புதன், 4 மார்ச், 2015

இருதயம்

உயிர் எங்கு இருக்கின்றது?

 பைபிள் ,உயிர் எங்கு இருக்கின்றது"உயிரினங்களின் உயிர் எங்கு இருக்கின்றது?" என்ற கேள்விக்கு 3400 ஆண்டுகளுக்கு முன்பே மோசே வாழ்ந்த காலத்தில் அவர் எழுதிய நூல்களில் விடை கூறப்பட்டுள்ளது. "மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் உள்ளது'' என்பதை மோசே ஆதியாகமம் 9:4, லேவி 17:11,14 என்ற வசனங்களில் எழுதியுள்ளார்.

ஆனால் உலகிலிருந்து அறிவியல் வல்லுநர்கள் யாவரும், "மனிதனின் உயிர் அவன் இருதயத்தில் உள்ளது'' என்று கூறி வந்தனர் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் (1962 ஆம் ஆண்டு) இருதய மாற்று அறுவை சிகிச்சையின் பயனாக (மரணமடைந்த) ஒருவரின் இருதயத்தை மற்றொருவருக்கு பொருத்தி வெற்றி கண்டனர். இவ்வாறு இருதயம் மாற்றப்பட்ட பின் உயிரோடிருப்பவர் யார்? இருதயத்தை கொடுத்தவரா அல்லது இருதயத்தை பெற்று கொண்டவரா என்ற கேள்வி எழுந்தது. எனவே அறிவியல் வல்லுநர்கள் கூடி, ""மனிதனின் உயிர் இருதயத்தில் இல்லை, மூளையில் இருக்கின்றது'' என்ற முடிவுக்கு வந்தனர். அதற்கு சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மூளையிலிருந்து உடலுக்கு வரும் முக்கியமான தொடர்புகள் அற்றுபோன பின்பும் மக்கள் நினைவாற்றல் இன்றி உயிருடன் இருப்பதைக் கண்டு பிடித்ததோடு மீண்டும் தங்கள் கொள்கையை மாற்ற வேண்டிய நிலை ஏற்ப்பட்டது உலகில் பல அறிவியல் வல்லுனர்கள் கூடி "உயிர் இரத்தத்தில் உள்ளது" என்ற கொள்கையைக் கூறியுள்ளனர். வேதம் இந்த அறிவியல் உண்மையை 3400 ஆண்டுகட்கு முன்பே கூறியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக