வடிவங்களை பில்லியன் படிமங்கள் ஆக பாதுகாக்கப்பட்டுள்ளது. பரந்து விரிந்து மற்றும் பாக்டீரியா விட்டு அடக்கம் வாழ்க்கை ஒரு விரைவான படிவு இருந்தால் மட்டுமே புவியியலாளர்கள் இப்போது அந்த படிம வடிவம் தெரியும். இந்த பைபிள் பூகோள ஜலப்பிரளயம் போது நடந்தது சொல்வதை சரியாக பொருந்துகிறது.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
31. - கண்டங்கள் ஒரு பெரிய நில நிறை (: 9-10 ஆதியாகமம் 1) உருவாக்கப்பட்டன. பைபிள் வழியில் திரும்பி ஆதியாகமம் சொல்வது போல் - பல புவியியலாளர்கள் முதலில் ஒரு சூப்பர் கண்டம் என்பதற்கு வலுவான சான்று உள்ளது ஒப்புக்கொள்கிறேன்.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
32. - (ஆதியாகமம் 7:11) பெறப்பட்ட கான்டினென்டல் இயக்க. இன்று கடல் தரையில் ஆய்வு நாட்டின் சீரழிக்கப்பட்டிருக்கும் என்று குறிக்கிறது.வேதம் பெருவெள்ளம் "மிகுந்த ஆழமான நீரூற்றுக்கள் தகர்க்கப்பட்டன." என்று கூறுகிறார் இந்த பிரளய நிகழ்வு உடைத்து மற்றும் மாற்றுவதால் கண்ட தகடுகள் வெளிப்படையாக விளைவித்தது.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
33. - ஐஸ் வயது கண்டறிந்தனர் (யோபு 38: 29-30). பூகோள ஜலப்பிரளயம் பூமியின் வெளிப்படையாக மிதவெப்ப மண்டல இருந்தது முன். (யோபு 37:10) "கடவுள் பனி மூச்சு கொடுக்கப்பட்டுள்ளது மூலம், மற்றும் பரந்த கடல் உறைந்திருக்கும்" - உடனே வெள்ளம் வந்த பின்னர், பைபிள் அடிக்கடி பனி குறிப்பிடுகிறது. தெளிவாக ஐஸ் வயது வெள்ள பின்னர் நூற்றாண்டுகளில் ஏற்பட்டது.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
34. - வாழ்க்கை கருத்துரு தொடங்குகிறது (எரேமியா 1: 5). கடவுள் நாம் பிறப்பதற்கு முன்பே அவர் எங்களுக்கு தெரியும் என்று அறிவிக்கிறது. ஒரு பிறக்காத குழந்தை கொலை விவிலிய தண்டனை மரணம் (: 22-23 யாத்திராகமம் 21) இருந்தது. இன்று அது கருவுற்ற முட்டை நிச்சயமாக மிகவும் பெரிய மனிதன் என்று ஒரு மறுக்கமுடியாத உயிரியல் உண்மை. எதுவும் உணவு மற்றும் ஆக்சிஜன் தவிர முதல் செல் சேர்க்க வேண்டும்.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
35. - கடவுள் முறையில் மற்றும் கர்ப்பத்தில் எங்களுக்கு knits (யோபு 10: 8-12; 31:15).அறிவியல் சமீபத்தில் வரை, கரு வளர்ச்சி அறியாதவனாக இருந்தான். எனினும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, பைபிள் துல்லியமாக கடவுள் கர்ப்பத்தில் எங்களை ஒரு "சிக்கலான அலகு" செய்கிறது விவரித்தார்.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
36. - டிஎன்ஏ (: 13-16 சங்கீதம் 139) காத்திருந்தனர். 1950 களில், வாட்சன் மற்றும் கிரிக் பைபிள் சங்கீதம் 139 எழுதிய இந்த டிஜிட்டல் குறியீடு குறிப்பதாக தெரிகிறது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு livet.Tre மரபணு வரைபடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது - "உன் கண்கள் என் விஷயம் பார்த்தேன், ஆனால் கண்டது [அமைக்கப்படமுடியாமல்தான்] என்ற, உங்கள் புத்தகத்தில் என் இதுவரை உறுப்பினர்கள் என அவர்கள் யாரும் இருந்த போது தொடர்ந்து, பழங்காலத்து அவை, எழுதப்பட்டன. "
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
37. - கடவுள் ஒரு இரத்த (அப்போஸ்தலர் 17:26, ஆதியாகமம் 5) இருந்து அனைத்து ஆண்கள் ஏற்படுத்தியுள்ளது. இன்றைய விஞ்ஞானிகள் நாம் அனைவரும் ஒரு மரபணு வங்கி இருந்து இறங்கி என்று கண்டுபிடிக்கப்பட்டது. உதாரணமாக, 1995 ல் உலகம் முழுவதும் பல்வேறு இனக் குழுக்களை சேர்ந்த 38 ஆண்கள் இருந்து ஒய் குரோமோசோம்கள் ஒரு பகுதியை ஒரு ஆய்வு நாம் அனைவரும் ஒரு மனிதன் (ஆதாம்) வரும் என்று விவிலிய போதனை இசைவானதாக
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
38. - முக்கிய மொழி குழுக்கள் தோற்றம் (ஆதியாகமம் 11) விளக்கினார். பாபேலில் கலகத்தின் பின்னர் கடவுள் பல மொழிகளில் ஒரு மொழியிலிருந்து குழப்பமான மக்கள் சிதறி. பரிணாமம் நாம் அனைவரும் ஒரு பொதுவான மூதாதையர் இருந்து உருவானது என்று கற்றுக்கொடுக்கிறது, ஆனால் இன்று இருக்கும் மொழிகளை ஆயிரக்கணக்கான பூர்வீகத்தை விளக்குவதற்கு எந்த நுட்பத்தை வழங்குகிறது.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
39. - வெவ்வேறு "இனங்கள்" தோற்றம் விளக்கினார் (ஆதியாகமம் 11). நோவாவின் சந்ததிகள் பேபல் பிறகு உலகம் முழுவதும் சென்றார் என, சுற்றுச்சூழல் மற்றும் மரபணு மாற்றம் அடிப்படையில் மொழிவழி குழு பல்வேறு செயல்பாடுகளை உருவாக்கப்பட்டது. அந்தப் புதிய சூழ்நிலைக்கு பொருத்தமான ஒரு மரபுசார் காரணிகள் அந்த இனப்பெருக்கம் பிழைத்து.காலப்போக்கில், சில அம்சங்கள் (கோட்டிலிருந்து அந்த நெருக்கமான எ.கா. தோலை) ஆதிக்கம். ஆதியாகமம் இனங்கள் மற்றும் மொழிகளை தோற்றம் மட்டுமே நியாயமான பதில் வழங்குகிறது.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
40. கடவுள் - மருத்துவம் போன்ற மரங்கள் எங்களுக்கு இலைகள் கொடுத்த (எசேக்கியேல் 47:12; வெளிப்படுத்துதல் 22: 2).பண்டைய நாகரிகம் பல மூலிகை வைத்தியம் பயன்படுத்தியது. இன்று, நவீன மருத்துவம் பைபிள் ஆரம்பத்திலிருந்தே என்ன சொன்னார் கண்டுபிடித்திருக்கிறார்கள் - தாவரங்களில் காணப்படும் சிகிச்சைமுறை கலவைகள் உள்ளன.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
41. - ஆரோக்கியமான உணவு சட்டங்கள் (லேவியராகமம் 11: 9-12). புனித நூல்களை நாம் துடுப்புகள் வேண்டும் அல்லது fjäll.Vi இப்போது கீழே-தீவன (செதில்கள் அல்லது துடுப்புகள் இல்லாமல் அந்த) கழிவுகள் சாப்பிட முனைகின்றன மற்றும் நோயை எடுத்துச் வாய்ப்பு உள்ளது என்று தெரியும் என்று இந்த கடல் விலங்குகள் தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார்.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
.Forskarna இப்போது செத்ததும் (அழுகும் மாம்சம்) சாப்பிட என்று பறவைகள், பெரும்பாலும் நோய்கள் பரவும் என்று உணர்ந்து: - 42. பைபிள் ராப்டர்ஸ் (13-19 லேவியராகமம் 11) உண்ணும் எதிராக எச்சரித்துள்ளது.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
43. - தவிர்க்க பன்றிக் (யாத்திராகமம் 14: 8).இல்லை நீண்ட முன்பு, உணவினால் பன்றி இறைச்சி trichinosis என்று ஒட்டுண்ணிகள் மூலம் ஒரு தொற்று ஏற்படுகிறது சாப்பிட அறிவியல் கற்று. இப்போது இந்த கருத்தில்: பைபிள் நாம் பாதுகாப்பாக பன்றி இறைச்சி சமைக்க கற்று 3,000 க்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன் பன்றி உணவு தடைசெய்கிறது.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
44. - திட்டமிட்ட தீவிரவாத சூழல் (ரோமர் 1:25).இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பல வழிபாடு என்று தேவனுடைய வார்த்தை விளக்கினார் படைப்பாளர் விட உருவாக்கம் பணியாற்றினார். இன்று இயற்கையின் "அம்மா" வணங்கப்படுகிறார் மற்றும் இயற்கை பொறிக்கப்பட்டுள்ளது.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
45. - கருப்பு ஓட்டைகள் மற்றும் இருண்ட விஷயம் எதிர்பார்க்கப்படுகிறது (மத் 25:30 ஐயும் யூதா 1:13, ஏசாயா 50: 3).பிரபஞ்சவியலாளர்கள் இப்போது அழைக்கப்படும் பிரபஞ்சத்தின் 98% இருண்ட விஷயம், இருண்ட சக்தி மற்றும் கருப்பு ஓட்டைகள் உள்ளன என்று ஊகம். ஒரு கருப்பு துளை ஈர்ப்புமண்டலத்தை என்று எதுவும் இல்லை, ஏன் ஒளி தப்பி பலமாக இருக்கிறது.பிரபஞ்சம் விரிவடைந்து அப்பால் அங்கு இல்லை அளவிடப்படுகிறது கதிர்வீச்சு உள்ளது, எனவே இருட்டு மட்டுமே உள்ளது.இந்த கோட்பாடுகள் பைபிள் "கருமை" அல்லது அழைப்பு என்ன ஒரு வெளித்தோற்றத்தில் சரியான விளக்கம் சித்தரிக்கின்றன "எப்போதும் கருப்பு இருள்."
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
46. ​​?? - வெப்ப ஆற்றலின் இரண்டாம் விதி (எண்ட்ரோபி) (: 25-26 சங்கீதம் 102) விளக்கினார். இந்த சட்டம் பிரபஞ்சத்தில் எல்லாம் மனித குலத்தின் கடவுளுக்கு எதிராக கலகம் போது குறைவான ordnad.Entropi (கோளாறு) உள்ளிட்ட வருகிறது, சீரழிந்து, கீழே செல்கிறது என்று கூறுகிறார் - ஒரு சாபம் விளைவாக (ஆதியாகமம் 3:17; ரோமர் 8: 20-22). வரலாற்று ரீதியாக, பெரும்பாலான மக்கள் பிரபஞ்சத்தின் மாறாத என்று நம்பப்படுகிறது. ஆனால் நவீன அறிவியல் பிரபஞ்சத்தின் (எபிரெயர் 1:11) "வஸ்திரம்போல் பழைய (என்கிறார்) வளரும்" என்று சரிபார்க்கிறது. பரிணாமம் நேரடியாக இந்த சட்டம் முரண்படுகிறது.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
47. - கெய்ன் மனைவி கண்டுபிடிக்கப்பட்டது (யாத் 5: 4). பைபிள் தவறான இருக்க வேண்டும், ஏனெனில் - நாத்திகவாதிகள் கெய்ன் திருமணம் செய்து கொள்ள யாரும் கிடையாது என்று சுட்டிக்காட்டுகின்றனர்.ஆனால், பைபிள் தெளிவான ஆதாமும் ஏவாளும் மகன்களும் மகள்களும் பிறந்தார்கள் என்று கூறுகிறது. காயீன் தன் சகோதரி திருமணம்.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
48. - நிறுவப்பட்டது கூடா சட்டங்கள் (லேவியராகமம் 18: 6). பண்டைய உலகில் திருமணம் நெருங்கிய உறவினர்கள் பொதுவாக இருந்தது. இருப்பினும், 1500 கி.மு. தொடங்கி, கடவுள் இந்த நடைமுறையில் தடை. காரணம் எளிது - (காரணமாக சாபம்) பிறழ்வுகளுக்கு ஒரு ஒட்டுமொத்த விளைவு இருந்தது. மரபணு பூல் இன்னும் நேரத்தில் ஒப்பீட்டளவில் சுத்தமாக இருந்தது என்பதால் கூட கெய்ன் பாதுகாப்பாக பெருகிவிட்டது என்று மோசேயின் மரபணு மூலம் பிழைகள், அவரது சகோதரி திருமணம் செய்து கொள்ளலாம்.இன்று, மரபணு உறவினர்கள் அதே குறைபாடுள்ள மரபணு செயல்படுத்த வாய்ப்பு அதிகமாக இருக்கிறது, ஏனெனில் நீங்கள் ஒரு நெருங்கிய உறவினர் திருமணம் செய்து உங்கள் குழந்தை ஒரு மரபணு பிறழ்தல் கடத்தும் ஆபத்து அதிகமாக உள்ளது என்பதை உறுதிபடுத்துகிறது.அவர்கள் பெறு என்றால், அவர்களின் பிள்ளைகள் இந்த குறைபாடு வெளிப்படுத்தப்படுகிறது வேண்டும் அதிகமாக உள்ளன.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
49. - தடை வெவ்வேறு விதைகள் மரபணு கலவையை (லேவியராகமம் 19:19, உபாகமம் 22: 9). பைபிள் கலந்து விதைகள் எதிராக எச்சரிக்கை - இந்த ஒரு தாழ்ந்த அல்லது ஆபத்தான பயிர் ஏற்படுத்தும் என.இயற்கைக்கு மாறான, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் தீங்கு விளைவிக்கும் இப்போது பெருகிய சான்றுகள் உள்ளன.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
50. - விவரித்தார் நீர் சுழற்சியில் (பிரசங்கி 1: 7, எரேமியா 10:13; ஆமோஸ் 9: 6). நான்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பைபிள் கடவுள் (: 27-28 யோபு 36) "மேகங்கள் கீழே இறக்கி மனிதன் எக்கச்சக்கமாக ஊற்ற இது மூடுபனி, மழை போன்ற நொதிக்க இது தண்ணீர் சொட்டு ஏறப்பண்ணுகிறார்" என்று கற்பித்தார். பழங்காலத்தில் கடலில் ஓடும் ஓடும் நதிகள் கண்காணிக்கப்பட்டு, கடல் மட்டம் உயர்ந்து, பிறகு ஏன் அவர்கள் கற்பனை செய்ய முடியவில்லை.அனுசரிக்கப்பட்டது மழை என்றாலும், அவர்கள் மட்டுமே அதன் தோற்றம் பற்றி தள்ளியிருப்பது கோட்பாடுகள் இருந்தது.வானிலை ஆய்வாளர்கள் இப்போது புரிந்து ஆவியாதல், வளிமண்டல போக்குவரத்து, வடித்தல், மற்றும் மழை நீர் சுழற்சியில் என்று.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
51. - ஒரு சுற்று சூரியன் மறையும் (சங்கீதம் 19: 6). சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது கோட்பாடு - சில விஞ்ஞானிகள் அது geocentricity கற்று என்று இந்த வசனம் சிந்தனை எள்ளி நகையாடினார். அவர்கள் சூரியன் நிலையான என்று வலியுறுத்தினார்.ஆனால் நாம் இப்போது சூரியன் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 600,000 மைல்கள் விண்வெளி மூலம் பயணம் என்று எனக்கு தெரியும். உண்மையில் ஒரு பெரிய வட்டத்தில் விண்வெளி மூலம் அங்கு நகரும் - பைபிள் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு கூறியது போல்!
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
52. - எட்டாம் நாள் விருத்தசேதனம் (: லூக் 1:59 ஆதியாகமம் 3 17:12, யாத்திராகமம் 12) இருக்கிறது. மருத்துவ அறிவியல் எட்டாம் நாளில் ஒரு பிறந்த அந்த blodlevrings இரசாயன புரோத்ரோம்பின் சிகரங்களையும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய பாதுகாப்பான நாள்.மோசே எப்படி தெரியும் இயலும் ?!
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
53. - கடவுள் வாழ்க்கை (ஏசாயா 40:12) தக்கவைத்துக்கொள்ள நீர் தான் சரியான அளவு கொடுத்திருக்கிறார். நாம் இப்போது கணிசமாக அதிகமாக அல்லது குறைவாக தண்ணீர் இருந்தது என்றால் நாம் அது தெரியும், பூமியில் வாழ்க்கை ஆதரவு இல்லை என்று உணர.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
54. - பூமியில் உயிரியல் வாழ்வு (ஏசாயா 45:18) வடிவமைக்கப்பட்டது. விஞ்ஞானிகள் நாங்கள் அது இல்லை என எனக்குத் தெரியும் நம் பூமியின் மிக அடிப்படையான பண்புகள் மற்றும் அதே போல், பிரபஞ்சம், கூட சற்று வித்தியாசமாக இருந்தது, அவர்கள் ஒரே ஒரு உயிர் அமைக்கப்படுகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆந்த்ரோபிக் கொள்கை அழைக்கப்படுகிறது, மற்றும் பைபிள் கடவுள் வசித்து வேண்டும் பூமியின் உருவாக்கப்பட்டது என்று கூறுகிறார் சீராக உள்ளது.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
55. - பிரபஞ்சத்தின் (யோபு 9: 8; ஏசாயா 42: 5, 51:15, எரேமியா, சகரியா 12: 1) விரிவடைகிறது. திரும்பத்திரும்ப, கடவுள் அவர் வானங்களை விரித்து என்று அறிவிக்கிறது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், (ஐன்ஸ்டீன் உட்பட) பெரும்பாலான விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தில் நிலையான இருந்தது நம்பப்படுகிறது. மற்றவர்கள் அதை ஈர்ப்பு காரணமாக வீழ்ந்திருக்கும் என்று நம்பப்படுகிறது. 1929 முதற்கொண்டு வானியலாளர் எட்வின் ஹப்பிள் தொலைவு விண்மீன் பூமியில் விலகுதல், மற்றும் மேலும் விட்டு அவர்கள், வேகமாக அவர்கள் நகரும் என்று காட்டின. இந்த கண்டுபிடிப்பு வானவியல் துறை புரட்சி. Eisntein தனது தவறை ஒப்பு, மற்றும் இன்று, பெரும்பாலான வானியலாளர்கள் படைப்பாளர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கூறினார் என்ன உடன்படவில்லை - பிரபஞ்சத்தின் விரிவடைந்து வருகிறது!
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
56. - உயிர்வழிப்பிறப்பு சட்டம் விளக்கினார் (ஆதியாகமம் 1) .Forskarna ஆயுள் மட்டும் இருக்கும் வாழ்க்கையில் இருந்து வருகிறது என்று கூறுகிறது. இந்த சட்டம் கவனிப்பு அல்லது (பரிணாம வளர்ச்சி படங்கள்) பரிசோதனைகளுக்கு கீழ் குற்றம். எனவே வாழ்க்கை, தேவனுடைய ஜீவனுக்கு, அனைத்து உயிரைக் கொடுத்தார்.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
57. - விலங்கு மற்றும் தாவர ஒழிப்பு விளக்கினார் (எரேமியா 12: 4, ஓசியா 4: 3).பரிணாம வளர்ச்சி படி, பிறகு நாம் ஒரு புதிய வகை நடக்கவில்லை வளரும் சாட்சி வேண்டும். ஆனால் இந்த அனுசரிக்கப்பட்டது.புனித நூல்களை என்கிறார் என மாறாக, படைப்பாக மீது சாபம் ஏனெனில், நாம் மரணம் மற்றும் அழிவு (: 20-22 ரோமர் 8) பார்க்கிறோம்.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
58. - ஒளி ஒரு சுற்றுப்பாதையில் (யோபு 38:19) பயணிக்கிறது. அது ஒளி உடனடியாக அனுப்பி நம்பப்பட்டது 17 ஆம் நூற்றாண்டில்: [டெரெக், உண்மையில் ஒரு பயணம் பாதை அல்லது சாலை ஹீப்ரு] .Fram ஒளி ஒரு "வழி" வேண்டும் என்றார். நாம் இப்போது அந்த ஒளி ஒரு நேர் கோட்டில் வினாடிக்கு 186,000 ~ மணிக்கு மைல்கள் பயணம் என்று சக்தியின் ஒரு வடிவமாகும் என்று எனக்கு தெரியும்.ஒளி ஒரு "பாதை" உண்மையில் உள்ளது.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
59. - ஏர் (யோபு 28:25) எடை உள்ளது. இது ஒரு முறை விமான எடையிழந்தது என்று நினைத்தேன். ஆனால் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு யோபு நிறுவப்பட்டது என்று அறிவித்தார் "காற்று ஒரு எடை." சமீபத்திய ஆண்டுகளில், வானிலை ஆய்வாளர்கள் சராசரி இடியுடன் கூடிய மழை மழை டன் ஆயிரக்கணக்கான உள்ளது என்று கணக்கிடப்படுகிறது. இந்த சுமை செயல்படுத்த பொருட்டு, காற்று நிறை உள்ளது.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
60. - எதிர்பார்க்கப்படுகிறது ஜெட் ஸ்ட்ரீம் (Ecclesiates 1: 6). அது காற்று நேராக பறக்க என்று நம்பப்பட்டது போது ஒரு நேரத்தில், பைபிள் "காற்று தெற்கே செல்கிறது, வடக்கேயும் சுழல்கிறது; தொடர்ந்து பற்றி காற்று வானில் சுழன்று, மற்றும் அதன் சுற்று வட்டார மீண்டும் வரும்." அறிவிக்கிறதுசாலொமோன் ராஜா 3,000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதினார். இப்போது இந்த கருத்தில்: விமானிகளை பலிக் ஜெட் ஸ்ட்ரீம் சுற்று கண்டுபிடிக்கப்பட்டது என்று இரண்டாம் உலகப் போர் வரை இருந்தது.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
61 - நிறுவப்பட்டது மருத்துவ தனிமைப்படுத்தப்பட்ட (லேவியராகமம் 13: 45-46, உபாகமம் 5: 1-4). மக்கள் தனிமைப்படுத்தப்பட்ட கொள்கைகளை புரிந்து வெகு காலத்திற்கு முன்பே, கடவுள் குணப்படுத்த வரை ஒரு தொற்று நோய் அவர்களை தனிமைப்படுத்த இஸ்ரவேலருக்கு கட்டளை.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
62. - ஒவ்வொரு நட்சத்திர (கொரிந்தியர் 15:41 1) தனிப்பட்ட உள்ளது. தொலைநோக்கி வருகையுடன் பல நூற்றாண்டுகளுக்கு முன், பைபிள் என்ன கடவுள் மட்டுமே விளக்கினார் மற்றும் தேவதூதர்கள் தெரியும் - ஒவ்வொரு நட்சத்திர அளவு மற்றும் தீவிரத்தன்மையில் மாறுபடுகிறது!
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
63. - பைபிள் ஒளி அனுப்பி, பின்னர் உரையில் (யோபு 38:35) தன்னை வெளிப்படுத்துகின்றன முடியும் என்று கூறுகிறார். மின்காந்த அலையின் - நாம் இப்போது ரேடியோ அலைகள் மற்றும் ஒளி அலைகள் அதே விஷயம் இரண்டு வடிவங்கள் என்று எனக்கு தெரியும். எனவே, ரேடியோ அலைகள் ஒளியின் வடிவம். இன்று, வானொலி பயன்படுத்த, நாம் அவர்கள் வரும் போது நிச்சயமாக பேசும் "மின்னல்கள்" அனுப்ப முடியும்.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
64. - சிரிப்பு .Nyligen ஆய்வுகள் சாலொமோன் ராஜா 3,000 ஆண்டுகளுக்கு முன்பு எழுத ஊக்கம் என்ன உறுதி உடல் சிகிச்சைமுறை (நீதிமொழிகள் 17:22) ஊக்குவிக்கிறது, "ஒரு மன மகிழ்ச்சியுடன் மருந்து போன்ற நல்ல இல்லை." உதாரணமாக, சில அழுத்தம் ஹார்மோன்கள் சிரிக்க அளவைக் குறைப்பதில். இந்த நோய் போராட உடல் உதவி, நோய் எதிர்ப்பு அமைப்பு சமநிலை வழங்குகிறது.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
65. - மிகுந்த வேதனையையும் அல்லது மன அழுத்தம் உங்கள் ஆரோக்கிய (ஐயும் மாற்கு 14:34 நீதிமொழிகள் 18:14) தடையாக உள்ளது.ஒரு மன அழுத்தம் நிகழ்வுக்கு பின்னர் - ஆராய்ச்சியாளர்கள் மார்பு வலி, சுவாசிப்பது கடினம், குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் கூட இதய செயலிழப்பு உட்பட மன அழுத்தம் இதயத்தசை அறிகுறிகள் காட்டியது யார் எந்த முந்தைய மருத்துவ பிரச்சினைகளை மக்கள் ஆய்வு.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
66. - எதிர்பார்க்கப்படுகிறது நுண்ணுயிரிகள் (யாத்திராகமம் 22:31). பைபிள் "; நான் கர்த்தர் என்ன இயற்கையாகவே இறந்து விட்டால் அல்லது அது தன்னை தீட்டுப்படுத்தி, அவன் புசிக்கிறதினாலே மிருகங்கள் சிதைந்து", எச்சரிக்கிறார் (லேவியராகமம் 22: 8). இன்று நாம் அழுகும் இறந்த நோய் ஏற்படுத்தும் பாக்டீரியா முழு என்று புரிந்துகொள்கிறோம்.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
67. - பைபிள் சமீபத்திய தசாப்தங்களில் கொழுப்பு (லேவியராகமம் 07:23) .Just சாப்பிடும் மருத்துவ சமூகம் என்று கொழுப்பு தமனிகள் திணற மற்றும் இதய நோய்க்கு காரணமாவதாக உறுதியாக உள்ளது என்று எச்சரிக்கிறார்.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
68. - (லேவியராகமம் 17:12) இரத்த செலவழித்து விடாதீர்கள். பண்டைய உலகின் பல மதங்களில் ஒரு பொதுவான சடங்கு ரத்தத்தைக் குடிக்க இருந்தது. (: லேவியராகமம் 03:17; 4 அப்போஸ்தலர் 15:20; 21:25 ஆதியாகமம் 9) ஆனால், படைப்பாளர் மீண்டும் மீண்டும் இரத்தத்திற்கு விலகியிருக்கும்படி அவரது மக்கள் கூறினார். நிச்சயமாக, நவீன அறிவியல் மூல இரத்த சாப்பிடும் ஆபத்தானது என்று வெளிப்படுத்துகிறது.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
69. - பைபிள் தொன்மாக்கள் (: 15-24 யோபு 40) விவரிக்கிறது. 1842 ஆம் ஆண்டில், சர் ரிச்சர்ட் ஓவன் பெரிய ஊர்வன படிமங்கள் கண்டுபிடித்த பிறகு ", கொடூரமான பல்லி" வார்த்தை டைனோசர் பொருள் உருவாக்கினார். அனைத்து விலங்குகள், ஆலை உண்ணும் (தாவரங்களை உண்டு வாழும் விலங்கு) மிகப்பெரிய தங்கள் இடுப்பு மற்றும் கால்களில் சிறந்த வலிமை, வலுவான வயிற்று தசைகள், ஒரு கேதுரு மரங்கள் மற்றும் கால்கள் இரும்பு கம்பிகள் போன்ற ஒரு வால்,: ஆனால் 4000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட யோபு புத்தகத்தில், கடவுள் பெஹிமோத் என விவரிக்கிறது . பெரிய அறியப்பட்ட டைனோசர் குடும்பம் - இந்த டைனோசர் இனங்- ஒரு சரியான விளக்கம் உள்ளது.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
70. - மகிழ்ச்சி (சங்கீதம் 36: 8) விளக்கினார்.பரிணாமம் மகிழ்ச்சி விளக்க முடியாது - மிக சிக்கலான இரசாயன மகிழ்ச்சியை அனுபவிக்க கூடாது. ஆனால், பைபிள் (டிம் 6:17 1) கடவுள் "அனுபவிக்க பற்றின அனைத்து நமக்கு கொடுக்கிறது" என்று கூறுகிறார். மகிழ்ச்சி கடவுள் தந்த பரிசு.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
71. - வாழ்க்கை பருப்பொருள் மற்றும் ஆற்றல் விட (ஆதியாகமம் 2: 7; யோபு 12: 7-10). நாம் ஒரு உயிரினம் விமான dör.Trots மறுக்கப்பட்டது என்றால் அவரது உடல் முற்றிலும் அப்படியே இருக்க முடியும் என்று, மற்றும் காற்று மற்றும் வாழ்க்கை தீப்பொறி மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் ஆற்றல் உடலின் மரணம் உள்ளது. அது கடவுள் மட்டுமே உயிர் மூச்சு கொடுக்க முடியும் என்று கூறப்படுகிறது போது வேதம் காணக்கூடிய ஆதாரங்கள் உடன்படவில்லை.பரிணாமவாதிகள் நாம் நம்ப வேண்டும் வழிவகுக்கும் என - வாழ்க்கை மூலப்பொருட்கள், தனியாக நேரம் மற்றும் வாய்ப்பு மூலம் விளக்கினார்.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
72. - அசல் இசை (சங்கீதம் 40: 3) விளக்கினார்.பரிணாமம் இசையின் தொடக்கங்களை விளக்க முடியாது. பைபிள் ஒவ்வொரு நல்ல கடவுளின் பரிசு (யாக்கோபு 1:17) இருந்து வருகிறது என்கிறார். இந்த மகிழ்ச்சியான இசையை அடங்கும். கடவுள் இசை தயாரித்தல் (ஆதியாகமம் 4:21, எசேக்கியேல் 28:13) மனித மற்றும் தேவதூதர் பரிசு இரு கொடுத்திருக்கிறார். பாடுவது கடவுளின் சந்தோஷமே மற்றும் வழிபாட்டில் வெளிப்படுத்த (யோபு 38: 7; சங்கீதம் 95: 1-2) கருதப்படுகிறது.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
73. - நம் முன்னோர்கள் (00:12:; 8-10 யோபு 8 20-22 ஆதியாகமம் 4) பழமையான இருந்தன.தொல்பொருள் நம் முன்னோர்கள், உலோகவியல் தொழிற்சாலைகள் உடைந்த குளிரூட்டப்பட்ட கட்டிடங்கள், வடிவமைக்கப்பட்டுள்ளது இசைக்கருவிகள் வாசித்தல் உருவாக்கப்பட்ட படித்து, நட்சத்திரங்கள், மற்றும் இன்னும் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆதாரங்கள் நேரடியாக பரிணாம வளர்ச்சி கோட்பாடு முரண்படுகிறது, ஆனால் தேவனுடைய வார்த்தை முற்றிலும் உடன்படுகிறேன்.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
(: 1-8 வேலை 30) - 74. Cavemen வேதாகமத்தில் விவரித்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, உயிர் யார் "புதர்களை" பெற்றெடுக்க சமூகத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட விவரிக்கும் வேலை குறிப்பிட்ட "விஷமானது ஆண்கள்" "பூமி மற்றும் பாறைகள் குகைகளில் Dalarna உள்ள இடைவெளிகளை, நேரடி (மற்றும்)." பரிணாமவாதிகள் ஊகம் இல்லை என எங்கள் பழமையான மூதாதையர் - எனவே "குகை மனிதர்கள்" வெறுமனே ஒதுக்கி மற்றும் கும்பலும்.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
75. - ஊகிக்கக்கூடிய கிரகத்தின் சுற்றுச்சூழல் பேரழிவு (வெளிப்படுத்துதல் 11:18). மாசு, அழிவு மற்றும் ஊழல் ஆட்சிக்கு: வளர்ச்சி விஷயங்கள் நன்றாக கிடைக்கும் என்று கற்பனை, பைபிள் உண்மையில் இன்று உள்ளது என்ன கணிக்கவில்லை.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
76. - ஒரு ஆலை விதை அதன் வாழ்க்கை (ஆதியாகமம் 1:11, 29) கொண்டிருக்கிறது.ஆதியாகமம் ல் காட்டியுள்ளபடி, இப்போது நாம் எளிய விதை உள்ளே வாழ்க்கையில் தன்னை என்று உணர. விதை உள்ள ஒரு சிறிய தொழிற்சாலையில் அதிர்ச்சி தரும் சிக்கலான உள்ளது. இல்லை விஞ்ஞானி ஒரு செயற்கை விதை உருவாக்க முடியும் சந்தானமில்லாமல் எளிதானது!
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
77. - ஒரு விதை புதிய வாழ்க்கை (: 36-38 1 கொரிந்தியர் 15) தயாரிக்க இறக்க வேண்டும்.இயேசு (யோ 00:24) "கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து இறந்தான் என்றால், அதற்கு, மட்டுமே உள்ளது. ஆனால் அது இறந்து என்றால், அது மிகவும் தானிய உற்பத்தி", என்றார். இந்த வசனத்தில் உயிரியலில் அடிப்படை அம்சங்களாகும் குறிப்பிடத்தக்க உறுதிப்படுத்தல் ஆகும்: 
  1. செல்கள் உயிரணுக்களிலிருந்தே மட்டுமே எழுகின்றன. 
  2. தானிய மேலும் தானிய உற்பத்தி பொருட்டு இறக்க வேண்டும். 
விழுந்த விதை பழைய உடலில் இருந்து செல்கள் ஆதரவு சூழப்பட்டுள்ளது. இந்த ஆதரவு செல்கள் உள்ளடங்கிய மைய ஊட்டம் கொடுக்கவேண்டும் "தங்கள் வாழ்வில் கொடுக்க". நடப்பட்ட போது, அங்கு மிக தானியங்கள் விளைவாக, உள் மைய துளிர்விட்டு.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
படைப்பு பொருட்டு உண்மை அறிவியல் இசைவானதாக (ஆதியாகமம் - 78 
தாவரங்கள் உயிர் வாழ்வதற்கு சூரிய ஒளி, நீர் மற்றும் கனிமங்கள் தேவைப்படுகிறது.தரையில் (வி. 9), பின்னர் அவர் ஆலை வாழ்க்கை (இல். 11) உருவாக்கப்பட்ட போது ஆதியாகமம் முதல் அதிகாரத்தில், அப்படியானால், கடவுள் முதல் (v.3 பயன்படுத்தி) ஒளி உருவாக்கப்பட்ட என்று நீர் (இல். 6) படித்தோம்.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
79. கடவுள் - (: 14-16 ஆதியாகமம் 1) "அறிகுறிகள் மற்றும் காலங்கள், நாள்கள், ஆண்டுகள்" வானத்தில் "ஒளி" உருவாக்கப்பட்டது. நாம் ஒரு ஆண்டு சூரியனை சுற்றி ஒரு முறை பயணம் செய்ய பூமியின் தேவையான நேரத்தில் இப்போது தெரியும் என்று. பருவங்கள் சூரியனிலிருந்து பூமி உறவினர் மாறிவரும் நிலையில் ஏற்படுகிறது. பரிணாமம் அகிலம் விபத்து மூலம் உருவானது என்று போதிக்கிறது சந்திர நாட்காட்டி து, ஆனால் பைபிள் காணக்கூடிய ஆதாரங்கள் இசைவானதாக - சந்திரன் கடிகாரம் போன்ற துல்லியமான ஒருவருக்கொருவர் பின்பற்ற.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
80. - பைபிள் "சொர்க்கம், உயர்வான வானங்களையும்" (ஆதியாகமம் 10:14) என்ற பேசுகிறது. நீண்ட ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி முன், புனித நூல்களை "வானங்களும்" மற்றும் "மூன்றாவது சொர்க்கம்" பற்றி பேசினார் (1 இராஜாக்கள் 08:27; 2 கொரி 12: 2). அத்துடன் கடவுளின் அற்புதமான தங்குமிடம் - நாம் இப்போது பரலோகத்தில் நமது உடனடி சூழ்நிலையை மற்றும் விண்வெளியில் பெரிய அளவிலான கொண்டுள்ளது என்று எனக்கு தெரியும்.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
81. - ஆலிவ் எண்ணெய் மற்றும் காயங்கள் மீது பயனுள்ள மது (லூக் 10:34). அவரது காயங்கள் எண்ணெய் திராட்சரசமும் வார்த்து - இயேசு ஒரு காயமடைந்த பயணி மீது வந்த போது ஒரு சமாரியன், அவரை டிரஸ்ஸிங் பற்றி கூறினார். இன்று நாம் மது எத்தில் ஆல்கஹால் மற்றும் மெத்தில் ஆல்கஹால் தடயங்கள் உள்ளன என்று எனக்கு தெரியும். இருவரும் நல்ல கிருமிநாசினி உள்ளன. ஆலிவ் எண்ணெய் ஒரு நல்ல கிருமிநாசினி, அதே போல் ஒரு தோல் கிரீம், பாதுகாப்பு மற்றும் இனிமையான லோஷன் உள்ளது. இது பொதுவாக இன்று எங்களுக்கு அறியப்படுகிறது. ஆனால் அவர்கள் சிகிச்சை மற்றும் திறந்த காயங்கள் பாதுகாக்க தெரியாது என்பதால் மத்திய காலங்களில் மற்றும் வலது வரை 20 ஆம் நூற்றாண்டுக்கு, மில்லியன் கணக்கானவர்கள் இறந்தனர் என்று உங்களுக்கு தெரியுமா?
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
அதுபற்றி மட்டுமே டிஎன்ஏ மூலக்கூறு, கண், மூளை சிக்கலான ஆய்வு செய்ய ஆரம்பமாகிவிட்டது, மற்றும் வாழ்வின் அனைத்து சிக்கலான கூறுகளை வேண்டும்: - 82. நாயகன் (14 சங்கீதம் 139) "பிரமிக்கத்தக்க அதிசயமாய் செய்து" ஆகும். இல்லை மனித கண்டுபிடிப்பு கடவுளின் படைப்பு பெரிய அற்புதங்களையும் ஒப்பிடுகையில்.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
83. - மருந்து புரிந்து (ஆதியாகமம் 1:31; 2: 9, வேலை 40:10, பிரசங்கி 3:11; மத்தேயு 6: 28-30).அழகு நம்மை சுற்றியுள்ள: கதிரியக்க அஸ்தமனம், கம்பீரமான மலைகளையும், வண்ணமயமான பூக்கள், ஒளிரும் கற்கள், இனிமையான பசுமையாக, அற்புதமாய் அலங்கரிக்கப்பட்ட பறவைகள், முதலியன அழகு பரிணாமவாதியாக ஒரு புதிராகவே உள்ளது. ஆனால் வேதம் கடவுள் நம் நன்மை மற்றும் அவரது புகழை அழகான விஷயங்கள் உருவாக்குகிறது என்று வெளிப்படுத்துகிறது.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
84. - வலுவான மற்றும் வலிகுறை (கொலோசெயர் 1:17; எபிரெயர் 1: 3) விளக்கினார். இயற்பியலாளர்கள் ஒன்றாக அணுக்கரு இணைக்கும் என்ன புரியவில்லை. அல்லது படைப்பாளர் சேர்ந்து நடத்தப்படுகிறது - - இயேசு கிறிஸ்து இன்னும் "சகலமும் கொண்டிருக்கும்" என்று கூறுகிறார்.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
85. - (2 பேதுரு 3: 10-12) எதிர்பார்க்கப்படுகிறது அணு பிளப்பு. வேதம் பூமிக்கும் வானத்திற்கும் தீ "தீர்த்து" போது "கூறுகளை ஆர்வமுடன் வெப்பம் உருகிவிடும்" என்று கூறுகிறார். இன்று நாம் அணுவின் பாகங்கள் தீர்ப்பதற்கு மாறாக என்றால், வெப்பம் மற்றும் ஆற்றல் (கதிர்வீச்சு) ஒரு மகத்தான வெளியீடு இருக்கலாம் என்று புரிந்து.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
86. - விவரித்தார் அறுமீனையும் மிருகசீரிஷத்தையும் நட்சத்திர கொத்தாக (யோபு 38:31, NW). கொத்துக் ஈர்ப்பு ஒன்றாக குழு பிணைக்க போதுமானதாக இல்லை, ஏனெனில் ஓரியன் நட்சத்திர கொத்து தளர்வான மற்றும் பிரிவதை போது பிளீயட்ஸ் நட்சத்திர கொத்து ஈர்ப்பு, கட்டப்படுகிறது. 4,000 ஆண்டுகளுக்கு முன்பு கடவுள் "நீங்கள் பிளீயட்ஸ் கொத்து கட்டி, அல்லது பெல்ட் ஓரியன் இழக்க முடியுமா?", வேலை கேட்டார் ஆயினும் அதை நாம் பிளீயட்ஸ் ஈர்ப்புரீதியாக பிணைக்கப்பட்டு உள்ளன, ஆனால் ஓரியன் நட்சத்திரங்கள் தவிர பறக்க என்று உணர்ந்த மட்டுமே சமீபத்தில் உள்ளது.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
87. - பாதுகாப்பான குடிநீர் (லேவியராகமம் 11: 33-36) .Gud ஒரு இறந்த விலங்கு தொடர்பு வருவதை மூலம் அசுத்தமான என்று குழாய்கள் அல்லது தேங்கி நிற்கும் தண்ணீர் குடித்து தடைசெய்தது. மருத்துவ விஞ்ஞானம் அசுத்தமான தண்ணீர் டைபாய்டு, காலரா ஏற்படுத்தும் என்று கற்று என்று மட்டும் கடந்த 100 ஆண்டுகளில் ஆகிறது.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
88. - பூச்சி தடுப்பு (லேவியராகமம் 25: 1-24) .Jordbrukarna பூச்சிகள் நாள் துன்புறுத்த.ஆனால் கடவுள் முன்பு பூச்சிகள் நூற்றாண்டுகளாக கட்டுப்படுத்த ஒரு உறுதி தீர்வு கொடுத்தார். மோசே எந்த பயிர்களை எழுப்பப்பட்டன போது ஏழு ஒரு ஆண்டு ஒதுக்கி இஸ்ரேல் கட்டளையிட்டார். கடந்த ஆண்டு அறுவடை பூச்சிகள் குளிர்காலத்தில் தண்டுகள், வசந்த காலத்தில் குஞ்சு பொரிக்கின்றன புதிய பயிர் முட்டைகள் நிலைநிறுத்தப்பட்டது. பயிர் ஒரு வருடம் ஏழு மறுக்கப்பட்டால், பூச்சிகள் மீது ஊட்டி எதுவும் இல்லை, இதனால் கட்டுப்படுத்தப்படும்.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
89. - மண் பாதுகாப்பு (லேவியராகமம் 23:22). 1) முக்கிய மண் கனிமங்கள் பராமரிக்கப்படும் என்பது: அதன் områden.Detta பல்வேறு நோக்கங்களை செயல்படுத்தியது ஒவ்வொரு ஏழாவது வருடமும் தரிசு போட நிலம் இருந்தது, ஆனால் கடவுள் தங்கள் துறைகளில் அறுவடை, மற்றும் மூலைகளிலும் (பக்கங்களிலும்) அறுவடை போது தேர்வை விட்டு விவசாயிகள் உத்தரவு மட்டும். 2) ஹெட்ஜ் வரிசையில் காற்று அரிப்பு குறைக்க வேண்டும். 3) ஏழை சிறிய தேர்வு சாப்பிட முடியும். இன்று, மண் தோராயமாக நான்கு பில்லியன் டன் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க பயிர் நிலங்களில் இருந்து மறைந்துவிடும். கடவுளுடைய கட்டளைகளை பின்பற்றினால் இந்த நிலத்தை சீரழிவு ஒரு பெரும் பகுதி தவிர்க்க முடியும்.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
90. - நிச்சயமாக விலங்கு உணர்வுகளை (யோபு 39, நீதிமொழிகள் 30: 24-28; எரேமியா 8: 7). புதிதாக உண்டாக்கி சிலந்தி கற்று இல்லாமல் ஒரு சிக்கலான வலைத்தளத்தை இன்றளவும். ஒரு புதிதாக உருவாகி பட்டாம்பூச்சி எப்படியோ ஒரு வழிகாட்டி இல்லாமல் 2,500 மில் இடம்பெயர்வு பாதைக்கு செல்லவும் தெரிகிறது. கடவுள் அவர் குறிப்பிட்ட திறமைகளை ஒவ்வொரு உயிரினம் வழங்கப்படும் என்று அறிவிக்கிறது. வேதம், இல்லை பரிணாம வளர்ச்சி, விலங்கு உணர்வுகளை விளக்குகிறது.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
91. - விலங்குகள் மனசாட்சி இல்லை (சங்கீதம் 32: 9). ஒரு கிளி சபிக்க தேவதூஷணஞ், ஆனால் övertygelse.Många விலங்குகள் திருட உணர்கிறேன் கற்று கொள்ள முடியும், ஆனால் அவர்கள் குற்ற அனுபவிக்க கூடாது.மனிதன் நமது மனசாட்சி எங்கிருந்து வந்தன விலங்குகளில் இருந்து உருவானது என்றால்? பைபிள் மட்டுமே மனிதன் கடவுள் படத்தில் ஒரு தார்மீக உயிரினம் என உருவாக்கப்பட்டது என்று விளக்குகிறது.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
92. - எதிர்பார்க்கப்பட்ட போலி அறிவியல் (1 தீமோத்தேயு 6:20) .Evolutionsteorin காணக்கூடிய ஆதாரங்கள் முரண்படுகின்றன. பைபிள் அறிக்கையிட்டு என்று அந்த இருக்கும் என்று. "அவதூறான மற்றும் செயலற்ற babblings மற்றும் தவறுதலாக (அறிவியல்) அறிவு எனப்படும் முரண்பாடுகள்" ட்ரூ அறிவியல் படைப்பாளர் வார்த்தைகளை இசைவானதாக முன்கூட்டியே எச்சரித்தார்.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
93 - அறிவியல் பைபிள் (கொலோசெயர் 2: 3) உறுதிப்படுத்துகிறது .These நுண்ணறிவு அனைத்து மனிதனால் கோட்பாடு மற்றும் அனைத்து பிற என்று அழைக்கப்படும் ஏவப்பட்டு எழுதப்பட்ட புத்தகங்கள் மேலே இதுவரை பைபிள் வைக்க. மாறாக, குர்ஆன் ஒரு சேற்று ஏரியில் சூரியன் மறையும் (சூரா 18:86) .Hadith பல கட்டுக்கதைகள் என்று கூறுகிறார். டிஎன்ஏ ஆராய்ச்சி மூலம் மறுக்கப்பட யார் - மோர்மோன் இந்தியர்கள் யூதர்களின் வழி வந்தவர்கள் என்று விளக்குகிறது. கிழக்கு எழுத்துக்களில் உண்மை அறிவியல் முரண்படுகின்றன.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
.Bibeln கடவுள் ஒவ்வொரு மனித இதயம் தனது தார்மீக சட்டம் பிடிச்சிருக்கு என்று காட்டுகிறது: - 94. மனித மனசாட்சி (14-15 ரோமர் 2) புரிந்து. கான் என்ற அர்த்தம், மற்றும் அறிவியல் அறிவு உள்ளது. நாம் அது பைபிள் ஒவ்வொரு மனிதனும் சரியான மற்றும் தவறான ஒரு கடவுள் கொடுத்த அறிவு உள்ளது என்று விளக்குகிறது முதலியன, திருடுதல், பொய், கொலை தவறு என்று எனக்கு தெரியும்.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
.evolution அடைவு காதல் விளக்க முடியாது:: - 95. லவ் (7-12 1 யோவான் 4 37-40 மத்தேயு 22) விளக்கினார். இருந்தபோதிலும், எங்கள் இருப்பு மிகவும் நோக்கம் தேவனுடைய வார்த்தை தெரியும் நம்முடைய சகமனிதருக்கு அன்பு உள்ளது வெளிப்படுத்துகிறது. தேவன் அன்பாகவே இருக்கிறார், நாம் அவருடைய அன்பை வெளிக்காட்டும் தம் சாயலில் உருவாக்கியுள்ளது.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
96. - நீங்கள் ஆவி இருக்கிறது உண்மையான (16:22 எண்கள், சகரியா 12: 1). ஆளுமை அல்லாத உடல் உள்ளது. உதாரணமாக, ஒரு இதய மாற்று பெறுநர் பின்னர் கொடுப்பவரின் தன்மையை பெற முடியாது.ஒரு amputee அவர் அவர்களின் உடல் உறுப்புக்களை இழந்து முன் இருந்தது அரை நபர் அல்ல. நம்முடைய நித்திய இயல்பு ஆவி, இதயம் மற்றும் மனதில் உள்ளது. பைபிள் "மனிதன் வெளித்தோற்றத்தை தெரிகிறது, ஆனால் இறைவன் இதயம் இருக்கிறது" என்று கூறுகிறது (1 சாமுவேல் 16: 7).
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
97. - தெரியவந்தது துன்பத்தை காரணம் (ஆதியாகமம் 3, ஏசாயா 24: 5-6). எங்கள் பெரிய வடிவமைக்கப்பட்டுள்ளது பிரபஞ்சத்தின் மீறல் காட்டப்பட்டுள்ளது துன்பம் கீழ் மண். ஆனால், பைபிள், பரிணாம வளர்ச்சி அல்ல துன்பம் தோற்றம் விளக்குகிறது. உலகில் அறிமுகம் துன்பம், வலி ​​மற்றும் இறப்பு - மனிதன் கடவுளுக்கு எதிராக கலகம் போது, சாபம் கொடுத்தார்.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
98. - இறப்பு பிரகடனம் (ரோமர் 6:23).அனைவரும் இறுதியில் இறக்கிறார். நாம் இறந்து ஏன் தனியாக பைபிள் விளக்குகிறது - "ஆத்துமா பாவங்களை சாவான் யார்" (எசேக்கியேல் 18:20). சின் கடவுளின் சட்டத்தை மீறுவதாகும் உள்ளது. நீங்கள் இறந்து போகிறீர்கள் என்றால் பார்க்க, நீங்கள் பத்து கட்டளைகள் (யாத்திராகமம் 20) படிக்க வேண்டும். 
நீங்கள் பொய் சொல்லியிருக்கேனா?(வெள்ளை பொய்கள் மற்றும் பொய்களை கணக்கிடப்படுகிறது.) எவர் திருடப்பட்ட? (ஒரு சோதனை காப்பி அல்லது வரி திருட்டு ஆகும்.) இயேசு (மத்தேயு 5:28) "எவர் தன் ஏற்கெனவே தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ் செய்தாயிற்று காம ஒரு பெண்ணைக் கண்டு" என்று கூறினார்.நீங்கள் எப்போதும் காம பார்த்தீர்களா?பின்னர் நீங்கள் இருதயத்தில் ஒழுக்கத்தில் உள்ளன. நீங்கள் எப்போதாவது யாராவது வெறுத்தேன் அல்லது யாராவது ஒரு முட்டாள் செய்தாயா? அப்படியானால், பைபிள் (: 1 யோவான் 3:15 21-22 மத்தேயு 5) கொலை குற்றவாளி என்று கூறுகிறார். நீங்கள் எப்போதும் வீணாக உங்கள் படைப்பாளரின் பெயர் (ஆண்டவரே, கடவுள், இயேசு, அல்லது கிறிஸ்து) பயன்படுத்த வேண்டும்? இந்த வசை அழைக்கப்படுகிறது - தேவன் அது வெறுக்கிறார்கள். 
நீங்கள் அவற்றுக்கு இந்தக் கற்பனைகள் உடைந்து போனால், பின்னர் உங்கள் சொந்த சேர்க்கை, நீங்கள் ஒரு தெய்வ நிந்தனை, ஒரு கொலைகாரன், ஒழுக்கத்தில், ஒரு திருடன், இருதயத்தில் ஒரு பொய்யன். நாம் மட்டுமே பத்து கட்டளைகள் ஐந்து பார்த்துவிட்டேன்.நாம் இறந்து ஏன் இந்த.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
99. - நீதி செய்தார் (: 30-31 அப்போஸ்தலர் 17).எங்கள் கடவுள் அருளிய மனசாட்சியை சகல பாவங்களையும் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று வெளிப்படுத்துகிறது. ஆழமான நாம் கண்களை படைத்த அவர் ஒவ்வொரு இரகசிய பாவத்தின் (ரோமர் 2:16) காண்கிறது என்று எனக்கு தெரியும். அது தான் நடந்தது போல் நம் மனதில் உருவாக்கப்பட்டது யார் அவர் நம் கடந்த குற்றம் நினைவு. கடவுள் பாவம் தண்டனை மரணம் என்று அறிவித்தார். உடல்ரீதியான மரணம் பின்னர் இரண்டாவது மரணம், முதல் வரும் - அந்த அக்கினிக் கடவுள் இருந்து நித்திய பிரிப்பு (வெளிப்படுத்தின விசேஷம் 21: 8). கடவுள் பொய் சொல்ல முடியாது. ஒவ்வொரு பாவத்தை தீர்மானிக்கப்பட வேண்டும்.அவரது நீதி அது கோருகிறது. ஆனால் தேவன் தம்முடைய நாமத்திற்கு அந்த அழைப்பை கருணை நிறைந்த உள்ளது.அவர் நீதி பணியாற்றினார் வேண்டும் மற்றும் இரக்கம் ஒரு வழி செய்துள்ளது.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
100. - நித்திய ஜீவன் (யோவான் 3:16) தெரியவந்தது. வயதான மற்றும் இறப்பு ஒரு சிகிச்சை ஆராய்ச்சியாளர்கள் வீண் தேடல்.நற்செய்தியை இன்னும் அனைத்து வாழ்விற்கு ஆதாரமாக இருக்கிறது அந்த தேவன், நாம் பரலோகத்தில் அவரோடு என்றென்றும் வாழ முடியும் என்ற மிகவும் சுதந்திரமாக நம்மை மன்னிக்க ஒரு வழி செய்துள்ளது என்று ஆகிறது. 
"ஆனால், கடவுள் நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்தார் என்று எங்களுக்கு தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்" (ரோமர் 5: 8). 
(யோவான் 3:16) "தேவன் தம்முடைய ஒரே அவரை கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு கூடாது பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ என்று, மகனை கொடுத்த உலக நேசித்தேன்". 
பாவம், பயம் மற்றும் வலி இருந்து இலவச - கடவுள் ஒவ்வொரு நபர் ஒரு அன்பான, நித்திய உறவு வேண்டுமாம். எனவே, அவர் சிலுவையில் எங்கள் பதிலாக இறக்கக்கூடிய தன்னுடைய மகனை அனுப்பினார்.
"பாவத்தின் சம்பளம் மரணம், தேவனுடைய ஈவு நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நித்திய வாழ்க்கை" (ரோமர் 6:23). 
அப்பொழுது இயேசு அவர் தனியாக நமது பாவங்களை சிலுவையில் தண்டனையை தகுதிபடைத்த, பாவம். அவர் எங்கள் இடத்தில் இறந்தார். பின்னர் அவர் மரணம் தோற்கடிக்க கல்லறையில் இருந்து அதிகரித்துள்ளது. 
அவர்களுடைய பாவங்களையும் அவரை நம்பிக்கை யார் மன்னிப்புக் அனைத்து சேமிக்கப்படும். மனம் திரும்பி இயேசுவை உங்கள் நம்பிக்கையை வைக்க, சங்கீதம் 51 உங்கள் பிரார்த்தனை செய்ய. பின்னர், தினமும் உங்கள் பைபிள் படிக்க நீங்கள் படிக்க என்ன வழிபடுங்கள். கடவுள் உன்னை ஒருபோதும் தவறாது.
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png
101. - பாதிக்கப்பட்ட தீர்வு (வெளிப்படுத்துதல் 21). எந்த பரிணாம வளர்ச்சி அல்லது மதம் துன்பங்களுக்கு தீர்வு காண வழங்குகிறது.ஆனால் கடவுள் தன் மகனை நம்புகிற அனைவருக்கும் ஒரு பரிசு சொர்க்கம் உள்ளது. வானில், 
";: முன்னாள் விஷயங்கள் காலமானார் செய்யப்படுகின்றன இல்லை மரணம் அல்லது துயரத்தை உண்டாயிருக்கும் அல்லது அழுவதை எந்த வலி இருக்க வேண்டும் கடவுள், அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் யாவையும் துடைப்பார்."(வெளிப்படுத்துதல் 21: 4).
http://www.apg29.nu/img/1439501434-hr-lightblue.png