வியாழன், 12 மார்ச், 2015

மனந் திரும்புதல்: (Repentance)

மனந் திரும்புதல்: (Repentance)


'மனந் திரும்புதல்' என்றால் ஒருவன் தன் பாவங்களுக்காக மனம் வருந்தி வெட்கப்படுவது மட்டுமல்ல, அவற்றை விட்டு மனந் திரும்புவதுமாகும். 

நமது பாவத்தை அறிக்கை செய்வது மட்டும் போதாது. நாம் பாவம் செய்வதை நிறுத்தி விடவும் வேண்டும்.

ஒருவன் உண்மையாகவே மனந் திரும்பும் போது அவனது செயல்கள், எண்ணங்கள், ஆசைகள் ஆகிய அனைத்துமே மாற்றம் பெறும்.

ஒரு மனிதன் "நான் மனந் திரும்பி விட்டேன்" என்று சொல்லியும் அவன் வாழ்க்கையில் மாற்றமில்லை எனில், அவனது மனந்திரும்புதல் உண்மையானதல்ல.

மனந்திரும்புவது, இரட்சிப்பைப் பெறுவதில் ஒரு இன்றியமையாத படியாகும். மனந்திரும்புதல் இன்றி இரட்சிக்கப்படவே முடியாது. (மத்தேயு: 5:3-4; மாற்கு: 1:4,15; அப்போஸ்தலர்: 2:37,38; 20:21; 2பேதுரு: 3:9)

1 கருத்து:

  1. ஆலயத்தில் போதகர் மற்றும் பாடல் குழுவினர் காலனி அணிந்து ஆராதனை மற்றும் செய்தி கொடுப்பது சரியா ?

    பதிலளிநீக்கு