வியாழன், 26 பிப்ரவரி, 2015

அந்திரேயாவின் இறுதி நாட்கள்

அந்திரேயாவின் இறுதி நாட்கள்

இயேசு பரமேரிய பின்பு அந்திரேயா, கப்பதோக்கியா, பித்தினியா, கலாத்தியா, பைசாந்தியம் (தற்போதய இஸ்தான்புள்) இடங்களில் நற்செய்தி அறிவித்து சபைகளை நிறுவினார். பின்னர் கருங்கடலின் வடபகுதியில் அமைந்துள்ள சித்தியா என்ற பகுதியில் அந்திரேயா நற்செய்தி அறிவித்தார் என தொடக்க கால வரலாற்று ஆசிரியர் எசபியஸ் (Eusebius) எழுதியுள்ள Ecclesiastical History 3.1.1 புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதிகாலத்தில் சித்தியர்கள் (Schythians) காட்டுமிராண்டிகளாகவும் நாகரீகம் அறியதவர்களாகவும், முரடர்களாகவும் இருந்தனர். இப்படிப்பட்ட மக்கள் மத்தியில் அந்திரேயா நற்செய்தியை அறிவித்ததாக ஆதிகால திருச்சபை வரலாறு கூறுகிறது.
 
இதன்பின்னர் அந்திரேயா கிரீஸ் நாட்டில் திரேஸ், மாசிடோனியாப் பகுதிகளில் ஊழியஞ் செய்து இறுதியாக அகாய் மாநிலத்தின் பாட்ராசு (PATRAS) என்ற பட்டணத்திற்கு வந்து அங்கேயும் ஊழியம் செய்தார். அகாய் மாநிலத்தின் ஆளுநர் ஏகீசு என்பரின் மனைவி மரணத்தை நெருக்கும் நிலையில் இருந்தாள். அந்திரேயா கிறிஸ்துவின் நாமத்தினால் அவளை சுகப்படுத்த அவள் இயேசுவை சொந்த இரட்சகராக எற்றுகொண்டாள். இது ஆளுநர் ஏகீசுக்கு பிடிக்கவில்லை. ஏகீசுவுக்கு ஸ்ட்ராட்டோகிள்சு என்ற தம்பி இருந்தார். இவருக்கு அருமையான வேலைக்காரன் “ஆல்க்மேன்” மரண வியாதிப்பட்டிருந்தான். அந்திரேயா கிறிஸ்துவின் நாமத்தினால் அவரையும் சுகப்படுத்த ஏகீசுவின் தம்பியும் இயேசுவை ஏற்றுக்கொண்டார். இதை அறிந்த ஏகீசு, அந்திரேயாவை சிறையில் அடைத்து சிலுவையில் அறைய உத்தரவிட்டான். அந்திரேயா அதிக வேதனை அடையவேண்டுமென சொல்லி, சிலுவையில் ஆணிகள் அடிக்காமல், கயிறுகளால் சேர்த்து கட்டச் செய்தான். பசியினாலும் தாகத்தினாலும் வருந்தி சாவதைப் பலர் காணவேண்டுமென்று அப்படி செய்தான். ஏழு ரோம சேவகர்கள் அந்திரேயாவைச் சாட்டையால் அடித்து துன்புறுத்தினர். அந்திரேயா, “என் ஆண்டவர் மரித்த சிலுவை வடிவில் நான் மரிக்க தகுயற்றவன். என்னை பெருக்கல் (X) வடிவ சிலுவையில் அறைய வேண்டும்” என்றார். அந்தபடியே 'X' வடிவ சிலுவையில் கயிறுகளால் இறுக்கி கட்டினார்கள். அவர் சிலுவையைக் கண்டதும், "மேன்மையான சிலுவையே, உன்னில் தொங்கி என்னை மீட்டவர், உன் வழியாய் என்னை ஏற்றுக் கொள்வாராக" என்று ஜெபித்தார். இரண்டு நாட்கள் வேதனை மத்தியிலும், சிலுவையை சுற்றி நின்றவர்களுக்கு இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து இரத்த சாட்சியாக கிரீசு நாட்டின் பாட்ராசு நகரில் மரித்தார்.
 
அந்திரேயா மரித்த பின்னர் நடந்து ஸ்காட்லாந்து தேசத்தில் நடந்த நிகழ்ச்சியைப் பாரம்பரிய செய்தி கூறுகிறது. ஸ்காட்லாந்து நாட்டின் பிகட்சின் என்ற பகுதியின் அரசன் அங்கஸ், இங்கிலாந்து அரசனான அதெல்ஸ்டான் (Athelstan) உடன் போர்க்களத்தில் இருந்தான். போரின் முந்தின நாள் இரவில் பிகட்சு அரசன் அங்கசின் கனவில் அந்திரேயா தோன்றி, ‘இயேசு போரில் துணை செய்து வெற்றியளிக்க போவதாக” கூறியுள்ளார். அடுத்த நாள் போர்க்களத்தில் பிகட்சு படையின் நீளத்தில், வானத்தில் மிகவும் ஒளியுள்ள ஒரு சிலுவை காணப்பட்டது. இந்த சிலுவை பிகட்சு அரசன் அங்கஸ் வெற்றிபெறும் வரையில் மறையவில்லை. அன்று முதல் நீள நிற பின்னணியில், வெள்ளை நிற சிலுவை ஸ்காட்லாந்து தேசத்தின் தேசிய கோடியாக உள்ளது.
 
அந்திரேயா ஒரு பெரிய பிரசங்கியாக இருக்கவில்லையென்று சுவிசேஷங்களிலிருந்து தெரிகின்றது. ஆனால், அநேகரை தனிப்பட்டவிதத்தில் கிறிஸ்துவண்டையில் வழிநடத்தினான். சிலுவையில் தொங்கும் வேளையிலும் ஆத்தும பாரமுள்ளவனாய் சாட்சி பகிர்ந்தான். நாமோ நம்மிலுள்ள குறைகளைத்தான் பெரிதாக எண்ணுவோம். பிரசங்கம் செய்யத் தெரியாது, ஜெபிக்கத் தெரியாது, வேதம் படித்துக்கொடுக்கத் தெரியாது என்று எத்தனை சாக்குபோக்குகள். இதனை வாசிக்கும் நீங்கள் ஒரு நல்ல பிரசங்கியாக இல்லாதிருக்கலாம். ஆனால், தனிப்பட்டவிதத்திலே சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு எந்தத் திறமையும் தேவையில்லை. தேவஅன்பு இருந்தால் போதும். அதனை எல்லோரும் செய்யலாம். அந்திரேயாவைப்போல வீட்டாரைக்குறித்தும், உங்கள் சொந்த நாட்டாரைக் குறித்தும் ஆத்தும பாரமுள்ளவர்களாக இருக்கிறீர்களா?

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

பரிசேயன்

"பரிசேயன்"



பரிசேயன்
(Pharisee)

பரிசேயர்கள் கலிலேயாவில் வாழ்ந்தவர்கள். கிரேக்கச் சொல் "பாரிசெயாச்". எபிரேயச் சொல் "பெருசீம்". பரிசேயர் கிரேக்கச் சொல் ஒருமையில் "பாரிசேயாச்" என்றும், பன்மையில் "பாரிசேயாய்" என்று கூறலாம். பரிசேயர்கள் மற்றவர்களைக் காட்டிலும் தங்களை வேறுபடுத்திக் கொண்டவர்கள். பரிசேயன் என்றால், "பிரித்தெடுக்கப்பட்டவன்" என்று பொருள். 

கி.மு.இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் மூன்றாம் நூற்றாண்டின் கடைசி பகுதியிலும் பாலஸ்தீனாவில் உள்ள 'ஹாசிடிம்'  (Hasidim) என்ற பக்திக்குரிய மக்கள் வாழ்ந்தார்கள். மக்கபேயர் புரட்சியின்போது இந்த ஹசிடியர்கள் - மக்கபேயர்களுக்கு ஆதரவாக இருந்தார்கள்.

இவர்கள் "காசீடிம்" என்ற வகுப்பாரிலிருந்து வந்தவர்கள். 'ஹசிடிம்' என்ற சொல்லை சிலர் 'சாசிடிம்' (Chasidim) என்று உச்சரிக்கிறார்கள். இச்சொல் சங்கீத புத்தகத்தில் 23 தடவை வருகின்றது. அங்கு இச்சொல் "பரிசுத்தவான்கள்" என்று மொழிபெயர்த்துள்ளது. நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர்கள். மதப் பிரகாரமாக சுத்தமில்லாத கரியங்களிலிருந்து தங்களை பரிசேயர் வேறுபடுத்திக் கொண்டார்கள். 

பின்னர், ஹாஸ்மோனியர் ஆட்சியாளர்கள் யுத்தம் செய்ய வேண்டிய மனநிலையில் இருந்ததால் பரிசேயர் தங்களுடைய படைஉதவியை பின்வாங்கிக் கொண்டார்கள். இந்த 'பரிசேயர்' என்ற பெயர்  'ஜான் கிர்ஹேனஸ்' என்பவர்  யூதேயாவை ஆண்டபோது, இவர்களுக்கு இப்பெயர் கொடுக்கப்பட்டது. மகா ஏரோது ஆட்சிக் காலத்தில் ஏறக்குறைய சுமார் 6000 பரிசேயர் இருந்தனர் என சொல்லப்படுகிறது.

ஜான் கிர்ஹேனஸ் (கி.மு.135 - கி.மு.105) காலத்திலும், அலெக்சாண்டர் ஜேன்னஸ் (கி.மு.103 - கி.மு.76) காலத்திலும் பரிசேயர்கள் ஒடுக்கப்பட்டார்கள். ராணி சலோமி அலெக்சாண்டிரா (கி.மு.76 முதல் கி.மு.67) காலம் "பரிசேயர்களின் பொற்காலம்" எனலாம். சாலமோனின் சங்கீதம் ராணி அலெக்சாண்டிராவை புகழ்ந்து பாடியது.

எருசலேமின் அழிவுக்குப்பின் பரிசேயர்கள் இந்த   யூதமதத்தை உயிர்ப்பித்தார்கள். அதற்கு 'ரபி யோகன்னா பென்சாகி' (Rabbi Johannan Benzakkai) என்பவர் இந்த யூத மதம் உயிர்ப்பிக்க தலைமைத்துவம் வகித்தார்.

இவர்கள் வேதப்பிரமாணத்திற்கு (Interpreters) விளக்கம் கொடுப்பவர்கள். ஜெப ஆலயங்களில் முக்கிய பங்கு வகித்தவர்கள். கிறிஸ்துவின் நாட்களில் இவர்கள் மிகுந்த செல்வாக்கு உடையவர்களாய் இருந்தனர். 

இவர்கள் கட்டுப்பாடு மிக்கவர்கள்.  யூதர்களின் நியாயப் பிரமாணத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கடைபிடிக்க முயன்றவர்கள். எனவே, இவர்களை பக்தி கூட்டத்தார் எனவும்  அழைப்பார்கள். ஆபிரகாமைப் போல தேவனை நேசிப்பவர்கள். இருப்பினும், பரிசேயரில் பெரும்பான்மையினர் சுயநீதியுள்ளவர்கள்.

இவர்கள் தங்களை நீதிமான்கள் என்று கருதியவர்கள். உண்மையில், கிறிஸ்துவின் நாட்களில் இவர்கள் புறம்பாக மட்டுமே நீதிமான்கள் போல் தோன்றினர். உள்ளேயோ தீமையினால் நிறைந்திருந்தனர். மாய்மாலக்காரராய் இருந்தனர். (மத்தேயு: 23:13-32).

என்றாலும், எல்லாப் பரிசேயர்களுமே மாய்மாலக்காரர்கள் என்று சொல்லிவிட முடியாது. நிக்கொதேமுவும், கமாலியேலும் பரிசேயர்கள்தான் என்றாலும், நேர்மையான, நீதியுள்ள மனிதர்களாயிருந்தனர். (யோவான்: 3:1; அப்போஸ்தலர்: 5:34). அப்போஸ்தலனாகிய பவுலும் கூட ஒரு பரிசேயனே! (அப்போஸ்தலர்: 26:5; பிலிப்பியர்: 3:5).

பரிசேய இனம் இன்னும் அழியவில்லை. பரிசேய சமயம் தான் இன்றைய  யூத மதத்தின் அஸ்திபாரமாகும். 

பரிசேயர்களில் 7 வகை உண்டு. 

1. தோள் பட்டை பரிசேயர்:

காணிக்கை போடும்போது மற்றவர்கள் காணும்படி விளம்பரப்படுத்தி போடுவது.

2. சற்று நில் என்று சொல்லுகிற பரிசேயர் கூட்டம்:

தர்மம் செய்யும்போது வழியருகே போகிறவர்களை சற்று நில் என்று சொல்லி பார்க்க வைத்து போடுபவர்கள்.

3. குருட்டுப் பரிசேயர்:

தாம் போகும்போது பெண்கள் எதிரில் வந்தால், கண்களை மூடி நடந்து செல்வார்கள். இவர்கள் சுவரில் முட்டி மோதி இரத்தம் வந்தாலும் கண்களைத் திறக்க மாட்டார்கள்.

4. குனிந்த பரிசேயர்:

இவர் சோதனைகளுக்குத் தப்பும்படி குனிந்துதான் நடப்பார்.

5. எப்போதும் தங்கள் நற்கிரியைகளை எண்ணிக் கொண்டிருக்கும் பரிசேயர்:

தங்கள் குறைகளை மூடும்படி தங்கள் நல்ல காரியங்களை நினைவுபடுத்திக் கொண்டிருப்பார்கள். 

6. தேவனுக்குப் பயப்படும் பரிசேயன்: 

யோபுவைப் போல் உண்மையாய் நீதியாய் வாழ்பவர்கள்.

7. தேவனை நேசிக்கும் பரிசேயன்:

ஆபிரகாமைப் போல தேவனை நேசிப்பவர்கள். இருப்பினும், பரிசேயரில் பெரும்பான்மையினர் சுயநீதியுள்ளவர்கள்.


திங்கள், 9 பிப்ரவரி, 2015

வேதாகமம் விளக்க விரிவுரை

வேதாகமம் விளக்க விரிவுரைவேதாகமம்

The Bible Commentary Tamil

                                                                 லிங்க்

                                         http://thebiblecommentarytamil.blogspot.in/




புகைபிடிப்பது (smoking) குறித்து வேதம் என்ன சொல்லுகிறது?

 புகைபிடிப்பது (smoking) குறித்து வேதம் என்ன சொல்லுகிறது?

புகைபிடிக்கும் பழக்கம் குறித்து வேதத்தில் தேடினால் யாரும் புகை பிடித்ததாக தெரியவில்லை.
கீழேயுள்ள வசனங்களில் நன்றாகவே நாம் புரிந்துகொள்ளும்படி சொல்லப்பட்டுள்ளது.
எண்ணாகமம் 3:4 ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவும் அந்நிய தூபம் /அக்கினி கொண்டுவந்து இறந்து போனார்கள்.

எரேமியா 19:13 எந்த வீடுகளின்மேல் வானத்தின் சகல சேனைக்கும் தூபங்காட்டி அந்நியதேவர்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளாகிய எருசலேமின் வீடுகளும் யூதாவுடைய ராஜாவின் வீடுகளும் தோப்பேத் என்கிற ஸ்தலத்தைப்போல் தீட்டுப்பட்டவைகளாய் இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார். நீ புகைபிடித்தால் தீட்டுப்பட்டவன்.

நீதிமொழிகள் 16:27 பேலியாளின் மகன் கிண்டிவிடுகிறான்; எரிகிற அக்கினிபோன்றது அவன் உதடுகளில் இருக்கிறது. எனவே புகைபிடித்தால், நீ பேலியாளின் மகன் (ungodly man) . இப்படிப்பட்டவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை.

தானியேல் 1:8 தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான். புதிய ஏற்பாட்டு காலத்து பரிசுத்தவான்களாகிய நாம் அதைவிட மேலான தீர்மானத்துடன் இருக்க முயற்சிக்கவேண்டும்.

I கொரிந்தியர் 3:16-17
16. நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?
17. ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம். 
புகைபிடிப்பதால் (அந்நிய அக்கினி கொண்டு வந்தது போல்) நாம் தேவனுடைய ஆலயத்தை கெடுக்கிறோம்.தேவனுடைய ஆலயமாகிய இந்த சரீரத்தை பரிசுத்தமாக வைக்கவேண்டும் என்று கட்டளை பெற்றிருக்கிறோம். 

1 தெசெலோனிக்கேயர் 5:23 சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக, உங்கள் ஆவி ஆத்துமா சரீரம்முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. சரீரம் முழுவதும்என்னும் வார்த்தைகளை கவனியுங்கள்.
எபேசியர் 5:18 துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், (பரிசுத்த) ஆவியினால் நிறைந்து இருங்கள்; புகையினால் நிறைந்து இருக்காதீர்கள்.

கடைசியாக முக்கியமான வசனம்:
யோபு 2:10 இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை !!! (amazing!)
கர்த்தருடைய ராஜ்யத்தில் காணப்படவேண்டுமென்றால், புகை பிடிக்காதீர்கள் !

இராப்போஜனம் (Lord's Supper) மதியம் எடுப்பது சரியா தவறா? கால்களை கழுவ வேண்டுமா?

 இராப்போஜனம்

 (Lord's Supper) மதியம் எடுப்பது சரியா தவறா? கால்களை கழுவ வேண்டுமா?

கால்களை கழுவ வேண்டுமா

 இராப்போஜனம்

[Part A][1] தமிழில்: இராப்போஜனம். இரவு + போஜனம்.[2] கிரேக்க மொழியில்: Deipnon (δεῖπνον). The principal meal of the Greeks and Romans, corresponding to our dinner rather than supper. அதாவது இரவு போஜனம்.
[3] ஆங்கிலத்தில்: "Lord's Supper". Supper: especially a formal meal usually held at the evening. சூரியன் மறைந்த சாயங்கால நேரம் என்று சொல்லலாம்.
[4] எபிரேய மொழியில்: אֲרוּחַת עֶרֶב
(aruxat erev) - Dinner

இராப்போஜனம் என்று சொல்லிவிட்டு பகலில் கொடுத்தால்.... சரி என்று தோன்றுகிறதா?

ஒருவேளை அதை கர்த்தருடைய பந்தி என்று அழைத்தால், எப்பொழுதுவேண்டுமானாலும் கொடுக்கலாம் என்ற எண்ணம் வரக்கூடும். கர்த்தருடைய பந்தி, "Holy Communion" என்ற இந்த வார்த்தைகள் வேதத்தில் பயன்படுத்தப்படவில்லை. 
Lord's Supper, இராப்போஜனம், அப்பம் பிட்குதல் என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. Does not make any sense to take Lord's Supper at breakfast or lunch.பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் ஜனங்கள் பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள். கர்த்தர் சொன்னார்: யாத் 12:6-8 "சாயங்காலத்தில்அதை அடித்து, அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து, அன்று இராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள்....அதிலே ஒன்றையும் விடியற்காலம் மட்டும் மீதியாக வைக்காமல், விடியற்காலம்மட்டும் அதிலே மீதியாய் இருக்கிறதை அக்கினியால் சுட்டெரிப்பீர்களாக"புதிய ஏற்பாட்டில் 1 கொரிந்தியர் 11:23-26 ல் பவுல் சொல்லும்போது: கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்றுஇராத்திரியிலே அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.

இயேசுவும் தாம் காட்டிக்கொடுக்கப்போகிற அன்று சாயங்காலமானபோது (supper), பன்னிருவரோடுங்கூட அவர் பந்தியிருந்தார் என்று வாசிக்கிறோம். (மத்தேயு 26:20மாற்கு 14:17)

யோவான் 13:15 
நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். என்று இயேசு சொல்கிறார். அப்படியானால் வேதத்தின்படிதான் கொடுக்கவேண்டும்.

அப்போஸ்தலானாகிய பவுலும் அப் 20:7-11 ல் வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி
 சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரி மட்டும் பிரசங்கித்தான்.அப்பொழுது ஐத்திகு என்னும் பேர்கொண்ட ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்து, பவுல் நெடுநேரம் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருக்கையில், மிகுந்த தூக்கமடைந்து, நித்திரைமயக்கத்தினால் சாய்ந்து, மூன்றாம் மெத்தையிலிருந்து கீழே விழுந்து, மரித்தவனாய் எடுக்கப்பட்டான். உடனே பவுல் இறங்கிப்போய், அவன்மேல் விழுந்து, அவனை அணைத்துக்கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிர் இவனுக்குள் இருக்கிறது என்றான். பின்பு ஏறிப்போய், அப்பம் பிட்டு புசித்து, விடியற்காலமளவும் வெகுநேரம் பேசிக்கொண்டு, பின்பு புறப்பட்டான்.

மேலே கூறப்பட்ட வசனத்தில் இரவில் தான் அப்போஸ்தலர்கள் இராப்போஜனத்தை கொடுத்திருக்கிறார்கள். பகலில் அல்ல, ஏனெனில் அதுதான் இயேசு வைத்து சொல்லிவிட்டுபோன மாதிரியாகும்.

மிகவும் முக்கியமாக இயேசு மரித்தநேரத்தில் மத்தேயு 27:45 ஆறாம் மணி நேரமுதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் (12:00pm to 3:00pm) பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. அதாவது அமெரிக்காமுதல் இந்தியா உட்பட்ட எல்லாநாடுகளிலும் ஒரே நேரத்தில் இருள். 
பேரொளி இல்லை, பூமியெங்கும் இருள். அந்தச்சூழலில் இயேசுவின் சரீரமானது தொங்கிற்று. இராப்போஜனத்தில் பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய இயேசுவின் சரீரமானது பிட்கப்பட்டு கொடுக்கப்படுகிறது, அங்கே அந்தகாரம் உண்டாயிருந்தது.
பகலில் கொடுக்கவேண்டும் என்று எங்கும் கட்டளையில்லை. இரவிலேதான் கொடுங்கள் என்றும் இயேசு கட்டளையிடவில்லை. இயேசு நமக்கு கொடுத்த மாதியானது இரவுச்சூழல் என்பதை நாம் யாரும் மறுக்கமுடியாது. பகலில் கொடுத்து அதை இராப்போஜனம் என்றழைப்பது தமிழ் மொழியின் அர்த்தத்தின்படி தவறு. பகலில் கொடுத்தால் மரணத்துக்கேதுவான பாவமா என்றால் இல்லை. ஆனால் அது சரியாக இருக்காது.

என்னதான் இருந்தாலும், அந்த குளிர்ச்சியான அமைதி என்னும் இரவுச்சூழலில் (atmosphere) ஜெபிக்கும் போது நம்முடைய சிந்தனை என்னும் அலைவரிசையில் ஒரு வித்தியாசத்தை உணரும் அனுபவமே தனிதான்.


[Part B]
நாம் ஏன் கால்களை கழுவவேண்டும்? (அப்ப ஏன் ஞானஸ்நானம் எடுக்கவேண்டும் என்று கூட அடுத்து கேட்கத்தோன்றும்.) நமக்கு தாழ்மையான இருதயம் இருந்தால் மற்றவர்களுடைய கால்களை கழுவவேண்டாம் என்று சிலர் கூறுகின்றனர். 
இயேசு பேதுருவிடம் சொன்னார்: "நான் உன்னைக் கழுவாவிட்டால் உனக்கு என்னிடத்தில் பங்கில்லை". பங்காகவேண்டும் என்பது முக்கிய காரணம். இயேசு தாழ்மையானவர், அவர் பேதுருவின் கால்களைக் கழுவுவதன் மூலம் அங்கே ஒரு பங்கை அவனுக்கு ஏற்படுத்துகிறார்.

இயேசு பேதுருவிடம் : "முழுகினவன் தன் கால்களைமாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்;
 நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார்." இங்கே முழுகினவன் என்றால் ஞானஸ்நானம் எடுத்தவன் என்று அர்த்தம். பேதுரு இயேசுவை மறுதலித்த பின்பு மனம் கசந்து அழுதான். அதற்கு இயேசுவின் அந்தப் பார்வை மட்டுமே காரணமா? என் ஆண்டவர் என் கால்களைக் கழுவி என்னை தம்முடன் ஒரு பங்காக மாற்றியும் நான் மறுதலித்தேனே.. என்பதைகூட அவன் அங்கே எண்ணியிருக்கக்கூடும் என்று நான் நினைக்கிறேன்.

மேலும் இது இயேசுவின் கட்டளை: "ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்"

இப்படி செய்யாவிட்டால் நீங்கள் ஆண்டவரின் கட்டளையை கைக்கொள்ளாத ஒரு மனிதராவீர்கள்.

என்னைப்பொறுத்தமட்டில் குறைந்தது வருஷத்துக்கு ஒருதடவையாவது எல்லாரும் 3pm-6pm கால்களை கழுவவேண்டும். எல்லாரும் எல்லாருடைய கால்களை அல்ல, இரண்டு இரண்டு பேராக கழுவலாம். (முக்கியமாக ஒருவருக்கொருவர் பிடிக்காத இருவர்). கால்களைக்கழுவிய பின்னரே சபைக்குள் நுழையும்படி வழியை அமைத்தால் யாரும் கழுவாமல் நழுவி உள்ளே செல்ல முடியாது
https://www.facebook.com/tamilvetham1