வியாழன், 28 ஜனவரி, 2016

அப்போஸ்தலர் மரணம்

  1. அப்போஸ்தலர் மரணம் அப்.மத்தேயு : எத்தியோவ்பியாவில் சிறையாக்கி, அங்கே தறையோடு சேர்த்து ஆணி அடித்தனர்; அதன்பிறகு தலைவெட்டப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.
  2. அப்.சீமோன் பேதுரு : ரோம் மாநகரில் சிலுவையில் அறையப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார். இயேசுவை போல மரிக்க தனக்கு தகுதி இல்லை, அதனால் என்னை தலைகீழாக சிலுவையில் அறையுங்கள் என்று போர்சேவகாரை வேண்டிக்கொண்டார். அப்படியே அறைந்தார்கள்.
  3. அல்பேயுவின் குமாரன் அப்.யாக்கோபு : தேவாலயத்திலிருந்து கீழே தூக்கி எறியப்பட்டு, பிறகு கற்களால் எறியுண்டு இரத்தசாட்சியாய் மரித்தா.
  4. செபதேயுவின் குமாரன் அப்.யாக்கோபு : பாலஸ்தீனாவில் ஏரோது அகிரிப்பா 1 மன்னனால் ஏறக்குறைய கி.பி 44-வது ஆண்டு சிறைச்சேதம் பண்ணப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.
  5. அப்.அந்திரேயா : அக்காயா என்னப்படும் கிரேக்கப்பட்டணத்தில் ஒலிவ மரத்தினால் செய்யப்பட்டு x வடிவிலான சிலுவையில் அறையப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.
  6. அப்.பிலிப்பு : டோமிட்டியன் காலத்தில் ஹீரப்போலிஸ் என்ற பட்டணத்தில் பேதுருவை போல தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.
  7. அப்.பற்தொலொமேயு : அர்மேனியாழில் உள்ள அல்லானும் என்னும் பட்டணத்தில் சவுக்கால் அடிக்கப்பட்டு, பிறகு தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.
  8. அப்.சீமோன் : இவரை குறித்ததான சரியான ஆதாரம் இன்னும் கிடைக்கவில்லை இவரும் சிலுவையில் இரத்தசாட்சியாய் மரித்தார் என்று கருதுகின்றனர்.
  9. அப்.தோமா : இந்தியாவிலுள்ள சென்னைப்பட்டணத்தில் ஈட்டியால் குத்தப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.
  10. அப்.ததேயு : பெரிட்டஸ் என்ற இடத்தில் இரத்தசாட்சியாய் மரித்தார்.
  11. அப்.யோவான் : வயது முதிர்ந்து நல்லபடி மரித்த ஒரே அப்போஸ்தலர் இவரே ஆகும்.
  12. அப்.மத்தியா : யூதாஸ் காரியோத்துக்கு பதிலாக தெரிந்து கொள்ளப்பட்ட (அப் 1:26) இவர் கற்களால் எறியுண்டு பிறகு சிறைச்சேதம் பண்ணப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.
குறிப்பு : கிறிஸ்துவை காட்டிகொடுத்ததான யூதாஸ்காரியோத்து நான்று கொண்டு, தலைகீழாக விழுந்து, வயிறும் வெடித்து செத்தான் (மத் 27:5; அப் 1:8)

1 கருத்து: