சனி, 30 ஜனவரி, 2016

இந்த மட்டும் காத்த எபினேசரே

இந்தமட்டும் காத்த எபிநேசரே
இனிமேலும் காக்கும் யெஹோவா யீரே
எந்தன் வாழ்க்கையில் இம்மானுவேலரே
இந்த (புது) வருடத்தின் நாட்களிலே
ஸ்தோத்தரிப்போம் நாமே துதிகளுடனே
ஆர்ப்பரிப்போம் அன்பர் இயேசுவை – அல்லேலூயா
2. யோர்தானும் செங்கடலும் நம் எதிரே
எழும்பி வந்தபோதிலும் காத்தவர்
சாபப்பிசாசின் சோதனைபோதிலும்
இயேசு நாமத்தில் அகற்றிட்டவர்
3. சேயைக் காக்கும் ஒரு தாயைப்போலவே
இந்த மாயலோகில் என்னைக் காக்கும் தேவனே
மகத்தான கிருபை என்மேலே
மகிபா நீர் ஊற்றிடுமே
4. பழமை எல்லாம் ஒழிந்துப் போனதே
எல்லாம் புதிதாக, தேவனே, ஆனதே
உந்தன் மகிமையில் இறங்கியே வாருமே
நாங்கள் மறுரூபம் அடைந்திடவே

வியாழன், 28 ஜனவரி, 2016

அப்போஸ்தலர் மரணம்

  1. அப்போஸ்தலர் மரணம் அப்.மத்தேயு : எத்தியோவ்பியாவில் சிறையாக்கி, அங்கே தறையோடு சேர்த்து ஆணி அடித்தனர்; அதன்பிறகு தலைவெட்டப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.
  2. அப்.சீமோன் பேதுரு : ரோம் மாநகரில் சிலுவையில் அறையப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார். இயேசுவை போல மரிக்க தனக்கு தகுதி இல்லை, அதனால் என்னை தலைகீழாக சிலுவையில் அறையுங்கள் என்று போர்சேவகாரை வேண்டிக்கொண்டார். அப்படியே அறைந்தார்கள்.
  3. அல்பேயுவின் குமாரன் அப்.யாக்கோபு : தேவாலயத்திலிருந்து கீழே தூக்கி எறியப்பட்டு, பிறகு கற்களால் எறியுண்டு இரத்தசாட்சியாய் மரித்தா.
  4. செபதேயுவின் குமாரன் அப்.யாக்கோபு : பாலஸ்தீனாவில் ஏரோது அகிரிப்பா 1 மன்னனால் ஏறக்குறைய கி.பி 44-வது ஆண்டு சிறைச்சேதம் பண்ணப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.
  5. அப்.அந்திரேயா : அக்காயா என்னப்படும் கிரேக்கப்பட்டணத்தில் ஒலிவ மரத்தினால் செய்யப்பட்டு x வடிவிலான சிலுவையில் அறையப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.
  6. அப்.பிலிப்பு : டோமிட்டியன் காலத்தில் ஹீரப்போலிஸ் என்ற பட்டணத்தில் பேதுருவை போல தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.
  7. அப்.பற்தொலொமேயு : அர்மேனியாழில் உள்ள அல்லானும் என்னும் பட்டணத்தில் சவுக்கால் அடிக்கப்பட்டு, பிறகு தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.
  8. அப்.சீமோன் : இவரை குறித்ததான சரியான ஆதாரம் இன்னும் கிடைக்கவில்லை இவரும் சிலுவையில் இரத்தசாட்சியாய் மரித்தார் என்று கருதுகின்றனர்.
  9. அப்.தோமா : இந்தியாவிலுள்ள சென்னைப்பட்டணத்தில் ஈட்டியால் குத்தப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.
  10. அப்.ததேயு : பெரிட்டஸ் என்ற இடத்தில் இரத்தசாட்சியாய் மரித்தார்.
  11. அப்.யோவான் : வயது முதிர்ந்து நல்லபடி மரித்த ஒரே அப்போஸ்தலர் இவரே ஆகும்.
  12. அப்.மத்தியா : யூதாஸ் காரியோத்துக்கு பதிலாக தெரிந்து கொள்ளப்பட்ட (அப் 1:26) இவர் கற்களால் எறியுண்டு பிறகு சிறைச்சேதம் பண்ணப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.
குறிப்பு : கிறிஸ்துவை காட்டிகொடுத்ததான யூதாஸ்காரியோத்து நான்று கொண்டு, தலைகீழாக விழுந்து, வயிறும் வெடித்து செத்தான் (மத் 27:5; அப் 1:8)

பிரதான தேவதூதர்கள்

தேவதூதர்களை பற்றி வேதத்திலே மொத்தம் 273 குறிப்புகளை காணலாம். இவற்றில் பழைய ஏற்பாட்டில் 108 முறையும், புதிய ஏற்பாட்டில் 165 முறையும் வருகிறது. இதில் பஞ்சாகமத்தில் 32 முறையும், வெளிப்படுத்தின விசேஷத்தில் 65 முறையும் வருகிறது.
2. தேவதூதரை குறிக்க எபிரேய மொழியில் “மலாக்” என்ற வார்த்தையும் கிரேக்க மொழியில் “அங்கெலொஸ்” என்ற வார்த்தையும் அதிகமாக பயன்படுத்தியுள்ளனர்.
3. தேவதூதர்கள் தானாக உறுவானது கிடையாது. இவர்கள் நம்முடைய பூமியை தேவன் சீரமைக்கும் காலத்திற்கு முன்னதாகவே தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் – யோபு 38:4-6; சங் 148:5; கொலோ 1:16.
4. தேவதூதர்கள் எண்ணிக்கைக்கு அடங்காதவண்ணம் கோடிக்கணக்காக படைக்கப்பட்டுள்ளனர் – லூக் 2:13,14; சங் 68:17; வெளி 5:11; 2 இரா 6:17
5. தேவதூதர்களுக்கு நம்மை போல மாமிச சரீரம் கிடையாது. இவர்கள் விசேஷமாக சிருஷ்டிக்கப்பட்டவர்கள் – சங் 104:4; எபி 1:7,14
6. தேவதூதர்களை நம்முடைய மாமிச கண்களால் சாதாரணமாக பார்க்கமுடியாது. தேவன் வெளிப்படுத்த சித்தமானால் இவர்களை நாம் பார்க்கவும் இவர்களுடன் பேசவும் முடியும்
7. வேதத்திலே ஆதியாகமம் 3-ம் அதிகாரம் 24-ம் வசனத்தில் முதன் முதலாக தேவதூதர்களை பற்றிய குறுப்பு வருகிறது.
8. கேருபீன்கள், சேராபீன்கள், நான்கு ஜீவன்கள், பிரதான தூதர்கள், பணிவிடை ஆவிகள், ஆளக்கூடிய அதிகாரம் பெற்ற தூதர்கள், விழுந்து போன தூதர்கள் என்று பலவகை தேவதூதர்களை குறித்து வேதம் விளக்குகிறது – ஆதி 3:24; ஏசா 6:1-7; எசா 14:14; தானி 8:10; வெளி 5:8; கொலோ 1:16; ஏசா 14:12-15
9. ஒவ்வொரு வகை தேவதூதர்களும் வெவ்வேறு வகையான சரீர அமைப்பை கொண்டு வித்தியாச வித்தியாசமாக சிருஷ்டிக்கப்பட்டுள்ளனர் – ஆதி 3:24; ஏசா 6:1-7; எசா 14:14; தானி 8:10; வெளி 5:8; கொலோ 1:16
10. தேவதூதர்களுக்கு நம்மை போல அறிவாற்றலும், உணர்ச்சியும், முடிவெடுக்க கூடிய ஆற்றலும் உண்டு – மத் 28:5, யோபு 38:7; லூக் 2:13; ஏசா 14:12-15
11. பலத்த சவுரியவான்கள், பணிவிடைகாரர், ஊழியக்காரர், சேனை, இரதங்கள், காவலாளன், தேவபுத்திரர், பலவான்களின் புத்திரர், பரிசுத்தவான்கள், நட்சத்திரங்கள் என்று அநேக பெயர்களால் தேவதூதர்கள் அழைக்கபடுகிறார்கள் – சங் 103:20,21; சங் 104:4; ஆதி 32:1,2; சங் 68:17; தானி 4:13; யோபு 1:6; சங் 29:1, 89:6; தானி 8:13; யோபு 38:7
12. காபிரியேல் தூதனும் மீகாவேல் தூதனும் பிரதான தூதர்கள் ஆவர். இவர்களைபோலவே சாத்தானும் லூசிப்பர் என்ற பெயரில் பிரதான தூதனாக இருந்துவந்தான். இவன் தேவனுக்கு விரோதமாக கர்வம் கொண்டு எழும்பினபோது தேவன் இவனை பூமியின் மீது விழும்படி தள்ளிவிட்டார். இவனோடு இவனுடைய கூட்டமும் விழுந்தது. ஆகையால் தான் இவர்கள் தள்ளப்பட்ட தூதர்கள் என்றும் விழுந்துப்போன தூதர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்(ஏசா 14:12-15).
13. லூசிப்பர் என்ற பெயர் நம்முடைய தமிழ் வேதத்தில் இல்லாதது ஆச்சரியமாக இருக்கிறது. எபிரேய வேதத்தில் இவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர் “ஹெலேல்”. ஆங்கல வேதமாகிய கேஜேவி மொழிபெயர்ப்பில் இவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர்தான் “லூசிப்பர்”. நீங்களே ஏசாயா 14:12ம் வசனத்தை கேஜேவி பைபிளில் படித்துப்பாருங்கள்.
14. விழுந்து போன தேவதூதர்களை, பேய்கள், பிசாசின் தூதர்கள், அசுத்த ஆவிகள், வஞ்சிக்கிற ஆவிகள், பொல்லாத ஆவிகள், பிசாசு, ஆதிமேன்மையை காத்துக் கொள்ளாத தூதர்கள், தேவர்கள் என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள் – உபா 2:17, மத் 25:41, வெளி 12:9, மத் 10:1, 1 தீமோ 4:1, லூக் 11:26, மத் 4:24, 2 பேது 2:4, ஏசா 37:19
15. விழுந்து போன தேவதூதர்களில் ஒரு பங்கு சங்கிலியால் கட்டப்பட்டுள்ளன, மற்றவர்கள் அப்படியே விடப்பட்டுள்ளன – 2 பேது 2:4, சங் 78:49, எபே 6:12, வெளி 12:7-9


பிரதான தேவதூதர்கள்

. தேவதூதர்களை பற்றி வேதத்திலே மொத்தம் 273 குறிப்புகளை காணலாம். இவற்றில் பழைய ஏற்பாட்டில் 108 முறையும், புதிய ஏற்பாட்டில் 165 முறையும் வருகிறது. இதில் பஞ்சாகமத்தில் 32 முறையும், வெளிப்படுத்தின விசேஷத்தில் 65 முறையும் வருகிறது.
2. தேவதூதரை குறிக்க எபிரேய மொழியில் “மலாக்” என்ற வார்த்தையும் கிரேக்க மொழியில் “அங்கெலொஸ்” என்ற வார்த்தையும் அதிகமாக பயன்படுத்தியுள்ளனர்.
3. தேவதூதர்கள் தானாக உறுவானது கிடையாது. இவர்கள் நம்முடைய பூமியை தேவன் சீரமைக்கும் காலத்திற்கு முன்னதாகவே தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் – யோபு 38:4-6; சங் 148:5; கொலோ 1:16.
4. தேவதூதர்கள் எண்ணிக்கைக்கு அடங்காதவண்ணம் கோடிக்கணக்காக படைக்கப்பட்டுள்ளனர் – லூக் 2:13,14; சங் 68:17; வெளி 5:11; 2 இரா 6:17
5. தேவதூதர்களுக்கு நம்மை போல மாமிச சரீரம் கிடையாது. இவர்கள் விசேஷமாக சிருஷ்டிக்கப்பட்டவர்கள் – சங் 104:4; எபி 1:7,14
6. தேவதூதர்களை நம்முடைய மாமிச கண்களால் சாதாரணமாக பார்க்கமுடியாது. தேவன் வெளிப்படுத்த சித்தமானால் இவர்களை நாம் பார்க்கவும் இவர்களுடன் பேசவும் முடியும்
7. வேதத்திலே ஆதியாகமம் 3-ம் அதிகாரம் 24-ம் வசனத்தில் முதன் முதலாக தேவதூதர்களை பற்றிய குறுப்பு வருகிறது.
8. கேருபீன்கள், சேராபீன்கள், நான்கு ஜீவன்கள், பிரதான தூதர்கள், பணிவிடை ஆவிகள், ஆளக்கூடிய அதிகாரம் பெற்ற தூதர்கள், விழுந்து போன தூதர்கள் என்று பலவகை தேவதூதர்களை குறித்து வேதம் விளக்குகிறது – ஆதி 3:24; ஏசா 6:1-7; எசா 14:14; தானி 8:10; வெளி 5:8; கொலோ 1:16; ஏசா 14:12-15
9. ஒவ்வொரு வகை தேவதூதர்களும் வெவ்வேறு வகையான சரீர அமைப்பை கொண்டு வித்தியாச வித்தியாசமாக சிருஷ்டிக்கப்பட்டுள்ளனர் – ஆதி 3:24; ஏசா 6:1-7; எசா 14:14; தானி 8:10; வெளி 5:8; கொலோ 1:16
10. தேவதூதர்களுக்கு நம்மை போல அறிவாற்றலும், உணர்ச்சியும், முடிவெடுக்க கூடிய ஆற்றலும் உண்டு – மத் 28:5, யோபு 38:7; லூக் 2:13; ஏசா 14:12-15
11. பலத்த சவுரியவான்கள், பணிவிடைகாரர், ஊழியக்காரர், சேனை, இரதங்கள், காவலாளன், தேவபுத்திரர், பலவான்களின் புத்திரர், பரிசுத்தவான்கள், நட்சத்திரங்கள் என்று அநேக பெயர்களால் தேவதூதர்கள் அழைக்கபடுகிறார்கள் – சங் 103:20,21; சங் 104:4; ஆதி 32:1,2; சங் 68:17; தானி 4:13; யோபு 1:6; சங் 29:1, 89:6; தானி 8:13; யோபு 38:7
12. காபிரியேல் தூதனும் மீகாவேல் தூதனும் பிரதான தூதர்கள் ஆவர். இவர்களைபோலவே சாத்தானும் லூசிப்பர் என்ற பெயரில் பிரதான தூதனாக இருந்துவந்தான். இவன் தேவனுக்கு விரோதமாக கர்வம் கொண்டு எழும்பினபோது தேவன் இவனை பூமியின் மீது விழும்படி தள்ளிவிட்டார். இவனோடு இவனுடைய கூட்டமும் விழுந்தது. ஆகையால் தான் இவர்கள் தள்ளப்பட்ட தூதர்கள் என்றும் விழுந்துப்போன தூதர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்(ஏசா 14:12-15).
13. லூசிப்பர் என்ற பெயர் நம்முடைய தமிழ் வேதத்தில் இல்லாதது ஆச்சரியமாக இருக்கிறது. எபிரேய வேதத்தில் இவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர் “ஹெலேல்”. ஆங்கல வேதமாகிய கேஜேவி மொழிபெயர்ப்பில் இவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர்தான் “லூசிப்பர்”. நீங்களே ஏசாயா 14:12ம் வசனத்தை கேஜேவி பைபிளில் படித்துப்பாருங்கள்.
14. விழுந்து போன தேவதூதர்களை, பேய்கள், பிசாசின் தூதர்கள், அசுத்த ஆவிகள், வஞ்சிக்கிற ஆவிகள், பொல்லாத ஆவிகள், பிசாசு, ஆதிமேன்மையை காத்துக் கொள்ளாத தூதர்கள், தேவர்கள் என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள் – உபா 2:17, மத் 25:41, வெளி 12:9, மத் 10:1, 1 தீமோ 4:1, லூக் 11:26, மத் 4:24, 2 பேது 2:4, ஏசா 37:19
15. விழுந்து போன தேவதூதர்களில் ஒரு பங்கு சங்கிலியால் கட்டப்பட்டுள்ளன, மற்றவர்கள் அப்படியே விடப்பட்டுள்ளன – 2 பேது 2:4, சங் 78:49, எபே 6:12, வெளி 12:7-9பிரதான தேவதூதர்கள்

திங்கள், 18 ஜனவரி, 2016

வேதத்தில் முதல் முதலில்

வேதத்தில் முதல் முதலில் வேதத்தில் முதல் முதலில்

தேவன் முதலாவது நாள் சிருஷ்டித்தது “வெளிச்சம்”. – ஆதி 1:3.

முதலாவது சிருஷ்டிக்கப்பட்ட மனிதன் “ஆதாம்”.  - ஆதி 2:19

முதலாவது சிருஷ்டிக்கப்பட்ட மனுஷி “ஏவாள்”. – ஆதி 3:20.

முதலாவது கப்பல் கட்டியவன் “நோவா”. – ஆதி 6:14-22.

முதலாவது பிறந்த மனிதன் “காயீன்”. – ஆதி 4:1.

முதலாவது கொலைக்காரன் “காயீன்”. – ஆதி 4:8.

முதலாவது கர்த்தருக்கு காணிக்கை கொண்டு வந்தவன் “காயீன்”. – ஆதி 4:3.

முதலாவதும் கடைசியுமான ஜலபிரளயம் நோவா காலத்தில் வந்தது. – ஆதி 7:11,12.

முதலாவது தேவனுடைய உடன்படிக்கையின் அடையாளம் “வானவில்” – ஆதி 9:12-17.

முதலாவது திராட்சத்தோட்டத்தை உண்காக்கின மனிதன் “நோவா”. – ஆதி 9:20

முதலாவது எழுதப்பட்டுள்ள பறவை “காகம்”. – ஆதி 8:7.

முதலாவது எழுதப்பட்டுள்ள மிருகம் “பசுமாடு”(கிடாரி). – ஆதி 15:9.

முதலாவது இரட்டை பிள்ளைகள் பெற்றவள் “ரெபேக்காள்”. – ஆதி 25:21-27.

முதலாவது தசமபாகம் கொடுத்தவன் “ஆபிரகாம்”. – ஆதி 14:18-20, எபி 7:1-4.

தேவனால் முதலாவது பெயர் மாற்றப்பட்டவன் “ஆபிராம்”(ஆபிரகாம்) – ஆதி 17:5.

முதலாவது தீர்க்கதரிசி “ஏனோக்” ஆகும். – யூதா 14,15.

முதலாவது இஸ்ரவேலின் இராஜா “சவுல்”. – 1 சாமு 10:1.

முதலாவது “அல்லேலூயா” என்ற வார்த்தை சங் 104:35-ல் வருகிறது.

இந்தியாவிற்கு முதலாவது சுவிசேஷம் கொண்டு வந்தவர்கள் இயேசுவின் சீடர்களான தோமாவும், பர்தெலெமேயுவுமே.

முதலாவது இயேசு செய்த அற்புதம் கானா ஊர் கலியாண வீட்டில் நடந்தது – யோவா 2:1-11.

இயேசு சிலுவையில் பேசின முதலாவது வார்த்தை “பிதாவே இவர்களுக்கு மன்னியும்” என்பதே – லூக் 23:24.

உயிர்த்தெழுந்த இயேசுவை முதலாவது பார்த்தது “மகதலேனா மரியாளே”. – மாற் 16:9,10.

நான்கு சுவிசேஷங்களிலும் முதலாவது எழுதப்பப்பட்டது மாற்கு எழுதின சுவிசேஷமாகும்.

தேவன் மனுஷனிடம் கேட்ட முதலாவது கேள்வி “நீ எங்கே இருக்கிறாய்?” ஆதி 3:9.

இஸ்ரவேலரின் முதல் மாதத்தின் பெயர் “ஆபிப்” (நிசான்). யாத் 12:12, 13:4, உபா 16:1, எஸ்தர் 3:7.

வேதாகம துணுக்குகள்

வேதாகமம்

நம்முடைய வேதம் தான் உலகிலேயே அதிகமான மொழிகளிலே மொழிப்பெயர்க்கப்பட்ட புத்தகமாகும்.

நம்முடைய வேதம் தான் உலகிலேயே அதிகமாக விற்பனையாகும் புத்தகமாகும்.
அதிகாரங்களாகவும் வசனங்களாகாவும் பிரிக்கப்பட்ட வேதம் கி.பி.1560-ம் ஆண்டு முதல் முறையாக “ஜெனிவா பைபிள்” என்ற பெயரில் வெளியிடப்பட்டது.

வேதம் கி.பி.1228-ம் ஆண்டு ஸ்டிபன் லாங்டன் என்பவரால் அதிகாரங்களாக பிரிக்கப்பட்டது.
வொன்றி பாவர் என்பவர் தலைமையில் மூழுவேதாகமும் திருத்தப்பட்டு சரியான முறையில் அச்சடிக்கப்பட்டு கி.பி.1871-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது இன்று வரை அநேக தமிழ் கிறிஸ்தவர்களின் கரங்களில் தவனுவதும் இந்த மொழிப்பெயர்ப்பே.

தமிழ் கிறிஸ்தவர்கள் அதிகமாக உபயோகப்படுத்தும் மொழிப்பெயர்ப்பு (BSI OV Version) “பாவர் மொழிப்பெயர்ப்பு” அல்லது “ஐக்கிய மொழிப்பெயர்ப்பு”ஆகும்.
இந்திய மொழிகளிலேயே முதல் முதலாக நம்முடைய தமிழ் மொழியில் தான் பரிசுத்த வேதாகமம் அச்சடிக்கப்பட்டது.
நம்முடைய வேதம் ஏறக்குறைய 40 பரிசுத்தவான்களால் பரிசுத்த ஆவியானவர் மூலமாய் வெளிப்படுத்தப்பட்டு, நடத்தப்பட்டு எழுதப்பட்டது (2 தீமோ 3:16).
 
வேதம் கி.பி.1228-ம் ஆண்டு ஸ்டிபன் லாங்டன் என்பவரால் அதிகாரங்களாக பிரிக்கப்பட்டது.

கி.பி.1448-ம் வருடம் ஆர்.நாதன் என்பவரால் பழைய ஏற்பாடு முழுவதும்
வசனங்களாக பிரிக்கப்பட்டது.
  
நம்முடைய வேதம் கி.மு.1500 முதல் கி.பி.100 வரை உள்ள ஏறல்லுறைய 1600
வருதங்களில் பரிசுத்த ஆவியானவராள் ஏவப்பட்டு எழுதப்பட்டதாகும்.

நம்முடைய வேதம் ஏறக்குறைய 40 பரிசுத்த வான்களால் பரிசுத்த ஆவியானவர் மூலமாய் வெளிப்பதெதப்பட்டு, நடத்தப்பட்டு எழுதப்பட்டது (2 தீமோ 3:16).

“பைபிள்” என்கிற வார்த்தை “பிபிலியா” என்னும் கிரேக்க வார்த்தையிலிருந்து வந்ததாகும் இதன் பொருள் “புத்தகங்கள்”ஆகும்.

முழு வேதாகமத்திலும் மத்தியில் உள்ள அதிகாரம் - சங் 117 ஆகும்.

வேதத்திலே 1000-வது அதிகாரமாக வருவது யோவான் எழுதின சுவிசேஷம் 3-ம் அதிகாரமாகும்.

வேதத்திலே மொத்தம் 7 தற்கொலைகள் குறிக்கப்பட்டுள்ளன.

நம்முடைய வேதாகமத்திலே மொத்தம் 1189 அதிகாரங்கள் உள்ளன.


இந்திய மொழிகளிலேயே முதல் முதலாக நம்முடைய தமிழ் மொழியில் தான் பரிசுத்த வேதாகமம் அச்சடிக்கப்பட்டது.


தமிழ் மொழியில் பழைய ஏற்பாடு அச்சடிக்கப்பட்டு வெளியிட்டம் வருடம் கி.பி 1728-ஆகும்.

வேதத்தில் எலியாவின் பெயர்


எலியா
பெயரில் நான்கு பேர்கள்
1. எலியா
    தீர்க்கதரிசி
(1 இராஜ 17:1,
லூக் 9:30)
2. எரொகாமின் மகன் எலியா
(1 நாளா 8:27)
3. ஆரீமின் மகன் எலியா
(எஸ்றா 10:21)
4. ஏலாமின் மகன் எலியா

(எஸ்றா 10:26).வேதத்தில் எலியாவின் பெயர்

யோவேல் 2: 30: 31 இரகசியம்

யோவேல் 2: 30: 31 இரகசியம்

image
👆🏿
இரண்டு சூரியன் கண்டதான தகவலுக்கு பதில்👇👇
Forwarded
                                                                   வளிமண்டலத்தில் ஏற்படும் சில மாற்றங்களால்  சூரியன் அல்லது சந்திரனின் பிம்பத்தின் காரணத்தால் பார்ப்பவர்கள் கண்களுக்கு இரண்டு சூரியன் அல்லது இரண்டு சந்திரன் போல தெரியும்  
என அறிவியலாளர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர். மேலும் இந்த இரட்டை சூரியன் 2011 ம் ஆண்டு சீனாவில் பார்க்கப்பட்டதாகவும்…பின்பு அமெரிக்கா.கனடா போன்ற நாடுகளில் தெரிந்ததாகவும் இணையத்தில் செய்திகள் இருக்கின்றன.   இதை மறுமை நாளின் அடையாளமாக எண்ணி குழப்பம் அடைய வேண்டியதில்லை!
இது நேற்று இன்று நடப்பதல்ல. சூரியன் உதிக்க துவங்கிய காலத்தில் இருந்து நடக்கிறது
இதற்கு பெயர் “சண் டாக்” sun dog. காற்றில் இருக்கும் பனித்திவலைகளால் ஏற்படும் ஒளி பிரதி பலிப்பால் இரண்டு சூரியனோ அதற்கு மேற்ப்பட்ட சூரியன்களோ தெரிவது போன்ற தோற்றம் ஏற்படும்
Google ல் Sun dog ணு அடிச்சு பாருங்க.
Sundogs are bright areas on either side of the sun usually superimposed onto an ice halo. Sundogs are also known as mock suns but they are more properly called parhelia. Sundogs are formed when sunlight is refracted by 22 degrees through the flat plates of hexagonal ice crystals.
இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு முன் வானத்திலே அடையாளங்கள் தோன்றும். அவை விஞ்ஞானிகள் ஆராய்ந்து கண்டுபிடிக்க முடியாதவைகளாகவே இருக்கும்.
வேதாகமத்திலே சொல்லி இருப்பதுபோல் சந்திரன் இரத்த நிறமாக மாறும். சூரியன் இருளாகும். வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்கள் நடக்கும் இதை தவிர்த்து நடப்பவை  இயற்கையானவிசயங்கள்
image
சந்திரன் இரத்தமாக மாறின நிகழ்ச்சி நடந்து முடிந்து விட்டது. சென்ற செப்டம்பர் 28 ந் தேதி 2015 நடந்தது. இனி 100 ஆண்டுகளுக்கு பின்புதான் நடக்கும். இது ஐந்தாவது கடைசி இரத்த சந்திரன். முந்தைய 4 இரத்த சந்திரனும் யூத பண்டிகை நாட்களில் நடந்தது. இதுவும் அப்படியே நடந்தது. வித்தியாசம் என்னன்னா கடைசி நாட்களில் நடந்தது. அடுத்து நடக்கப்போவது சூரியன் இருளாக மாறுவது. இது எப்போது என்பதை கர்த்தர் வெளிப்படுத்தவிலை.
யோவேல் 2
30  வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன்.
31  கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.

ஞாயிறு, 17 ஜனவரி, 2016

வேதாகம கேள்விகள்

வேதாகம கேள்விகள் :tamilvetham1.blogspot.in

  1. image
    1. கீழே உள்ள வசனம் எந்த புத்தகத்தில் உள்ளது?
  2. “நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்.”
2. எஸ்தர் ராஜாத்தியை யார்
    வளர்த்தார்?
A. ஆமான்
B. மொர்கதெகாய்
C. யாவிரு
3. வெளி. விசேஷம் புத்தகத்தில் எத்தனை சபைகளுக்கு கர்த்தர் எழுதி அனுப்ப சொன்னான்?
 6, 7, 8, 9
பதில்கள் :
1. ஏசாயா
2. மொர்கதெகாய்
3. 7
…………………………………………………

  1. பூர்த்தி செய்க:
ஆதியாகமம் 1
தேவன் பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாய விரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள்
__________________1
__________________2
___________________3 குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.
2. நோவாவிற்க்கு எத்தனை மகன்கள்?
4 / 3 / 5 / 8
3. யாக்கோபுக்கு பிறந்த 12 கோத்திர சகோதரர்களுக்கும் ஒரு சகோதரி உண்டு. அள் பெயர் என்ன?
அன்னாள்/ தீனாள் / மிரியம்  / பத்தசேபாள்
4. அப்போஸ்தலன்.யோவானின் சகோதரன் பெயர் என்ன?
பிலிப் / யூதாஸ் / யாக்கோபு / மத்தேயு
➰➰➰➰➰➰➰➰➰➰
1. இயேசு கிறிஸ்து இரண்டாம் வருகையில் எங்கு வந்து நிற்பார்?
A. ரோம்
B. ஒலிவ மலை – எருசலோம்
C. மோரியா மலை
2. கர்த்தர் நியமித்த முதல் யூதா கோத்திர ராஜா யார்?
A. சவுல்
B. மனாசே
C. தாவீது
3. சங்கீதம் 119 ல் எத்தனை
வசனங்கள் உள்ளன?
177 / 178 / 176 / 175
4. தேவாலயத்தை இடித்துப் போடுங்கள்,  மூன்று நாளைக்குள்ளே கட்டுவேன் என்று இயேசு கிறிஸ்து சொன்னார்,
இது எதை குறிக்கிறது?
5. தாவீதின் மாமனார் பெயர் என்ன? ★ அவர் ராஜா
➰➰➰➰➰➰➰➰➰➰
1.ஒலிவாமலை
2.தவீது்
3:176
4:இயேசு தன் சரீரத்தை  குறித்து
5:சவுல்
+++++++++++++++-++++++++++++
1. ஒன்பதாம்மணி
(மதியம் 3 மணி ) நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்;
இதற்க்கு என்ன அர்த்தம்?
2.  பூர்த்தி செய்க : –
கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் _______________ என்னும் இடத்துக்கு அவரைக் கொண்டுபோய்……
3. ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி
( மதியம் 12 –  3 மணி வரை)  நேரம்வரைக்கும் பூமியெங்கும் ____________ உண்டாயிற்று.
4. இயேசுவின் சரீரத்தை துணிந்து பிலாத்துவிடம் கேட்டு அடக்கம் பண்ணின ஆலோசனைக்காரன் யார்?
…………………………………………………………
வேதாகம தாகம் கேள்விகள் :
1. வெளிப்படுத்தின விசேஷம் புத்தகம் யாருக்கு சொல்லச் சொல்லி எழுதப்பட்டது?
A. 12 அப்போஸ்தலர்களுக்கு
B. ரோமின் போப்புவிற்க்கு
C. ஆசியாவின் 7 சபைகளுக்கு
D. எருசலோம் மக்களுக்கு.
2. எத்தனை முத்திரைகளை உடைய சுருளை பிதா மேசியாவிடம் கொடுத்தார்?
5/6/7/8/9
3. இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வரும் முன்பு எத்தனை உண்மையான கடைசி கால தீர்க்கதரிசிகள் இந்த பூமியில் இருந்து அதிசய அற்புதங்களை செய்வார்கள்?
4/ 5/ 7/2
4. (தொடர்ச்சி….) அவர்கள் யார் என்று வெ. வி. புத்தகத்தில் குறிக்கப்பட்டு உள்ளது?
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
1:ஆசியாவில் உள்ள. ஏழு சபைகளுக்கு
2:7
3:2
4:தேவனுக்கு முன்பாக நிற்க்கும்  இரண்டு சாட்சிகள்.
…………………………………………………………
1. கொல்கொதா என்றால் என்ன ?
2. மாரநாதா என்றால் என்ன அர்த்தம்?
3. ஆமென் என்றால் என்ன அர்த்தம்?
4. சேலா என்றால் என்ன அர்த்தம்?
5. யேசுவா யார்? என்ன அர்த்தம்?
6. பெந்தெகொஸ்தே என்றால் என்ன அர்த்தம்? வேதாகம
பதில்கள் :
1. கொல்கொதா என்றால் கபாலஸ்தலம்
(அ) மண்டை ஓடுகளின் ஸ்தலம்
2. மாரநாதா அர்த்தம் :
#எங்கள் கர்த்தாவே வாரும்
# கர்த்தராகிய இயேசுவே வாரும்.
(அராமிய மொழியில் Mara ntha
சிலர் Maran tha என்பர் – Our Lord, come)
3. ஆமென் –  அப்படியே ஆகுக (ஆகட்டும்)
4. சேலா என்பதன்  அர்த்தம் எபிரேய மொழியில் இரு வேறு அர்த்தமாக எண்ணப்படுகிறது. அதை 7 வகையாகவும் தமிழில் பிரிக்கலாம்.
“சேலா” என்பதற்கு 7 வித கருத்து விளக்கங்கள் உண்டு. அவை…
1. இரண்டு கருத்துக்களையும் இணைத்தல் – சேலா.
2. பாடிக் கொண்டே இருக்கும்போது இடையில் நிறுத்துவது – சேலா.
3. எப்போதும் அதுதான் உண்மை என்று ஸ்தாபிப்பதற்கு என்று உபயோகப்படுத்துவது – சேலா.
4. திரும்பத் திரும்ப அதையே சொல்லுதல் – சேலா.
5. மெதுவாக பாடுகிறவன் சத்தத்தை உயர்த்திப் பாடுகிறான் – சேலா.
6. ஸ்பிரிதம் விடுதல் அல்லது பரப்பி விடுதல் அதாவது, இராகம் விடுதல் – சேலா. (உ.ம்) “நன்றி ராஜா… நன்றி ராஜா…”
7. பாடிக் கொண்டு இருக்கும்போதே வாத்தியக் கருவியில் ஒரு இடைச் சொருகல் – சேலா.
5. யேசுவா (JESHUA) எபிரேய மொழியில் – தமிழில் இயேசு.
இயேசு என்றால் இரட்சகர் என்று உங்களுக்கு தெரியும்.
6. பெந்தெகொஸ்தே –     ஐம்பதாவது நாள்
(இயேசு உயிர்ந்தெழுந்து 40 நாட்கள் சீசர்களுக்கு வெளிப்பட்டார். 50 வது நாளில் தேவ ஆவியை ஊற்றினார்.)
…………………………………………………………
1. “இயேசு கண்ணீர் விட்டார்.”
– யோவான் புத்தகம்
எதற்க்காக இயேசு அழுதார்?
2. பூர்த்தி செய்க :
வெளிப்படுத்தின விசேஷம்
புத்தகம் :
“சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைதம்முடைய _______________ காண்பிக்கும்பொருட்டு, தேவன் ________________ ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய _________ வெளிப்படுத்தினதுமான விசேஷம்.
3. எத்தனை ஆண்டுகள் அந்திகிறிஸ்துவின் ஆட்சி இருக்கும்?
6/7/8/9/10
பதில்கள் :
1. லாசரு மரித்ததினால்,
2. ஊழியக்காரருக்கு, இயேசுகிறிஸ்துவுக்கு,
யோவானுக்கு,
3. 7
……………………………………………………………
வேதாகம கேள்விகள் :
1. இயேசு சிலுவையில் இருந்தபோது எத்தனை  அப்போஸ்தலர் இருந்தார்கள்?
2. இயேசு கிறிஸ்து வானத்திற்க்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது எத்தனை பேர் தரிசித்தார்கள்?
3. பெந்தகொஸ்தே நாளில் எருசலோம் மேல் வீட்டு அறையில் எத்தனை பேர் கூடி இருந்தார்கள்?
4. பிறகு பேதுரு பிரசங்கத்தில் எத்தனை பேர் சேர்த்துக் பெற்றார்கள்?
❓❓❓❓❓❓❓❓❓❓
பதில்கள் :
1. யோவான்
2. 500 (1 கொரி 15:6)
3. 120
4. ஏறக்குறைய 3000 பேர்.
……………………………………………………………
வேதாகம கேள்விகள் :
# 1. “என் ஜனத்தாரில் என் வயதுள்ள அநேகரைப் பார்க்கிலும் யூதமார்க்கத்திலே தேறினவனாய், என் பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக மிகவும் பக்திவைராக்கியமுள்ளவனாயிருந்தேன்.”
இது யாரை குறிக்கிறது?
# 2. உபாகமம் புத்தகத்தில் எந்த அதிகாரத்தில் கர்த்தரின் கட்டளைகளை கடைபிடித்தால் ஆசீர்வாதங்களையும் கடைபிடிக்காவிட்டால் இருமடங்கு சாபங்களும் எழுதப்பட்டிருக்கு?
# 3.
“நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.”
இந்த வசனம் எந்த புத்தகம்?  எந்த அதிகாரம்?
❓❓❓❓❓❓❓❓❓❓:
1. பவுல்
2.உபாகமம் 28
3. ஏசாயா 53: 5
…………………………………………………………
: வேதாகம கேள்விகள் :
1.  முதலாவது தசம பாகம் கொடுத்தவர் யார்?
2. பாகாலுக்கு தலைவணங்காத எத்தனை தீர்க்கதரிசிகள் இன்னும் இருக்கிறார்கள் என்று தேவன் எலியாவுக்குச் சொன்னார்?
A. 70
B. 700
C.70000
D. 7000
3. மரியாள் இயேசுவின் பாதத்தை நனைத்த தைலத்தை எவ்வளவுக்கும் அதிகமான கிரயத்துக்கு விற்று, தரித்தருக்குக் கொடுத்திருக்கலாமே என்று சொல்லி முறுமுறுத்தனர்?
A. 500 பணம்
B. 300 வெள்ளிக்காசு
C. 30 வெள்ளிக்காசு
D. 300 பணம்
❓❓❓❓❓❓❓❓❓❓
: பதில்கள் :
1. ஆபிரகாம்
2. (கேள்வியில் ஒரு தவறு உள்ளது. பாகாலை வணங்கும் தீர்க்கதரிசிகள்தான் சரி.) அது 850 பேர்.
(தவறுக்கு வருந்துகிறேன்)
3. 300 பணம
👤👥👤👥👤👥👤👥👤👥
வேதாகம கேள்விகள் :
1. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பு யூதர்கள் எத்தனை பேர் மடிந்துப் போயிருப்பார்கள்?
A. 1/4
B. 1/3
C. 2/3
D. 2/4
2. நூற்றுக்கு அதிபதி என்றால் என்ன பொருள்?
3. அநாதி என்றால் என்ன பொருள்?
👥👤👥👤👥👤👥👤👥👤
: வேதாகம பதில்கள் :
1. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பு யூதர்கள் எத்தனை பேர் மடிந்துப் போயிருப்பார்கள்?
2/3
2. நூற்றுக்கு அதிபதி என்றால் என்ன பொருள்?
100 ரோம வீரர்களுக்கு அதிபதி
3. அநாதி என்றால் என்ன பொருள்?
*எக்காலத்திற்க்கும் நீடித்து வரும் (நட்பு)
Everlasting √
* என்றும் நிலைபேறு உடைய
…………………………………………………………
: வேதாகம கேள்விகள் :
1. இஸ்ரவேலின் 12 கோத்திரத்தாரில் 10 கோத்திரத்தார் காணாமல் போயினர். மீதி உள்ள கோத்திரத்தார்கள் யார்?
யூதா & லேவி /
யூதா & பென்யமீன் /
யூதா & ரூபன்
2. யூதர்களின் பண்டிகைகள் எவ்வளவு?
12 / 14 / 7 / 21
3. யோவான்ஸ்நானன்
இயேசு கிறிஸ்துவுக்ககு என்ன உறவு?
ஒன்றுவிட்ட சகோதரர்/ மாமா மகன்
4. இயேசு கிறிஸ்துவின் ஊழிய காலங்கள் சரித்திர ஆய்வாளர்களால் எத்தனை வருஷங்கள் என குறிக்கப்பட்டுள்ளது?
3 / 4 / 3½ / 3¾
❓❓❓❓❓❓❓❓❓❓
வேதாகம கேள்விகள் :
1. இயேசு “நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று யாரிடத்தில் சொன்னார்?
மகதேனா / மார்த்தாள் / லாசரு
2. சத்தியமா அது என்ன என்று இயேசுவிடம் கேட்டது யார்?
நூற்றுக்கு அதிபதி / நிக்கோதேமு / பிலாத்து
3. சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு (உயிர்ந்தெழுந்த பின்) வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
அது எந்த நாள்?  எந்த நேரம்?
வாரத்தின் முதல் நாள் –  சாயங்காலம் / வாரத்தின் இரண்டாம் நாள் – காலை / வாரத்தின் கடைசி நாள் – மதிய வேளை
❓❓❓❓❓❓❓❓❓❓
: வேதாகம பதில்கள் :
1. இயேசு “நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று யாரிடத்தில் சொன்னார்?
மார்த்தாள்
2. சத்தியமா அது என்ன என்று இயேசுவிடம் கேட்டது யார்?
பிலாத்து
3. சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு (உயிர்ந்தெழுந்த பின்) வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
அது எந்த நாள்?  எந்த நேரம்?
வாரத்தின் முதல் நாள் –  சாயங்காலம
: பதில்கள் :
1.நாசரேத் தேவாலயத்தில்
1A. ஏசாயா 61
1C. இல்லை.
❓❓❓❓❓❓❓❓❓❓
வேதாகம கேள்விகள் :
1. “பிதாவை எங்களுக்கு காண்பியும்” என்று சொன்னவர் யார்?
2. என்னை ஏன் அடிக்கிறாய் என்று யார் கேட்டது ?
3. பேதுருவிடம் இயேசு ” நீ என்னை நேசிக்கிறாயா”
என்று எத்தனை முறை கேட்டார்?
❓❓❓❓❓❓❓❓❓❓
❓❓❓❓❓❓❓❓❓❓
வேதாகம கேள்விகள் :
1. பூர்த்தி செய்க:
லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து
__________  ___________
வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது.
2.  பரிசேயர் சதுசேயர்களுக்கிடையே வேறுபட்ட ஒரு நம்பிக்கை என்ன?
3. பூர்த்தி செய்க :
திரிகை திரிக்கிற இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள்
_______________ .
❓❓❓❓❓❓❓❓❓❓
1:வானத்திலிருந்து  அக்கினியும் கந்தகமும்
2:மரித்தோரின் உயிர்தேழுதல்
3:கைவிடப்படுவாள: =====================
வேதாகம விடுகதைகள் :
1. யானைக்கு அடி சறுக்கும்.
இவனுக்கோ முடி சறுக்கும்  -அவன் யார்?
=====================
2. மூடன் என்று சொன்னான்
முக்கியமானதைக் கேட்டான்
படியைப் போட்டு மடியை நிரப்பி
காத்துக்கொள்ள வேண்டிக் கொண்டான்
-அவன் யார்?
=====================
3. சாத்தானின் வீட்டினிலே
சாத்தானுக்கு டாட்டா காட்டி
சாட்சியாய் வாழ்ந்து வந்த
உண்மையுள்ள உத்தமன் –
அவன் யார்?
=====================: குறிப்பு :
1. நியாதிபதி புத்தகம்
2. நீ. மொ. புத்தகம் 30 வது அதிகாரம்
3. வெ.வி. புத்தகம் 2 ம் அதிகாரம
1:சிம்சோன்
2:ஆகூர்
3:அந்திப்பா
…………………………………………………………
வேதாகம விடுகதை :
1. ஆறு மாடி கட்டிடம் அதில் 5 மாடி இடிந்து விழுந்ததாம். எல்லா வீடும் இருண்ட வீடாம்.
அது என்ன?
குறிப்பு: லூக்கா 12
2. இயேசு யாருடைய புளித்தமாவை குறித்து எச்சரிக்கையாய் இருக்கச்சொன்னார்?
குறிப்பு: லூக்கா 12
3. பூர்த்தி செய்க:
தேவனுடைய __________ தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
குறிப்பு: லூக்கா 12
: வேதாகம பதில்கள் :
1. லூக்கா 12: 52 -53
( இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள்.
தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள்.)
2. பரிசேயர்
3. ராஜ்ஜியத்தை: ❓❓❓❓❓❓❓❓❓❓
வேதாகம கேள்விகள் :
1. கானானுக்கு தகப்பன் என்று யார் குறிப்பிடப்பட்டுள்ளது?
★ஆதியாகமம் புத்தகம் 8 & 9
2. வசனத்தை கேட்டவர்களில் விசுவாசித்தவர்கள் ஏறக்குறைய எத்தனை பேர்?
★அப்போஸ்தலர் புத்தகம் 4
❓❓❓❓❓❓❓❓❓❓: வேதாகம கேள்விகள் :
1. இயேசு தன்னுடைய சீஷர்களை அப்போஸ்தலர்களாக தெரிந்துக் கொள்ளுவதற்க்கு முந்தைய இரவு என்ன செய்துக் கொண்டிருந்தார்?
குறிப்பு : லூக்கா 6
2. எங்களுக்கு ஜெபம் பண்ண போதிக்க வேண்டும் என்று சீசர்களின் ஒருவன் கேட்பதற்க்கு முன்பு இயேசு என்ன செய்துக் கொண்டிருந்தார்?
குறிப்பு : லூக்கா 11
3. சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து இயேசு
எந்த உவமையைச் சொன்னார். (குறிப்பாய் சொன்னால் போதும்)
குறிப்பு : லூக்கா 17 – 18
❓❓❓❓❓❓❓❓❓❓
Ramesh: 1:இரவு முழுவதும் ஜெபித்து கொண்டு இருந்தார்
2:ஜெபம் பண்ணி முடித்திருந்தார் .
3:ஒரு விதவை்
தேவனுக்கு பயப்படாத நியாதிபதியை
்நோக்கி தனக்கும் தன் எதிராளி க்கும் உள்ள வழக்கை திர்க
அடிக்கடி அலட்டுகிறாள்.
……………………………………………………
1. பூர்த்தி செய்க :
தேவன் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே ______________ வீசிக்கொண்டிருக்கிற
________________ வைத்தார்.
குறிப்பு : ஆதியாகமம் 3
2. தேவன் யாருடைய பலியை ஏற்று “சுகந்த வாசனையை முகர்ந்தார்” என எழுதப்பட்டுள்ளது?
ஆபிரகாம் / மோசே / நோவா / ஈசாக்கு / யாக்கோபு
3. இது சரியா?
“தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கூடாது”
❓❓❓❓❓❓❓❓❓❓
வேதாகம கேள்வி பதில்கள் :
1. கேருபீன்கள்,
சுடரொளி பட்டயம்
2. நோவா
3. தவறு